Saturday 28 March 2015

சிறுப்பாணாற்றுப்படை

சிறுப்பாணாற்றுப்படை

சிறுப்பாணாற்றுப்படையின் உருவம்:

  • பொருள் = ஆற்றுப்படை
  • தினை = புறத்திணை
  • பாவகை = ஆசிரியப்பா
  • அடி எல்லை = 269

சிறப்புப் பெயர்:

  • சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை(தக்கயாகப்பரணி உரையாசிரியர்)

பாணர்:

  • பாணர்கள் மூன்று வகைப்படுவர் = இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர்
  • சிறிய யாழைக் கையில் வைத்திருப்போர் சீறியாழ்பாணர் என்பர்

புலவர், தலைவன்:

  • பாடிய புலவர் = நல்லூர் நத்தத்தனார்
  • பாட்டுடைத் தலைவன் = ஒய்மா நாட்டு நல்லியக்கோடன்

கடை ஏழு வள்ளல்கள்:

பேகன்மயிலுக்கு போர்வை அளித்தவன்
பாரிமுல்லைக்கு தேர் தந்தவன்
காரிஇரவலர்க்கு குதிரைகள் நல்கியவன்
ஆய்நீலமணியையும், நாகம் தந்த கலிங்கத்தையும் சிவனுக்கு அளித்தவன்
அதியமான்ஒளவைக்கு நெல்லிக்கனி அளித்தவன்
நள்ளிநடைப்பரரிகாரம் முட்டாது கொடுத்தவன்
ஓரிஇரவலர்க்கு நாடுகளை பரிசாக நல்கியவன்

உரை;

  • நச்சினார்க்கினியர் உரை உள்ளது
  • மு.வை.அரவிந்தன் உரை

பொதுவான குறிப்புகள்:

  • தக்கயாகப் பரணியின் உரையாசிரியர் இந்நூலை “சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை” என்கிறார்.
  • திண்டிவனப் பகுதி ஒய்மா நாடு ஆகும்.
  • நல்லியக்கோடனின் தலைநகரம் “கிடங்கில்”
  • இந்நூல் கடை ஏழு வள்ளல்கள் பற்றி கூறுகிறது.
  • வேளாளர் வீடுகளில் நாய் வளர்த்ததைப் போல, உமணர்கள் வீட்டில் குரங்குகளை வளர்த்தனர்.

முக்கிய அடிகள்:

  • பன்மீன் நடுவே பால்மதிபோல
    இன்நடை ஆயமொடு இருந்தோன்
  • முல்லை சான்ற கற்பின் மெல்லியல்
    மடமா நோக்கின் வாணுதல் விறலியர்
  • தமிழ்நிலை பெற்ற தாங்கறு மரபின்
    மகிழ்நனை மறுகின் மதுரை
  • எழுவர் பூண்ட ஈகைச் செந்துகம்

No comments:

Post a Comment