Saturday 28 March 2015

நற்றிணை

நற்றிணை

நற்றிணையின் உருவம்:

  • திணை = அகத்திணை
  • பாவகை = ஆசிரியப்பா
  • பாடல்கள் = 400
  • புலவர்கள் = 175
  • அடி எல்லை = 9-12

தொகுப்பு:

  • தொகுத்தவர் = தெரியவில்லை
  • தொகுப்பிதவர் = பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி

வேறுபெயர்கள்:

  • நற்றிணை நானூறு
  • தூதின் வழிகாட்டி

நூல் பெயர்க்காரணம்:

  • நல் + திணை = நற்றிணை
  • திணை = நிலம், குடி, ஒழுக்கம்
  • நற்றிணை என்பதற்கு “நல்ல ஒழுக்கலாறு” என்று பொருள்.
  • திணை என்ற பெயர் பெற்ற ஒரே நூல் நற்றிணை மட்டுமே.

உரை, பதிப்பு;

  • நற்றினைக்கு முதலில் உரை எழுதியவர் = பின்னந்தூர் நாராயணசாமி
  • நற்றிணையை முதலில் பதிப்பித்தவர் = பின்னந்தூர் நாராயணசாமி

கடவுள் வாழ்த்து:

  • இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • இந்நூலின் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் = திருமால்

நற்றிணையில் தொடரால் பெயர் பெற்றவர்கள்:

மலையனார்தனிமகனார்தும்பிசேர்கீரனார்வண்ணப்புறச் சுந்தரத்தனார்மடல் பாடிய மாதங்கீரனார்

நற்றிணை குறிப்பிடும் அரசர்கள்:

அதியமான் அஞ்சிகாரி
அழிசிகுட்டுவன்
ஆய்சேந்தன்
உதியன்நன்னன்
ஓரிபாண்டியன் நெடுஞ்செழியன்

கிடைக்காதவை:

  • 234ஆம் பாடல் கிடைக்கவில்லை.
  • “சான்றோர் வருந்திய வருத்தமும்” எனத் தொடங்கும் இறையனார் களவியல் உரை மேற்கோள் பாடல் அது என்பர்.

பொதுவான குறிப்புகள்:

  • வௌவால்களும் கனவு காணும் என்ற அறிவியல் உண்மை கூறப்பட்டுள்ளது.
  • பிற்காலத்தில் சிறந்து விளங்கிய தூது என்ற இலக்கியத்திற்கு வழிகாட்டியாக குருகு, நாரை ஆகியவற்றை தூது விடும் பண்பு இதில் கூறப்பட்டுள்ளது.
  • எனவே நற்றிணையை “தூதின் வழிகாட்டி” என்பர்.

முக்கிய அடிகள்:

  • விளையா டாயமோடு வெண்மணல் அழுத்தி
    மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
    நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்பப்
    நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
  • முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பினும்
    நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்
  • நீரின்றி அமையா உலகம் போலத்
    தம்மின்றி அமையா நம்நயந்து அருளி – (கபிலர்)
  • இளமையிற் சிறந்த வளமையும் இல்லை
  • சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவில்
  • ஒருமுலை இழந்த திருமா உண்ணி
  • நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
    வெல்வம் அன்று
 

No comments:

Post a Comment