Tuesday 31 March 2015

நாயன்மார்களின் வரலாறு

நாயன்மார்களின் வரலாறு

- திருநாவுக்கரசரை வழிபட்டவர் அப்பூதியடிகள்
- சுந்தரரை வழிபட்டவர்கள் சோமாசி மாற நாயனார். பெருமிழலைக் குறும்ப நாயனார்
- திருஞானசம்பந்தரை வழிபட்டவர் கணநாத நாயனார்
- புல் நெய்யால் விளக்கு எரித்தவர் கணம்புல்ல நாயனார் (தலைமயிர் எரித்தவர்)
- நீரால் விளக்கு எரித்தவர் கணம்புல்ல நாயனார்
- தம் ரத்தத்தால் விளக்கு எரிக்க முயன்றவர் கலிய நாயனார்
- வீட்டுக் கூரையைப் பிரித்து எரித்து வயலில் விதைக்கப்பட்ட விதைநெல்லால் உணவு ஆக்கி அடியவர்க்குக் கொடுத்தவர் இளையான்குடி நாயனார்
- ஐந்தெழுத்தைப் புல்லாங்குழலில் வாசித்தபடி மேல் உலகம் சென்றவர் ஆனாய நாயனார்
- சிவனைத் தூது அனுப்பிய சுந்தரரை இகழ்ந்து பின் நட்புக் கொண்டவர் ஏயர்கோன் கலிக்காம நாயனார்
- முற்பிறவியில் சிலந்தியாக இருந்து இப்பிறவியில் 70 கோயில்களைக் கட்டியவர் கோச்செங்கண் சோழ நாயனார்
- மனத்தில்கோயில் கட்டியவர் பூசலார் நாயனார்
- மனத்தால் ஞானபூசை செய்தவர் வாயிலார் நாயனார்
- கல்லால் அடித்துச் சிவனை வழிபட்டவர் சாக்கிய நாயனார்
- முழங்கையால் சந்தனம் அரைத்தவர் மூர்த்திநாயனார்
- வஞ்சித்துத் தன்னைக் கொன்ற அடியவரைக் காத்தவர் மெய்ப்பொருள் நாயனார்
- தம் கணவரைச் சைவராக்கியவர் மங்கையர்க்கரசியார்
- திருநாளைப் போவார் எனப்படுவார் நந்தனார்
- கழறிற்றிவார் எனப்படுவார் சேரமான் பெருமாள் நாயனார்
- மாணியார் எனப்படுவார் மங்கையர்க்கரசியார்
- பகைவன் நெற்றியில் திருநீறு கண்டு போரிடாமல் அவன் தன்னைக் கொல்லும்படி நடந்து கொண்டவர் ஏனாதி நாயனார்
- சிவநிவேதனப் பொருளைக் கீழே சிந்தியதற்காகத் தம் கழுத்தைத் தாமே அரிந்தவர் அரிவாட்ட நாயனார்
- வேலையாள் சிவனடியாராக வந்தபோது அவரை வணங்காத தம் மனைவியை வெட்டியவர் கலிக்கம்ப நாயனார்
- அர்ச்சனைக்கான பூவை மோந்த மனைவியின் மூக்கைச் சிவனடியார் அறுக்க அதுபோதாது என்று கையையும் வெட்டியவர் கழற்சிங்க நாயனார்
- மனைவியைத் தீண்டாது வாழ்ந்தவர் திருநீலகண்ட நாயனார்
- மனைவியின் தாலியை விற்றுக் குங்குமம் வாங்கியவர் குங்குலியக் கலய நாயனார்
- சிவனடியார்க்குத் தம் மனைவியைத் தானமாகக் கொடுத்தவர் இயற்பகை நாயனார்
- பாற்குடத்தை இடறிய தம் தந்தையின் காலை வெட்டியவர் சண்டேசுவர நாயனார்
- பிள்ளைக்கறி சமைத்தவர் சிறுத்தொண்டர் நாயனார்

No comments:

Post a Comment