Saturday 28 March 2015

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலத்தின் உருவம்:

  • ஆசிரியர் = காரியாசான்
  • பாடல்கள் = கடவுள் வாழ்த்து 1, பாயிரங்கள் 2, செய்யுட்கள் 102
  • பாவகை = வெண்பா

பெயர்க்காரணம்:

  • கண்டங்கத்திரி, சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய வேர்கள் இணைந்து மனிதனின் நோயை குணப்பதுவது போல இந்நூல் மனிதனின் உள்ளப்பிணியை நீக்குகிறது.

பொதுவான குறிப்புகள்;

  • மருந்தின் பெயரால் பெயர் பெற்ற நூல்.
  • பஞ்சம் = ஐந்து, மூலம் = வேர்
  • ஐந்து வேர்கள் = கண்டங்கத்திரி, சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி
  • சிறுபஞ்சமூலம் போன்றே பெருபஞ்சமூலம் என்ற ஒன்றும் உண்டு. அவை 1.வில்வம்,2.பெருங்குமிழ்,3.பாதிரி,4.தழுதாழை,5.வாகை
  • காரியாசனும் ஏலாதியின் ஆசிரியருமான கணிமேதாவியாரும் மதுரைத் தமிழ் ஆசிரியர் மாகாயானரின் ஒரு சாலை மாணவர்கள்.
  • இந்நூல் தொல்காப்பியர் குறிப்பிடும் “அம்மை” என்ற வனப்பிற்கு உரியது.

மேற்கோள்:

  • நூற்கு இயைத்த சொல்லின் வனப்பே வனப்பு
  • பேதைக்கு உரைத்தாலும் செல்லாது உணர்வு
 

No comments:

Post a Comment