Saturday 28 March 2015

மதுரைக்காஞ்சி

மதுரைக்காஞ்சி

மதுரைக்காஞ்சியின் உருவம்:

  • திணை = மருதம், புறத்திணை
  • பா வகை = வஞ்சியடிகள் விரவிய ஆசிரியப்பா
  • அடி எல்லை = 782

பெயர்க்காரணம்:

  • மதுரையை ஆண்ட பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு பொருட்செல்வம், இளமை, யாக்கை போன்ற உலக இன்பங்கள் நிலையற்றவை என்று காஞ்சித் திணையை விரித்துக் கூறுவது மதுரைக்காஞ்சி

வேறு பெயர்கள்:

  • மாநகர்ப்பாட்டு(ச.வே.சுப்பிரமணியன்)
  • கூடற் தமிழ்
  • காஞ்சிப்பாட்டு

புலவர், தலைவன்;

  • பாடிய புலவர் = மாங்குடி மருதனார்
  • பாட்டுடைத் தலைவன் = தலையானங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

பாண்டியனின் போர் வெற்றி:

  • கோச்சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
  • சோழன் இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி
  • குறுநில மன்னர்கள் ஐவர் = திதியன், எழினி, எருமையூரன், பொருளன், இருங்கோ வேண்மான் ஆகியவர்களை தோற்கடித்தான்

பாண்டியனின் முன்னோர்:

  • முந்நீர் வடிம்பு அலம்ப நின்ற பாண்டியன்
  • பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி
  • நிலத்திரு திருவிற் பாண்டியன்

பொதுவான குறிப்புகள்:

  • நிலையாமையை உணர்த்தும் திணை காஞ்சித்திணை
  • தொல்காப்பியரின் காஞ்சித்திணை நிலையாமை பற்றியது; புறப்பொருள் வெண்பா மாலையின் காஞ்சித் திணை போர் பற்றியது.
  • பத்துப்பாட்டின் அதிக அடிகளை கொண்டது
  • பத்துப்பாட்டு வெண்பா இந்நூலை “பெருகுவளமதுரை காஞ்சி” எனப் போற்றுகிறது.
  • மதுரையின் நாள் அங்காடியும்(பகல் கடல்), அல் அங்காடியும் (இரவு நேரக்கடை) கூறப்பட்டுள்ளது.
  • இதனை “மாநகர்ப் பாட்டு” எனக் கூறியவர் ச.வே.சுப்பிரமணியன்
  • மதுரையில் நடைபெற்ற ஆறு விழாக்கள் = திருபரங்குன்ற விழா, மதுரைக்கோவில் விழா, அந்திவிழா, எழுநாள் விழா, திருவோண விழா, மன்னன் பிறந்த நாள் விழா.

முக்கிய அடிகள்:

  • கரை பொருது இறங்கும் கணைஇரு முந்நீர்
    திரையீடு மணலிலும் பலரே, உரைசொல்
    மலர் தலை உலகம் ஆண்டு கழிந்தோரே
  • அளந்து கடை அறியா வளம்கெழு தாரமொடு
    புத்தேன் உலகம் கவினிக் காண்வர
    மிக்குப் புகழ் எய்திய பெரும்பெயர் மதுரை

No comments:

Post a Comment