Tuesday 31 March 2015

பரணி, முத்தொள்ளாயிரம்

பரணி

  • பரணி நூல்களின் இலக்கணம் கூறுவது = இலக்கண விளக்கப் பாட்டியல்
ஆணை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணி
  • பரணி 13 உறுப்புகளைக் கொண்டது
  • தோற்றவர் பெயரால் இந்நூல் அமையும்
  • பரணி என்பது ஒரு நட்சத்திரம்(நாள்)
  • இரண்டடித் தாழிசையால் பாடப்படுவது பரணியாகும்
  • பரணியின் பாவகை = கலித்தாழிசை
  • “பரணி என்ற நாள்மீன் காளியையும், யமனையும் தன் தெய்வமாக பெற்றது என்றும் அந்த நாள்மீனால் வந்த பெயரே நூலுக்கு பெயராகி வந்தது என்றும்” கூறுகிறார் உ.வே.சா
  • போர்க்கடவுளாகிய கொற்றவைக்கு உரிய நாள் = பரணி
  • முதல் பரணி நூல் = கலிங்கத்துப்பரணி
  • பரணி பாடுவதில் வல்லவர் செயங்கொண்டார்

பரணி நூல்கள்:

கலிங்கத்துப்பரணிசெயங்கொண்டார்
தக்கயாகப் பரணிஒட்டக்கூத்தர்
அஞ்ஞவதைப் பரணிதத்துவராயர்
பாசவதைப் பரணிவைத்திய நாத தேசிகர்

கலிங்கத்துப்பரணி:

  • முதல் பரணி நூல் இதுவே
  • இந்நூலின் ஆசிரியர் = செயங்கொண்டார்
  • இவர் தீபங்குடி என்னும் ஊரினர்
  • முதல் குலோத்துங்க சோழனின் படைத்தளபதி கருணாகரத் தொண்டைமானை அனுப்பி கலிங்க மன்னன் ஆனந்தவர்மனை வென்றதை பற்றி கூறுகிறது இந்நூல்.
  • இவரின் படைப்புகள் = தீபங்குடி பத்து, இசையாயிரம், மடல், உலா
  • இந்நூலை “தென்தமிழ் தெய்வபரணி” என ஒட்டக்கூத்தர் பாராட்டுகிறார்.
  • செயங்கொண்டாரை “பரணிக்கோர் செயங்கொண்டார்” என பலபட்டடை சொக்கநாதர் பாராட்டுகிறார்.
  • இந்நூலில் 599 தாழிசைகள் உள்ளன.
  • கருணாகரத் தொண்டைமானை “வாண்டையார் கோன்” என்கிறார் செயங்கொண்டார்
  • இவர் “கவிச்சக்ரவர்த்தி” என்ற பட்டம் பெற்றவர்.

தக்கயாகப்பரணி:

  • இதன் ஆசிரியர் = ஒட்டக்கூத்தர்
  • தட்சன் சிவபெருமானை மதிக்காது யாகம் செய்ய அதனால் சினங்கொண்ட சிவனின் மைந்தன் வீரபத்திரன் யாகத்தை அழித்து, உதவிக்கு வந்தோரை வென்று தட்சனின் தலையைத் துண்டித்த புராண வரலாற்றை கூறுவது. தோற்ற தக்கனின் பெயரால் மரபுப்படி பெயர் பெற்றது.
  • இவர் மலரி என்னும் ஊரினர்.
  • இவரின் இயற்பெயர் = கூத்தன்
  • இவரின் சிறப்புப்பெயர்கள் = கவிராட்சசன், கவிச்சக்ரவர்த்தி,காளக்கவி, சர்வஞ்சக் கவி, கௌடப் புலவர்
  • இவரின் படைப்புகள் = மூவருலா, ஈட்டி எழுபது, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், அரும்பைத் தொள்ளாயிரம், காங்கேயன் நாலாயிரக்கோவை
  • “கோவை உலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன்” என்ற சிறப்பு இவருக்கு உண்டு.
  • தக்கயாகப்பரணியின் வேறு பெயர் = வீரபத்திர பரணி
  • இவர் கலைமகளுக்கு என்று கூத்தனூரில் தனி கோயில் கட்டினார்

முத்தொள்ளாயிரம்

  • முத்தொள்ளாயிரம் மூவேந்தர்களைப் பற்றிய 900 பாடல்களைக் கொண்டது.
  • ஆயினும் இந்நூல் முழுமையாக கிடைக்கவில்லை.
  • “புறத்திரட்டு” என்னும் நூல் வழியாக 108 வெண்பாக்களும், பழைய உரை நூல்களில் மேற்கோளாக 22 வெண்பாக்களும் கிடைத்துள்ளன.
  • மூவேந்தர்களின் ஆட்சிச்சிறப்பு, படைச்சிறப்பு, போர்த்திறன், கொடை முதலிய செய்திகளை இப்பாடல்கள் விளக்குகின்றன.
  • இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
  • சேரர் பற்றி 23 பாடல்களும், சோழர் பற்றி 46 பாடல்களும், பாண்டியர் பற்றி 61 பாடைகளும் என மொத்தம் 130 பாடல்கள் கிடைத்துள்ளன.
  • இதில் அகப்பாடல்கள் 75, புறப்பாடல்கள் 55 உள்ளன

No comments:

Post a Comment