Tuesday 31 March 2015

குறவஞ்சி

குறவஞ்சி

  • “கட்டினும் கழங்கினும்” என்ற தொல்காப்பிய நூற்பாவின் அடிப்படையில் தோன்றியது.
  • குறவஞ்சி என்பது தொல்காப்பியர் கூறும் “வனப்பு” என்ற நூல் வகையுள் அடங்கும்
  • குறம், குறத்திப்பாட்டு என்னும் வேறு பெயர்களும் உண்டு
  • குறவஞ்சி நாட்டியம், குறவஞ்சி நாடகம் என்ற பெயர்களும் உண்டு
  • குறிஞ்சி நிலத்தை அடிப்படையாகக் கொண்டது.
  • குறி சொல்லும் மகளிரை ஔவையார் தன் குறுந்தொகைப் பாட்டில் “அகவன் மகள்” என அழைக்கிறார்
  • குறவஞ்சி அக இலக்கிய நூலாக இருப்பினும் தலைவன், தலைவி பெயர் கூறப்படும்
  • இயற்றமிழ், இசைத்தமிழ் இரண்டும் கலந்த இலக்கியம் குறவஞ்சி
  • குறவஞ்சி பல வகைப் பாக்கள் கலந்து வரப் பாடப்படும்.
  • குறவஞ்சி இலக்கியத்திற்கு முன்னோடி அடிப்படை நூல் = குமரகுருபரரின் மீனாட்சிக் குறம்
  • முதல் குறவஞ்சி நூல் = குற்றால குறவஞ்சி
  • பன்னிரு பாட்டியல் குறவஞ்சியை,
இறப்பு நிகழ்வெதிர் வெண்ணுமுக் காலமும்
திறப்பட உரைப்பது குறத்திப் பாட்டே

குறவஞ்சி நூல்கள்:

திருக்குற்றால குறவஞ்சி(முதல் குறவஞ்சி)திருகூடராசப்ப கவிராயர்
சரபேந்திர பூபாலக் குறவஞ்சிகொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்
தமிழரசி குறவஞ்சிவரத நஞ்சையப்ப பிள்ளை
பெத்தலேகம் குறவஞ்சிவேதநாயக சாஸ்திரி
கூட்டுறவுக் குறவஞ்சிதஞ்சைவாணன்
விஸ்வநாத சாஸ்திரிவண்ணக்குறவஞ்சி

திருக்குற்றால குறவஞ்சி:

  • இதன் ஆசிரியர் = திரிகூடராசப்ப கவிராயர்
  • இவர் குற்றாலத்திற்கு அருகே உள்ள மேலகரம் என்னும் ஊரில் பிறந்தவர்
  • முதல் குறவஞ்சி நூல் இதுவே
  • மதுரையை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்க நாயக்கர் இவருக்கு “குறவஞ்சி மேடு” என்னும் நிலப்பகுதியை இனாமாக வழங்கினார்.
  • இந்நூலின் தலைவன் = திருக்குற்றால நாதர்
  • இந்நூலின் தலைவி = வசந்தவல்லி
  • இவர் இயற்றிய மற்ற நூல்கள் = குற்றாலத் தலபுராணம், குற்றால மாலை

சரபேந்திர பூபாலக் குறவஞ்சி:

  • இதன் ஆசிரியர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்
  • இவர் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள கொட்டையூரில் பிறந்தவர்.
  • இவரின் ஆசிரியர் = வைத்தியநாத தேசிகர்
  • இவர் தஞ்சை சரபோஜி மன்னரின் அரசவைப் புலவராக விளங்கியவர்.
  • இவர் இயற்றிய நூல்கள் = கொட்டையூர் உலா, திருவிடைமருதூர் புராணம், திருமண நல்லூர் புராணம், கோடீச்சரக் கோவை
  • இந்நூலின் பாட்டுடைத் தலைவன் = தஞ்சை சரபோஜி மன்னர்
  • நூலின் தலைவி = மதனவல்லி

தமிழரசி குறவஞ்சி;

  • தோரமங்கலம் திரு.அ.வரதநஞ்சையப் பிள்ளை இயற்றியது “தமிழரசி குறவஞ்சி”.
  • 96வகை சிற்றிலக்கியங்களுள் குறவஞ்சியும் ஒன்று.
  • தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன் = சுவாமிமலை முருகப்பெருமான்.
  • தமிழன்னையையே பாட்டுடைத் தலைவியாக்கி இந்நூல் இயற்றப்பட்டுள்ளது.
  • தமிழரசி குறவஞ்சியை இயற்றியவர் தோரமங்கலம் திரு.அ.வரதநஞ்சையப் பிள்ளை.
  • பெற்றோர் = அப்பசாமிப் பிள்ளை, வரதாயி அம்மையார்.
  • இவர் விரைந்து கவி பாடுவதில் வல்லவர்.
  • கரந்தை தமிழ் சங்கத்தில் “ஆசிரியர்” என்னும் சிறப்புப்பட்டம் பெற்றவர்.
  • “புலவரேறு” எனச் சிறப்பிக்கபடுவார்.
  • கரந்தை தமிழ் சங்கத்தில் நமச்சிவாய முதலியார் தலைமையில் “தங்கத் தோடா” பரிசு பெற்றுள்ளார்.
  • தமிழவேள் உமாமகேசுவரனார் இவரிடம் கேட்டு கொண்டதற்கு இணைக இந்நூலை இயற்றினார்.
  • இந்நூலை கரந்தை தமிழ் சங்கத்தின் வெள்ளி விழாவின் பொது ஞானியாரடிகள் தலைமையில் அரங்கேற்றினர்.

பெத்தலகேம் குறவஞ்சி:

  • பெத்தலகேம் குறவஞ்சியில் உலாவரும் மன்னராக இயேசுவாகவும் தேவமோகினியாக தலைவி சீயோன் மகளாகவும், குறவஞ்சி விசுவாசமாகவும் குறி கூறுதல் தீர்க்க தரிசனமாகவும். சிங்கன் குருவாகவும், நூவன் உபதேசியாகவும், அவர்கள் பிடிக்கும் பறவைகளாக மக்களும் அதற்குப் பயன்படும் வலையாக இறைவாக்கு என்ற நற்செய்தியும் உருவாக்கப்பட்டது.
  • இந்நூல் முற்றுருவகமாகத் திகழ்வது தனிச்சிறப்பு ஆகும்.
  • இந்நூலின் ஆசிரியர் தஞ்சை வேதநாயக சாத்திரியார்.
  • பெற்றோர் = தேவசகாயம், ஞானப்பூ அம்மையார்
  • ஊர் = திருநெல்வேலி
  • தஞ்சையில் மதபோதராக விளங்கிய சுவார்ட்ஸ் பாதிரியார் இவரை தம் மாணவராக ஏற்றுக்கொண்டார்.
  • தஞ்சையை ஆண்ட சரபோசி மன்னரின் உற்ற தோழராக விளங்கினார்.
  • நூல்கள் = ஞானத்தச்சன், ஞானவுலா, ஆரணாதிந்தம்.
  • இவரை “ஞானதீபக் கவிராயர்” என்றும் “அண்ணாவியார்” என்றும் போற்றுவர்.
 

No comments:

Post a Comment