Tuesday, 17 March 2015

பதினோராம் வகுப்பு சமசீர்க்கல்வி தமிழ் வினா விடைகள்


கடவுள் வாழ்த்து


அருள்பழுத்த பழச்சுவையே கரும்பே தேனே
ஆரமிர்தே என்கண்ணே அறிய வான
பொருளனைத்தும் தரும்பொருளே கருணை நீங்காப்
பூரணமாய் நின்றவொன்றே புனித வாழ்வே
கருதரிய கருத்ததனுட் கருத்தாய் மேவிக்
காலமும்தே சமும்வகுத்துக் கருவி ஆதி
விரிவினையும் கூட்டிஉயிர்த் திரளை ஆட்டும்
விழுப்பொருளே யான்சொலும்விண் ணப்பங் கேளே
- தாயுமானவர்

குறிப்பு:

  • தாயுமானவர் பாடல்கள் என்னும் தொகைநூலில் 1452 பாடல்கள் உள்ளன.
  • இந்நூல் “தமிழ் மொழியின் உபநிடதம்” எனப் போற்றப்படுகிறது.
  • இவர் வேதாரண்யம் என்னும் திருமறைக்காட்டில் கேடிலியப்ப பிள்ளைக்கும், கெசவல்லி அம்மைக்கும் மகனாகப் பிறந்தார்.
  • திருச்சியில் உள்ள தாயுமானவர் அருளால் பிறந்தமையால் இவருக்கு தாயுமானவர் எனப் பெயரிடப்பட்டது.
  • கேடிலியப்ப பிள்ளை திருச்சிராப்பள்ளியை ஆண்ட விசயரங்க சொக்கநாத நாயக்கர் என்ற அரசரிடம் கணக்கராகப் பணிபுரிந்து வந்தார்.
  • அவர் மறைவுக்குப் பின்னர்த் தாயுமானவர் அப்பணியை ஏற்றார்.
  • இவரின் மனைவி மட்டுவார்குழலி.
  • திருமூலர் மரபில் வந்த மௌனகுருவிடம் ஆசி பெற்றவர்.
  • இவர் முக்தி அடைந்த இடம் இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரம்.
  • காலம் பதினெட்டாம் நூற்றாண்டு.


சொற்பொருள்:

  • ஆரமிர்தே – அரிய அமிழ்தே
  • பூரணமாய் – முழுமையாய்
  • புனிதம் – தூய்மை
  • விழுப்பொருள் – மேலானப்பொருள்

இலக்கணக்குறிப்பு:

  • பழச்சுவை – ஆறாம் வேற்றுமைத் தொகை
  • தரும் பொருளே – செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம்
  • காலமும் தேசமும் – எண்ணும்மை
  • உயிர்த்திரள் – ஆறாம் வேற்றுமைத் தொகை
  • விழுப்பொருள் – உரிச்சொற்றொடர்

மொழி வாழ்த்து


வைய மீன்றதொன் மக்க ளுளத்தினைக்
கையி னாலுரை கால மிரிந்திடப்
பைய நாவைய சைத்த பழந்தமிழ்
ஐயை தாடலை கொண்டு பணிகுவாம்
- பள்ளியகரம் நீ.கந்தசாமிப் புலவர்

குறிப்பு:

  • பள்ளியகரம் நீ.கந்தசாமிப் புலவர் தஞ்சை மாவட்டம் பள்ளியகரத்தில் பிறந்தவர்.
  • பெற்றோர் = நீலமேகம் பிள்ளை, சௌந்தரவல்லி அம்மையார்.
  • இவர் ஒரு பன்மொழிப் புலவர்.
  • கரந்தைத் தமிழ் சங்கத்தில் பல ஆண்டுகள் அமைச்சராகத் விளங்கினார்.
  • தாமஸ்கிரே என்பார் எழுதிய ஆங்கிலக் கவிதை ஒன்றைத் தமிழில் செய்யுள் வடிவில் “இரங்கற்பா” என்னும் தலைப்பில் மொழி பெயர்த்தார்.


சொற்பொருள்:

  • வையம் – உலகம்
  • இரிந்திட – விலகிட
  • பைய – மெல்ல
  • தாள் – திருவடி
  • ஐயை – தாய்

இலக்கணக்குறிப்பு:

  • தொன்மக்கள் – பண்புத்தொகை
  • உள்ளம் – ஆகுபெயர்
  • உரைகாலம் – வினைத்தொகை
  • ஐயைதாள் – ஆறாம் வேற்றுமைத் தொகை
  • தாள் தலை – இரண்டாம் வேற்றுமைத்தொகை

நாட்டு வாழ்த்து


திருநி றைந்தனை தன்னிக ரொன்றிலை
தீது தீர்ந்தனை நீர்வளஞ் சார்ந்தனை
மருவு செய்களின் நற்பயன் மல்குவை
வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை
பெருகு மின்ப முடையை குறுநகை
பெற்றொ ளிர்ந்தனை பல்பணி பூண்டனை
இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை
எங்கள் தாய்நின் பதங்கள் இறைஞ்சுவாம்
- பாரதியார்

குறிப்புகள்:

  • வங்கமொழியில் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயர் எழுதிய “வந்தே மாதரம்” என்னும் பாடலின் மொழிப்பெயர்பே இப்பாடல்.
  • தேசியக்கவி எனப் போற்றப்படும் பாரதியார் எட்டயபுரத்தில் 11.12.1882இல் பிறந்தார்.
  • பாரதியார் மதுரையில் உள்ள சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகவும், பின்னர்ச் சென்னையில் இருந்து வெளிவந்த “சுதேசமித்திரன்” இதழின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார்.
  • மேலும் “சக்கரவர்த்தினி” என்ற பத்திரிகைக்கு ஆசிரியராகவும், “இந்தியா” என்ற வாரப்பத்திரிகைக்கு ஆசிரியராகவும் திகழ்ந்தார்.
  • இவர் கீதையை மொழிபெயர்த்தார்.
  • 11.09.1921 அன்று மறைந்தார்.

சொற்பொருள்:

  • திரு – செல்வம்
  • மருவு – பொருந்திய
  • செய் – வயல்
  • மல்குதல் – நிறைதல்
  • இருநிலம் – பெரிய பூவுலகு

இலக்கணக்குறிப்பு:

  • மருவு செய் – வினைத்தொகை
  • பெருகும் இன்பம் – செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்
  • நற்பயன் – பண்புத்தொகை

புறநானூறு


நூல் குறிப்பு:

  • புறம் + நான்கு + நூறு = புறநானூறு
  • இதனை புறப்பாட்டு, புறம் எனவும் வழங்குவர்.
  • இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன.
  • இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்.
  • இந்நூலின் சில பாடல்களை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

பரணர்:

  • இவர் வரலாற்றுக் குறிப்புகளை பாடல்களுள் பொதிந்து வைத்துப் பாடுவதில் வல்லவர்.
  • கபிலர் போல மிக்க புகழுடன் வாழ்ந்தவர்.
  • கபிலபரணர் என்னும் தொடரால் இது விளங்கும்.
  • இவர் பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்து பாடிக் கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவனிடம் உம்பற்காட்டு வாரியையும், அவன் மகன் குட்டுவன் சேரலையும் பரிசாகப் பெற்றவர்.

பேகன்:

  • பேகன் கடையெழு வள்ளல்களுள் ஒருவன்.
  • கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கியவன்.
  • மலைநாட்டை ஆண்டவன்.
  • இவனது ஊர் நல்லூர்.
  • இவனது குடி ஆவியர் குடி.

சொற்பொருள்:

  • அறுகுளம் – நீர் வற்றிய குளம்.
  • உகுத்தும் – பெய்தும்
  • உவர்நிலம் – களர்நிலம்
  • ஊட்டியும் – சாலப் பெய்தும்
  • கடாஅயானை – மதக்களிறு
  • மாரி – மழை

இலக்கணக்குறிப்பு:

  • அறுகுளம், அகல்வயல் – வினைத்தொகை
  • வரையா மரபு – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • கடாஅ – இசைநிறை அளபெடை

அகநானூறு


நூல் குறிப்பு:

  • அகம் + நான்கு + நூறு = அகநானூறு
  • இந்நூலில் நானூறு பாடல்கள் உள்ளன.
  • நூலில் உள்ள 3 பிரிவுகள் = களிற்றியானைநிரை, மணிமிடைபவளம், நித்திலக்கோவை
  • களிற்றியானைநிரையில் 120 பாடல்களும், மணிமிடைபவலத்தில் 180 பாடல்களும், நித்திலக்கோவையில் 100 பாடல்களும் உள்ளன.
  • நூலின் அடிஎல்லை = 13 – 31
  • இந்நூலினை “நெடுந்தொகை” என்றும் வழங்குவர்.
  • 1,3,5 என ஒற்றைப்படை எண்கள் அமைந்த பாடல்கள் = பாலைத்திணை பாடல்கள்
  • 2,8 என வருவன = குறிஞ்சித்திணை பாடல்கள்
  • 4,14 என வருவன = முல்லைதினைப் பாடல்கள்
  • 6,16 என வருவன = மருதத்திணை பாடல்கள்
  • 10,20 என வருவன = நெய்தல் திணை பாடல்கள்.
  • நூலை தொகுத்தவர் = மதுரை உப்பூரிகுடிகிழார் மகனார் உருதிரசன்மனார்
  • நூலை தொகுப்பித்தவர் = பாண்டியன் உக்கிரப்பெருவழுதி

சொற்பொருள்:

  • ஓங்குமலை – உயர்ந்த மலை
  • சிலம்பு – மலைச்சாரல்
  • வேங்கை பிடவு – மலைநிலத்தே வளரும் மரங்கள்
  • உகிர் – நகம்
  • உழுவை – ஆண்புலி
  • கவலை – கிளைவழி
  • சாஅய் – மெலிவுற்று

இலக்கணக்குறிப்பு:

  • ஓங்குமலை – வினைத்தொகை
  • அவிழாக் கோட்டுகிர் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • நிரம்பா நீளிடை – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • நீளிடை – வினைத்தொகை
  • உண்ணா உயக்கம் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • சாஅய் – இசைநிறைஅளபெடை
  • தொல்கவின் – பண்புத்தொகை
  • பிரிந்தோர் – வினையாலணையும் பெயர்.

ஐங்குறுநூறு


நூல் குறிப்பு:

  • ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு
  • அடி எல்லை = 3 முதல் 6
  • ஒவ்வொரு தினைக்கும் நூறு பாடல்கள் என மொத்தம் 500 பாடல்கள் உள்ளன.
  • மருதத்திணை பாடல்கள் பாடியவர் = ஓரம்போகி
  • நெய்தல் திணை பாடல்கள் பாடியவர் = அம்மூவன்
  • குறிஞ்சி திணை பாடல்கள் பாடியவர் = கபிலர்
  • பாலை திணை பாடல்கள் பாடியவர் = ஓதலாந்தை
  • முல்லைதிணை பாடல்கள் பாடியவர் = பேயன்
  • இந்நூலை தொகுத்தவர் = புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.
  • தொகுப்பித்தவர் = சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
  • கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்.

கபிலர்:

  • இவர், “புலனழுக் கற்ற அந்தணாளன்” எனப் புகழப்பட்டவர்.
  • வள்ளல் பாரியின் அவைகளப் புலவர்.
  • குறிஞ்சிப்பாட்டு, ஐங்குறு நூற்றில் குருஞ்சித்தினை பாடகள் நூறு, பதிற்றுபத்தில் ஏழாம் பத்து, கலித்தொகையில் குறுஞ்சி கலியில் உள்ள 29 பாடல்கள் முதலியன இவர் பாடியவை.

சொற்பொருள்:

  • தோகை – மயில்
  • வதுவை – திருமணம்


இலக்கணக்குறிப்பு:

  • இருந்ததோகை – பெயரெச்சம்
  • மருள் – உவமவுருபு
  • இழையணி – வினைத்தொகை
  • நாட – அண்மைவிளி
  • நுந்தை – நும் தந்தை என்பதன் மரூஉ
  • வாழியர் – வியங்கோள் வினைமுற்று
  • நன்மனை – பண்புத்தொகை

திருக்குறள்


நூல்குறிப்பு:

  • “தமிழ் மாதின் இனிய உயிர்நிலை” என்று உலகோரால் பாராட்டப்படும் நூல் திருக்குறள்.
  • திருக்குறள் “தமிழர் திருமறை” ஆகும்.
  • திருக்குறள் என்பது அடையடுத்த கருவியாகு பெயர்.
  • திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் மூன்று பெரும் பிரிவுகளை கொண்டது.
  • அறத்துப்பால் முப்பத்தி எட்டு அதிகாரங்களை உடையது. அது பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்னும் நான்கு இயல்களை கொண்டுள்ளது.
  • பொருட்பால் எழுபது அதிகாரங்களையும், அரசியல், அங்கவியல், ஒழிபியல் என்னும் மூன்று இயல்களையும் கொண்டுள்ளது.
  • காமத்துப்பால் 25 அதிகாரங்களையும், களவியல், கற்பியல் என்ற இரன்டு இயல்களையும் உடையது.


சொற்பொருள்:

அமரருள் – தேவர் உலகம் உய்க்கும் – செலுத்தும்
ஆரிருள் – நரகம் காக்க – கடைப்பிடித்து ஒழுகுக
செறிவு – அடக்கம் சீர்மை – விழுப்பம், சிறப்பு
தோற்றம் – உயர்வு மாண – மிகவும்
பணிதல் – அடங்குதல் ஒருமை – ஒருபிறப்பு
எழுமை – ஏழு பிறப்பு ஏமாப்பு – பாதுகாப்பு
சோகாப்பர் – துன்புறுவர் வடு – தழும்பு
கதம் – சினம் செவ்வி – தகுந்த காலம்
தாளாற்றி – மிக்க முயற்சி செய்து தந்த – ஈட்டிய
வேளாண்மை – உதவி புத்தேள் உலகம் – தேவர் உலகம்
திரு – செல்வம் அற்று – போலும்
இடம் – செல்வம் ஒல்கார் – தளரார்
கடன் – முறைமை கேடு – பொருள்கேடு
கூகை – கோட்டான் இகல் – பகை
தகர் – ஆட்டுக்கிடாய் பொள்ளென – உடனடியாக
செறுநர் – பகைவர் சுமக்க – பணிக
மாற்றான் – பகைவர் பீலி – மயில்தோகை
சாகாடு – வண்டி இறும் – முரியும்

இலக்கணக்குறிப்பு:

அடங்காமை – எதிர்மறைத்தொழிற்பெயர் ஆரிருள் – பண்புத்தொகை
காக்க – வியங்கோள் வினைமுற்று அதனினூஉங்கு – இன்னிசை அளபெடை
அடங்கியான் – வினையாலணையும் பெயர் மலையினும் – உயர்வு சிறப்பும்மை
எல்லார்க்கும் – முற்றும்மை பணிதல் – தொழிற்பெயர்
உடைத்து – குறிப்பு வினைமுற்று எழுமை, ஐந்து – ஆகுபெயர்
காவாக்கால் – எதிர்மறை வினையெச்சம் நன்று – பண்புப்பெயர்
அடங்கல் – தொழிற்பெயர் ஆற்றுவான் – வினையாலணையும் பெயர்
உலகு – இடவாகுபெயர் தந்தபொருள் – பெயரெச்சம்
பொருட்டு – குறிப்பு வினைமுற்று பெறல் – தொழிற்பெயர்
அறிவான் – வினையாலணையும் பெயர் வாழ்வான் – வினையாலணையும் பெயர்
மற்றையான் – குறிப்பு வினையாலணையும் பெயர் பேரறிவு – பண்புத்தொகை
தப்பாமரம் – ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் பெருந்தகை – பண்புத்தொகை
கடனறிகாட்சி – வினைத்தொகை ஒல்கார் – வினையாலணையும் பெயர்
இல்பருவம் – பண்புத்தொகை ஆதல் – தொழிற்பெயர்
கேடு, கோள் – முதனிலை திரிந்த தொழிற்பெயர் பகல்வெல்லும் – ஏழாம் வேற்றுமைத்தொகை
இகல்வெல்லும் – இரண்டாம் வேற்றுமைத்தொகை ஒழுகல் – தொழிற்பெயர்
அருவினை – பண்புத்தொகை செயின் – வினையெச்சம்
கருதுபவர் – வினையாலணையும் பெயர் ஒடுக்கம் – தொழிற்பெயர்
பொருதகர் – வினைத்தொகை ஒள்ளியவர் – வினையாலணையும் பெயர்
சுமக்க – வியங்கோள் வினைமுற்று ஒக்க – வியங்கோள் வினைமுற்று
வினைவலி – ஆறாம் வேற்றுமைத்தொகை செயல் – வியங்கோள் வினைமுற்று
செல்வார் – வினையாலணையும் பெயர் அறியார் – எதிர்மறை வினையாலணையும் பெயர்
ஒழுகான் – முற்றெச்சம் பெய்சாகாடு – வினைத்தொகை
சாலமிகுந்து – உரிச்சொற்றொடர் கொம்பர் – ஈற்றுப்போலி
ஈக – வியங்கோள் வினைமுற்று ஆகாறு – வினைத்தொகை
கேடு – முதனிலை திரிந்த தொழிற்பெயர் வாழ்க்கை – தொழிற்பெயர்

சீவக சிந்தாமணி


நூல் குறிப்பு;

  • சிந்தாமணி என்பதற்கு ஒளிகுன்றாத மணி என்பது பொருள்.
  • இக்காப்பியத்தை இயற்றியவர் திருத்தக்கதேவர்.
  • இவர் சோழ நாட்டினர். சமணத் துறவி.
  • இவர் நரி விருத்தம் என்ற நூலையும் படைத்துள்ளார்.
  • சீவக சிந்தாமணிக்கு “மண நூல்” என்ற பெயரும் உண்டு.
  • இது நாமகள் இலம்பகம் முதலாக முத்தி இலம்பகம் ஈறாகப் 13 இலம்பகம் கொண்டுள்ளது.
  • இந்நூல் விருத்தம் என்ற பாவினால் அமைந்த முதல் நூல்.
  • இந்நூலிற்கு உரை கண்டவர் = உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்.
  • சீவகன் வரலாற்றை கூறுவதால் இந்நூல் சீவக சிந்தாமணி எனப் பெயர் வழங்கப்படுகிறது.

காந்தருவதத்தையார் இலம்பகம்:

  • வெள்ளி மலையின் வேந்தன் கலுழவேகன்.
  • அவன் மகள் காந்தருவதத்தை.
  • காந்தருவதத்தையின் தோழி வீணாபதி
  • யாழ்போர் நடந்த இடம் இராசமாபுரம்
  • காந்தருவதத்தை சீதத்தன் என்னும் வணிகனிடம் ஒப்படைக்கப்பட்டாள்.
  • சீவகனின் நண்பன் நபுலன்
  • போட்டியில் சீவகன் காந்தருவதத்தையை வென்று அவளை மணம் முடித்தான்.

சொற்பொருள்:

சிலை – வில் பொழில் – சோலை
குரங்கின – வளைந்தன பறவை – கின்னரமிதுனம் என்னும் பறவை
கருங்கொடி – கரிய ஒழுங்கு மிடறு – கழுத்து
கொடி – ஒழுங்கு கடி – விளக்கம்
எயிரு – பல் விம்மாது – புடைக்காது
எரிமலர் – முருக்கமலர் உளர – தடவ
இவுளி – குதிரை கால் – காற்று
நுனை – கூர்மை கடம் – காடு
பிணை – பெண்மான் மாழ்கி – மயங்கி
இழுக்கி – தப்பி எழினி – உறை
மொய்ம்பு – வலிமை மடங்கல் – சிங்கம்
கணிகை – பொதுமகள் கொல்லை – முல்லைநிலம்
குரங்கி – வளைந்து தூமம் – அகிற்புகை
நிலமடந்தை – பெற்ற தாய் இருவிசும்பு – செவிலித்தாய்
கைத்தாய் – செவிலித்தாய் ஓதி – சொல்லி
புரி – முறுக்கு பத்தர் – யாழின் ஓர் உறுப்பு

இலக்கணக்குறிப்பு:

எழீஇ – சொல்லிசை அளபெடை சிறுநுதல் – அன்மொழித்தொகை
பாவை – உவமை ஆகுபெயர் சிலைத் தொழில் – ஆறாம் வேற்றுமைத்தொகை
கருங்கொடி – பண்புத்தொகை இருங்கடல் – பண்புத்தொகை
கடிமிடறு – உரிச்சொற்றொடர் பவளச்செவ்வாய் – உவமைத்தொகை
விரிமலர் – வினைத்தொகை கோதை – உவமை ஆகுபெயர்
எரிமலர் – உவமத்தொகை செவ்வாய் – அன்மொழித்தொகை
ஒப்ப – உவமஉருபு இன்னரம்பு – பண்புத்தொகை
விடுகணை – வினைத்தொகை திண்டேர் – பண்புத்தொகை
வடிநுனை – வினைத்தொகை அடுதிரை – வினைத்தொகை
கழித்தவேல் – பெயரெச்சம் அன்ன – உவமஉருபு
நீக்கி – வினையெச்சம் நெடுங்கண் – பண்புத்தொகை
தடங்கண் – உரிச்சொற்றொடர் சுரந்து, முதிர்ந்து – வினையெச்சம்
நின்றாள் – வினையாலணையும் பெயர் போக, நடக்க – வியங்கோள் வினைமுற்று
கமழ் ஓதி – அன்மொழித்தொகை காளை – உவம ஆகுபெயர்

சீறாப்புராணம்


நூல் குறிப்பு:

  • சீறா என்பதற்கு வாழ்க்கை என்பது பொருள், புராணம் என்பதற்கு வரலாறு என்பது பொருள்.
  • சீறாப்புராணம் என்பதற்கு நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு என்று பொருள்.
  • இந்நூல் விலாதத்துக் காண்டம்(பிறப்பியற் காண்டம்), நுபுவ் வத்துக் காண்டம்(செம்பொருட் காண்டம்), ஹிஜ்ரத்துக் காண்டம்(செலவியற் காண்டம்) என்ற மூன்று பெரும் பிரிவுகளை உடையது.
  • இந்நூலில் 5027 விருதப்பாக்கள் உள்ளன.
  • பெருமானார் பிறந்ததும் இளமை நிகழ்வுகளும் திருமணமும் விலாதத்துக் காண்டத்தில் கூறப்பட்டுள்ளது.
  • வானவர் ஜிப்றாயில் மூலம் திருமுறை நபிகள் பெருமானார்க்கு அருளப்பட்டதும் அதன்பின் மக்கத்தில் நடந்தவையும் நுபுவ்வத்துக் காண்டத்தில் பேசப்படுகின்றன.
  • மக்கத்தை விட்டுப் பெருமானார் மதீனம் சென்றதும் தீன் நிலை நிறுத்தற்காக நிகழ்ந்த போர்களும் பிறவும் ஹிஜ்றத்துக் காண்டத்தில் வரையப்பட்டுள்ளன.
  • சீறாப்புரானத்தில் நபிகளின் வாழ்வு முற்றிலுமாகப் பாடி நிறைவு செய்யப்படவில்லை.
  • பனூ அகமது மரைக்காயர் என்பவர் தாம் பெருமானாரின் தூய திருவாழ்வு முழுமையும் பாடி முடித்தார். அது “சின்ன சீறா” என வழங்கப்படுகிறது.

ஆசிரியர் குறிப்பு:

  • உமறுப்புலவர் எட்டயபுரம் கடிகை முத்துப் புலவரின் மாணவர்.
  • செய்கு அப்துல் காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின் வண்ணமே உமறுப்புலவர் சீறாப்புராணத்தை எழுதினார்.
  • நூல் முடிவுறும் முன்னரே சீதக்காதி மறைந்தார்.
  • பின் அபுல் காசிம் என்ற வள்ளலின் உதவியால் சீறாப்புராணம் நிறைவு பெற்றது.
  • உமறுப்புலவர் முதுமொழிமாலை என்ற எண்பது பாக்களால் ஆன நூலையும் படைத்துள்ளார்.

விடமீட்ட படலம்:

  • நபிகளின் நண்பர் = அபூபக்கர்
  • இருவரும் தங்கி இருந்த இடம், தௌர் மலைக்குகை.
  • குகையில் இருந்த ஒரு பொந்தின் வழியாக வந்த பாம்பு அபூபக்கரின் உள்ளங்காலை தீண்டியது.
  • அபூபக்கர் மயக்கம் அடையும் நிலையில் நபிகள் உறக்கம் களைந்து எழுந்து நடந்ததை அறிந்து கொண்டார்.
  • நபிகள் தனது எச்சில் தடவி அபூபக்கரை மீட்டார்.

சொற்பொருள்:

கான் – காடு நகம் – மலை
சிரம் – தலை முழை - குகை
வளை – புற்று பாந்தள் – பாம்பு
பிடவை – துணி வெருவி – அஞ்சி
பொறி – புள்ளிகள் உரகம், பணி – பாம்பு
பருவரல் – துன்பம் நித்திரை – தூக்கம்
கடி – மணம் காந்தி – பேரொளி
நறை – தேன் பரல் – கல்
கெந்தம் – பற்கள் வேகம் – சினம்
சென்னி – தலை மரைமலர் – தாமரை மலர்
கோடிகம் – ஆடை கால் – காற்று
கான்று – உமிழ்ந்து பன்னகம் – பாம்பு
வரை – மலை புடை – வளை, பொந்து
முரணி – மாறுபட்டு புதியன் – இறைவன்

இலக்கணகுறிப்பு:

செழுந்துயில் – பண்புத்தொகை இகலவர் – வினையாலணையும் பெயர்
மலைமுழை - ஏழாம் வேற்றுமைத்தொகை வெருவி, கிழித்து – வினையெச்சம்
போர்த்த பிடவை – பெயரெச்சம் இலை – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்
அறிகிலார் – எதிர்மறை வினையாலணையும் பெயர் மதிமுகம் – உவமத்தொகை
கடிநறை – உரிச்சொற்றொடர் மலர்ந்தாள் – உவமைத்தொகை
மென்மலர் – பண்புத்தொகை வல்லுடல் – பண்புத்தொகை
படுவிடம் – வினைத்தொகை பரந்து, தாக்கி – வினையெச்சம்
என்ன – உவமஉருபு மதி – உவம ஆகுபெயர்
அருமறை – பண்புத்தொகை நின்றோன் – வினையாலணையும் பெயர்
நினைத்தவர் - வினையாலணையும் பெயர்


வெவ்விடம் – பண்புத்தொகை

மனோன்மணீயம்


நூல் குறிப்பு;

  • நாடகக் காப்பியங்களால் சிறப்புப் பெற்று விளங்கும் வடமொழிக்கு ஈடாக நடிப்புப் செவ்வியும் இலக்கியச் செவ்வியும் ஒருங்கே அமையப் பெற்றது இந்நாடகம்.
  • இந்நாடகம் லிட்டன் பிரபு என்பார் ஆங்கிலத்தில் எழுதிய “இரகசிய வழி” என்ற நூலைத் தழுவி அமைந்தது.
  • எனினும் இது வழிநூல் என்னாது முதல் நூல் எனவே கொள்ளப்பெறும் சீர்மையுடையது.
  • அங்கங்களையும் காட்சிகளையும் அமைத்து எழுதுவது நாடக நன்னூல் மரபு.
  • இந்நாடகம் 5 அங்கங்களையும் 20 காட்சிகளையும் கொண்டு விளங்குகிறது.
  • இடையே சிவகாமி சரிதம் என்னும் துணைக் கதை ஒன்றும் இடம் பெற்றுள்ளது.

ஆசிரியர் குறிப்பு:



  • பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை, கேரள மாநிலம் ஆலப்புழையில் பிறந்தவர்.
  • பெற்றோர் = பெருமாள் பிள்ளை, மாடத்தி அம்மையார்.
  • இவர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
  • இவரின் ஞானாசிரியர் = கோடாக நல்லூர் சுந்தர சுவாமிகள்
  • இவர் இயற்றிய நூல்கள் = நூல் தொகை விளக்கம், திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி, திருவிதாங்கூர்ப் பண்டை மன்னர் கால ஆராய்ச்சி.
  • அந்நாளைய சென்னை மாகாண அரசு இவருக்கு ராவ்பகதூர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
  • இவரது நீராருங்கடலுடுத்த என்ற தமிழ் வாழ்த்துப்பாடலே தமிழக அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்கப்பட்டுள்ளது.

கதை:

  • மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ஜீவகன்.
  • அமைச்சர் குடிலன் வஞ்சகம் மிக்கவன்.
  • ஜீவகன் மதுரையை விட்டு திருநெல்வேலியில் கோட்டை அமைத்து அங்கு தங்கினான்.
  • சுந்தர முனிவர் கோட்டையில் தனக்கு ஒரு அறை பெற்று அதில் சுரங்க வழியை அமைத்தார்.
  • ஜீவகனின் மகள் மனோன்மணி. இவள் சேர நாட்டு அரசன் புருடோத்தமனை கனவில் கண்டு காதல் கொள்கிறாள்.
  • அமைச்சன் குடிலனின் மகன் பலதேவனை, சேர அரசனிடம் தூது அனுப்பினான் மன்னன்.
  • பலதேவனின் முறையற்ற பேச்சால் சினம் கொண்ட சேர அரசன் பாண்டிய நாடு மீது போர் தொடுத்தான்.


சொற்பொருள்:

  • செந்தழல் – வேள்வியில் மூட்டுகிற நெருப்பு
  • வானோர் – தேவர்கள்
  • இந்தனம் – விறகு
  • உகம் – யுகம்
  • திருந்தலீர் – பகைவர்கள்
  • செயமாது – வெற்றித் திருமகள்(விசயலட்சுமி)
  • காயம் – உடம்பு

இலக்கணக்குறிப்பு:

  • செந்தழல் – பண்புத்தொகை
  • ஆகுக – வியங்கோள் வினைமுற்று
  • போர்க்குறி – ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • கனங்கணம் – அடுக்குத்தொடர்

குயில் பாட்டு


ஆசிரியர் குறிப்பு;

  • பாரதியார் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயருக்கும், இலக்குமி அம்மையாருக்கும் மகனாகத் தோன்றினார்.
  • தேசியக்கவி, மகாகவி எனப் போற்றப்படுபவர்.
  • இந்தியா, விஜயா என்னும் இதழ்களை வெளியிட்டார்.
  • சுதேசமித்திரன் என்ற இதழின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார்.

சொற்பொருள்:

  • வாரி – கடல்
  • கோற்றொடியார் – பெண்கள்(உலக்கையைத் தொடியணிந்த கையில் கொண்ட பெண்கள்)
  • குக்குவென – நெல்லடிக்கும் பொது பெண்கள் ஏற்படுத்தும் ஒலிக்குறிப்பு
  • பண்ணை – வயல்வெளி
  • வேய் – மூங்கில்

இலக்கணக்குறிப்பு:

  • கானப்பறவை – ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • நீரோசை – ஆறாம் வேற்றுமைத் தொகை
  • பெருங்கடல் – பண்புத்தொகை
  • பழகு பாட்டு – வினைத்தொகை

அழகர் கிள்ளைவிடு தூது


தூது:

  • தூது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  • தலைவன் ஒருவனைக் கண்டு காதல் கொண்ட தலைவி ஒருத்தி தன் காதலையும் பிரிவாற்றாமையும் வெளிப்படுத்த விரும்பித் தலைவன்பால் தூது அனுப்புதல்.
  • தூதின் இலக்கணம் கூறும் நூல் = இலக்கண விளக்க நூற்பா
  • தூது வெண்டளை விரவிய கலிவென்பாவால் பாடப்படும்.
  • தூதாக செல்பவை = அன்னம், மயில், கிளி, குயில், வண்டு, நெஞ்சம், முகில், தென்றல், மான், தமிழ்.

அழகர் கிள்ளைவிடு தூது:

  • திருமாலிருஞ்சோலை மலையில் கோவில் கொண்டிருக்கும் அழகரிடத்து பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை என்ற புலவர் கிளியைத் தூது விடுவதாக அமைத்துப் பாடியிருப்பது அழகர் கிள்ளை விடு தூது ஆகும்.
  • இந்நூல் 250 ஆண்டுகளுக்கு முந்தைய நூலாகும்.
  • இந்நூல் காப்பு வெண்பா ஒன்றையும் 239 கண்ணிகளையும் உடையது.
  • பாட்டின் இரண்டு அடி கண்ணி எனப்படும்.

ஆசிரியர் குறிப்பு:

  • சொக்கநாதப் பிள்ளை மரபினர் பலபட்டடைக்கணக்கு என்னும் ஒருவகைப் பணியைச் செய்து வந்தனர்.
  • இவர் தந்தையார் பெயர் சொக்கலிங்கம் பிள்ளை.
  • நூல்கள் = மதுரை மும்மணிக்கோவை, தென்றல் விடு தூது போன்றவை.

சொற்பொருள்:

அரி – சிங்கம் அரன் – சிவன்
அவுணன் – இரணியன் காயம் – உடம்பு
சேனை – சைனியம் பண்ணும் தொழில் – காத்தல் தொழில்
படி – உலகம் பாதவம் – மருத மரம்
பெண் – அகலிகை பாரம் – பளு
நாரி – சீதாப்பிராட்டி வேலை – கடல்

இலக்கணக்குறிப்பு:

  • வன்காயம் – பண்புத்தொகை
  • அரைத்திடும் சேனை – எதிர்காலப் பெயரெச்சம்
  • மலர்க்கால் – உவமைத்தொகை
  • வன்கானகம் – பண்புத்தொகை

கலிங்கத்துப்பரணி


பரணி:

  • பரணி என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  • போர் முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரனைப் பாடுவதைப் பரணி என்றனர்.
ஆணை ஆயிரம் அமரிடை வென்ற
மாண வனுக்கு வகுப்பது பரணி
--- இலக்கண விளக்கப் பாட்டியல்
  • பரணி என்ற நாள்மீன் காளியையும் யமனையும் தன் தெய்வமாகப் பெற்றது என்றும் அந்நாள்மீனால் வந்த பெயரே நூலுக்கும் பெயராக வந்தது என்றார் உ.வே.சா
  • தோற்றவர் பெயரில் பரணி நூல் வழங்கப்பெறும்.

கலிங்கத்துப்பரணி:

  • தமிழின் முதல் பரணி நூல் இது.
  • இந்நூல் 509 தாழிசைகள் கொண்டது.
  • இந்நூலை ஒட்டக்கூத்தர், “ தென்தமிழ் தெய்வப்பரணி” என்று சிறப்பித்துள்ளார்.
  • இன்றைய ஒரிசா மாநிலம் பண்டு கலிங்கம் என்று வழங்கப்பட்டது.
  • அந்நாட்டின் மீது போர் தொடுக்க முதல் குலோத்துங்கச்சோழன் தன் படைத்தளபதி கருணாகரத் தொண்டைமான் என்பவரை அனுப்பி வெற்றிபெற்றதை இந்நூல் கூறுகிறது.

செயங்கொண்டார்:

  • கலிங்கத்துப்பரணி பாடியவர் செயங்கொண்டார்.
  • இவர் முதல் குலோத்துங்கசோழனின் அவைப்புலவர்.
  • இவரின் காலம் 11ஆம் நூற்றாண்டு அல்லது 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதி.
  • பலபட்டடைச் சொக்கநாதர் இவரைப் “பரணிக்கோர் செயங்கொண்டார்” எனப் புகழ்ந்துள்ளார்.

சொற்பொருள்:

வரை – மலை சேர – முற்றும்
மாசை – பழிப்பை எற்றி – உண்டாக்கி
அரை – இடுப்பு கலிங்கம் – ஆடை
அமணர் – சமணர் முந்நூல் – பூணூல்
சிலை – வில் அரிதனை – பகை
மடி – இறந்த சயத்தம்பம் – வெற்றித்தூண்
கடகரி – மத யானை வயமா – குதிரை
அபயன் – முதல் குலோத்துங்கச்சோழன் வண்டையார் கோன் – கருணாகரத் தொண்டைமான்

இலக்கணக்குறிப்பு:


முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்


பிள்ளைத்தமிழ்:

  • கடவுளரையோ அரசரையோ பிறரையோ குழந்தையாகப் பாவித்து அவர் தம் குழந்தைப் பருவத்தைப் பத்துப் பருவங்களாகப் பகுத்துக் கொண்டு பருவத்துக்குப் பத்து ஆசிரிய விருத்தம் அமையப் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும்.
  • பிள்ளைத்தமிழ் 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  • இது ஆண்பால் பிள்ளைத்தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ் என இரு வகைப்படும்.
  • ஆண் பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் = காப்பு, செங்கீரை, தாள், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்.
  • பெண்பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் = காப்பு, செங்கீரை, தாள், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மானை, நீராடல், ஊசல்.

குமரகுருபரர்:

  • முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் பாடியவர் குமரகுருபரர்.
  • தாமிரபரணி நதிக்கரையில் உள்ள திருவைகுன்டத்தில் பிறந்தார்.
  • பெற்றோர் = சன்முகசிகாமணி கவிராயர், சிவகாமசுந்தரி.
  • பிறந்தது முதல் ஐந்து ஆண்டுகள் பேசாமல் இருந்தார்.
  • திருச்செந்தூர் முருகப்பெருமானின் அருளால் பேசும் திறம் பெற்றார்.
  • நூல்கள் = கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், நீதிநெறிவிளக்கம், காசிக் கலம்பகம் முதலான பல நூல்கள்.

சொற்பொருள்:

மாசை எற்றி – இரண்டாம் வேற்றுமை விரி வன்தூறு – பண்புத்தொகை
போந்து – வினையெச்சம் களம் கண்டோம் – இரண்டாம் வேற்றுமைத்தொகை
எரிந்து, நாட்டி – வினையெச்சம் பறித்தமயிர் – பெயரெச்சம்


புலராமே – வறண்டு விடாமல் கம்முதல் – குரல் தேய்ந்து மங்குதல்
விரல் – பெருவிரல் சிவவாமே – சிவக்காமல்
அஞ்சனம் – கண்மை கலுழ்தல் – அழுதல்
தாள் – கால் வயித்தியநாதபுரி – புள்ளிருக்குவேளூர்

இலக்கணக்குறிப்பு:

மெல்லிதழ் – பண்புத்தொகை மென்குரல் – பண்புத்தொகை
நுண்டுளி – பண்புத்தொகை கண்மலர் – உருவகம்
பொழி திருமுகம் – வினைத்தொகை ஆடுக – வியங்கோள் வினைமுற்று

பெத்தலகேம் குறவஞ்சி


குறவஞ்சி:

  • குறவஞ்சி என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  • தொல்காப்பியர் கூறும் வனப்பு என்பதுள் குறவஞ்சி அடங்கும்.
  • உலாப் போகும் மன்னனையோ தெய்வத்தையோ கண்டு தலைவி காதல் கொண்டு, அதனால் மனம் நலிவதும், வீதியிலே குறத்தி வருகையும், தலைவி அவளை அழைத்து குறி கேட்பதும், குறத்தி தலைவியின் கையைப் பார்த்து கைக்குறி, முகக்குறி, பல்லிசொல் போன்றவற்றை கூறுவது போல் அமையப்பெறும்.
  • குறவஞ்சி நாடக வடிவில் அமையப்பெறும்.

நூல் குறிப்பு:

  • பெத்தலகேம் குறவஞ்சியில் உலாவரும் மன்னர் இயேசுவாகவும் தேவமோகினியாக தலைவி சீயோன் மகளாகவும், குறவஞ்சி விசுவாசமாகவும் குறி கூறுதல் தீர்க்க தரிசனமாகவும். சிங்கன் குருவாகவும், நூவன் உபதேசியாகவும், அவர்கள் பிடிக்கும் பறவைகளாக மக்களும் அதற்குப் பயன்படும் வலையாக இறைவாக்கு என்ற நற்செய்தியும் உருவாக்கப்பட்டது.
  • இந்நூல் முற்றுருவகமாகத் திகழ்வது தனிச்சிறப்பு ஆகும்.

ஆசிரியர் குறிப்பு:

  • இந்நூலின் ஆசிரியர் தஞ்சை வேதநாயக சாத்திரியார்.
  • பெற்றோர் = தேவசகாயம், ஞானப்பூ அம்மையார்
  • ஊர் = திருநெல்வேலி
  • தஞ்சையில் மதபோதராக விளங்கிய சுவார்ட்ஸ் பாதிரியார் இவரை தம் மாணவராக ஏற்றுக்கொண்டார்.
  • தஞ்சையை ஆண்ட சரபோசி மன்னரின் உற்ற தோழராக விளங்கினார்.
  • நூல்கள் = ஞானத்தச்சன், ஞானவுலா, ஆரணாதிந்தம்.

சொற்பொருள்:

  • ஏகன் – இறைவன்
  • தற்பரன் – இறைவன்

இலக்கணக்குறிப்பு;

  • அருந்தவம் – பண்புத்தொகை
  • தானதர்மம் – உம்மைத்தொகை
  • பேய்க்கணங்கள் – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • அமைந்த, கொடுத்த – பெயரெச்சம்

மறுமலர்ச்சிப் பாடல்கள் - எந்நாளோ?


ஆசிரியர் குறிப்பு:

  • “பண்டைநலம் புதுப்புலமை பழம்பெருமை அத்தனையும் படைப்பாய் இந்நாள்! தொண்டு செய்வாய் தமிழுக்குத் துறைதோறுந் துடித்தெழுந்தே” என்பார் பாவேந்தர்.
  • பெற்றோர் = கனகசபை, இலக்குமியம்மாள்
  • ஊர் = புதுச்சேரி
  • தமிழ்நாட்டு இரசூல் கம்சதோவ் எனப் பாராட்டப்பட்டவர்.
  • நூல்கள் = குடும்பவிளக்கு, பாண்டியன் பரிசு, இருண்டவீடு, தமிழச்சியின் கத்தி, சேரதாண்டவம், பிசிராந்தையார், அழகின் சிரிப்பு, குறிஞ்சித்திட்டு போன்ற பல.
  • “வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே” என்ற அவரின் தமிழ் வாழ்த்துப் பாடல் புதுவை அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தாக பாடப்பட்டு வருகிறது.
  • குயில் என்ற இலக்கிய இதழை நடத்தினார்.
  • “புதுவைக் குயில்” என்றும் இவரை அழைப்பர்.

சொற்பொருள்:

  • உன்னதம் – உயர்வு
  • இமமலை – இமயமலை
  • கீர்த்தி – புகழ்
  • பண் – பாடல்

இலக்கணக்குறிப்பு:

  • அருந்தமிழ் - பண்புத்தொகை
  • புதுக்குநாள் – வினைத்தொகை
  • பகர்வார் – வினையாலணையும் பெயர்
  • தண்கடல் – பண்புத்தொகை

பூக்கட்டும் புதுமை


முடியரசன்:

  • பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் மூத்தவர் இவர்.
  • ஊர் = மதுரை
  • பெற்றோர் = சுப்புராயலு, சீதாலட்சுமி
  • இயற்பெயர் = துரைராசு
  • தந்தை பெரியாரிடமும், அறிஞர் அண்ணாவிடமும் நெருங்கிப் பழகியவர்.
  • சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்.
  • தமது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்றே உரைத்து, அவ்வாறே நிறைவேறச் செய்தவர்.
  • காரைக்குடி மீனாட்சி சுந்தரம் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றினார்.
  • நூல்கள் = பூங்கொடி, காவியப்பாவை.
  • பூங்கொடி என்னும் காவியம் தமிழக அரசின் பரிசை பெற்றது.
  • பறம்பு மலையில் நடந்த விழாவில் கவியரசு என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.

சொற்பொருள்:

  • ஈர்க்கின்ற – கவர்கின்ற
  • புலம் – அறிவு
  • புல்லடிமை – இழிவைச் சேர்க்கும் அடிமைத்தனம்

இலக்கணக்குறிப்பு:

  • பூக்கின்ற, ஈர்க்கின்ற – பெயரெச்சம்
  • செங்கதிர் – பண்புத்தொகை
  • புல்லடிமை – பண்புத்தொகை
  • காகிதப்பூ – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

விடுதலை விளைத்த உண்மை


கண்ணதாசன்;

  • “மாற்றம் எனது மானிடத் தத்துவம்” எனப் பாடியவர்.
  • பிறந்த ஊர் = சிறுகூடல்பட்டி
  • தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர்.
  • பெற்றோர் = சாத்தப்பன், விசாலாட்சி
  • இயற்பெயர் = முத்தையா
  • இதழ்கள் = தென்றல், தென்றல்திரை, சண்டமாருதம், முல்லை, கண்ணதாசன்

சொற்பொருள்:

  • தட்டின்றி – குறையின்றி
  • மூவாத – மூப்படையாத
  • மீன் – விண்மீன்
  • தளை – விலங்கு
  • வதிபவர் – வாழ்பவர்
  • மிடிமை – வறுமை

தளை


சிற்பி பாலசுப்பிரமணியம்:

  • இவரின் ஊர் = கோவை மாவட்டம் பொள்ளாச்சி
  • பெற்றோர் = பொன்னுசாமி, கண்டியம்மாள்
  • கருத்தோவியங்களை வடிவமைக்கும் சொல்லேருழவர்
  • பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் தலைவராகப் பணியாற்றியவர்.
  • கவிதை நூல்கள் = சிரித்த முத்துக்கள், நிலவுப்பூ, ஒளிப்பறவை, சூரிய நிழல், ஆதிரை.
  • உரைநடை நூல்கள் = இலக்கியச் சிந்தனை, மலையாளக் கவிதை, அலையும் சுவடும், ஒரு கிராமத்து நதி.
  • “ஒரு கிராமத்து நதி” என்னும் நூலுக்குச் சாகித்திய அகாதமியின் பரிசு பெற்றார்.
  • தமிழக அரசின் பாவேந்தர் பரிசு, தஞ்சைப் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ஆங்கில இலக்கிய நூல்பரிசு பெற்றுள்ளார்.

கண்


நா.காமராசன்:

  • பிறந்தது = மதுரை மாவட்டம் போடி-மீனாட்சிபுரம் கிராமம்.
  • பெற்றோ = நாச்சிமுத்து, இலட்சுமி அம்மாள்.
  • மறுமலர்ச்சி யுகந்தின் கவிஞராக திகழ்ந்தவர்.
  • கிராமிய சந்தங்களுடன் புதுப்பார்வை திகழப் படிமக் கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளார்.
  • இவரின் “கருப்பு மலர்கள்” என்னும் தொகுப்பு நூல், கவிதை உலகில் ஒரு திருப்பத்தை உருவாக்கியது.
  • படைப்புகள் = சூரியகாந்தி, சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள், தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும்.

இலக்கணக்குறிப்பு:

  • பகல்பூக்கள் – ஏழாம் வேற்றுமைத்தொகை
  • புருவக்கொடி – உருவகம்
  • மனப்பறவை – உருவகம்

தண்ணீர் வங்கிகள்


ந.கருணாநிதி:

  • கவிஞர் ந.கருணாநிதி 28.03.1939இல் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிறந்தவர்.
  • பெற்றோர் = நடேசன், சிவகாமியம்மாள்
  • அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்.
  • பூவிருந்தவல்லி அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
  • இவர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியுள்ளார்.
  • இவரின் கவிதை தொகுப்பு = நமக்குள்ளே மலரட்டும் நல்லிணக்கம்

இலக்கணக்குறிப்பு:

  • இணையிலாப் பசுமை – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • இலா – இடைக்குறை
  • வான்மழை – ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை

வழிபாட்டுப் பாடல்கள் - சிவபெருமான்


திருநாவுக்கரசர்:

  • சைவத் திருமுறைகளுள் முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் ஆகும்.
  • அவற்றுள் 4,5,6 ஆகிய திருமுறைகள் திருநாவுக்கரசர் பாடியது.
  • திருநாவுக்கரசர் தென்னார்காடு மாவட்டம், திருவாமூர் என்னும் ஊரில் பிறந்தார்.
  • பெற்றோர் = புகழனார், மாதினியார்,இவரின் தமக்கையார் = திலகவதியார்
  • இயற்பெயர் = மருள் நீக்கியார்
  • இவரின் வேறு பெயர்கள் = வாகீசர், அப்பர்
  • சைவநெறியில் தோய்ந்த இவர் சாதி வேற்றுமைகளைத் களைய முற்பட்ட சமுதாயப் பற்றாளர்.
  • இவர் “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்னும் திருவாக்கைத் தந்தவர்.
  • காலம் = கி.பி.ஏழாம் நூற்றாண்டு

சொற்பொருள்:

  • நமன் – எமன்
  • நடலை – இறப்பு
  • பிணி – நோய்
  • ஏமாப்பு – பாதுகாப்பு

திருமால்


ஆண்டாள்:

  • ஆண்டாள் அருளியது திருப்பாவை, நாச்சியார் திருமொழி.
  • திருப்பாவையை “வேதம் அனைத்திற்கும் வித்து” என்பர்.
  • நாலாயிர திவ்வியப் பிரபந்தத் தொகுப்பில் மூன்றாவது பிரபந்தமாக வைக்கப்பட்டிருப்பது திருப்பாவை.
  • பாவை என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
  • பாவை என்பது இருமடியாகு பெயர்.
  • திருப்பாவை பாக்கள் முப்பதும் வெண்டளையால் வந்த எட்டடி நாற்சீர் கொச்சகக் கலிப்பா வகையை சார்ந்தவை.
  • இவரின் காலம் எட்டாம் நூற்றாண்டு.
  • இவர் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள்.

சொற்பொருள்:

  • ஆழி – கடல், சக்கரம்
  • சார்ங்கம் – வில்
  • பாழி – வலிமை

இலக்கணக்குறிப்பு;

  • கரவேல் – எதிர்மறை ஏவல் வினைமுற்று
  • உதைத்த – பெயரெச்சம்

இயேசுபிரான்


எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை:

  • இவர் திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பு என்னும் பகுதியில் பிறந்தவர்.
  • பெற்றோர் = சங்கர நாராயண பிள்ளை, தெய்வநாயகி அம்மை
  • ஹென்றி அல்பிரடு என்பதன் சுருக்கமே எச்.ஏ ஆகும்
  • படைப்புகள் = போற்றித் திருவகவல், இரட்சணியமனோகரம், இரட்சணிய யாத்திரிகம்.
  • இரட்சணியமனோகரம் கலி விருதப்பாவால் அமைந்த நூல்.
  • இவரை “கிறித்துவக் கம்பர்” என்பர்.

சொற்பொருள்:

  • துசங்கட்டுதல் – விடாப்பிடியாக ஒரு செயலை முன்னின்று நடத்திக்காட்டுதலுக்கு வழங்கப்படும் வட்டார வழக்கு.

இலக்கணக்குறிப்பு:

  • பெருங்குணம் – பண்புத்தொகை
  • கட்டும் – செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்

புத்தர்


புத்தமித்திரர்:

  • வீரசோழியம் ஒரு ஐந்திலக்கணம் கூறும் நூல்.
  • வீரராசேந்திர சோழன் விருப்பத்திற்கு ஏற்பப் புத்தமித்திரர் பாடியது.
  • இந்நூலுக்கு பெருந்தேவனார் உரை எழுதியுள்ளார்.

சொற்பொருள்:

  • இருவினை – நல்வினை, தீவினை
  • பரவுதும் – யாம் தொழுதும்
  • ஓங்குநீர் – கடல்
  • முப்பகை – காமம், வெகுளி, மயக்கம்
  • முனிவர் – துறவி

இலக்கணக்குறிப்பு:

  • பரவுதும் – தன்மைப் பன்மை வினைமுற்று
  • நிழல் போதி – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • நீங்கா இன்பம் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • யாவரும் – முற்றும்மை
  • வீற்றிருந்த – பெயரெச்சம்
  • வினைப்பிணி – உருவகம்

No comments:

Post a Comment