Tuesday 31 March 2015

தமிழ்த்தொண்டு - அகரமுதலி வரலாறு

தமிழ்த்தொண்டு - அகரமுதலி வரலாறு

அகராதி:

  • அகரம் + ஆதி =அகராதி
  • ஒரு மொழியில் உள்ள எல்லாச் சொர்களையும் அகரவரிசையில் அமையும்படி ஒருசேரத் தொகுத்து விளக்கும் நூலை அகராதி என்பர்.
  • அகராதி என்னும் சொல் தற்போது அகரமுதலி என வழங்கப்படுகிறது.

நிகண்டுகள்:

  • தமிழ் அகரமுதலி வரலாற்றில், செம்பாதி இடத்தைப்பெறும் சொற்பொருள் துறை நூல்கள் நிகண்டுகளாம்.
  • நிகண்டுகளில் பழமையானது = திவாகரர் எழுதிய சேந்தன் திவாகரம்.
  • நிகண்டுகளில் சிறப்பானது = மண்டலபுருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு.

அகரமுதலி:

  • திருமூலரின் திருமந்திரத்தில் “அகராதி” என்னும் சொல் முதன்முதலாக இடம் பெற்றுள்ளது.

அகராதி நிகண்டு:

  • நிகண்டுகளில் ஒன்றான “அகராதி நிகண்டில்” அகராதி என்ற சொல் அடைமொழியாக அமைந்துள்ளது.
  • இந்நூலே அகரமுதலிகள் தோன்றுவதற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
  • இந்நூலில் சொற்களின் முதல் எழுத்துக்கள் மட்டுமே அகரவரிசையில் அமைந்திருந்தன.

சதுரகராதி:

  • வீரமாமுனிவரின் சதுரகராதியே தமிழில் தோன்றிய முதல் அகரமுதலி.
  • இது கி.பி.1732ஆம் ஆண்டு வெளிவந்தது.
  • சதுர் என்பதற்கு நான்கு என்று பொருள்.
  • பெயர், பொருள், தொகை, தொடை என நான்கு வகைகளில் தனித்தனியாக பொருள் விளக்கம் இருந்தது.
  • வீரமாமுனிவர் தமிழ்-இலத்தின் அகராதி, இலத்தின்-தமிழ் அகராதி, தமிழ்-பிரெஞ்சு அகராதி, பிரெஞ்சு-தமிழ் அகராதி, போர்த்துகீசிய-தமிழ்-பிரெஞ்சு அகராதி வெளியிட்டார்.

சங்க அகராதி:

  • “தமிழ்-தமிழ் அகராதி” ஒன்று லேவி-ஸ்பாடிஸ் என்பவரால் வெளியிடப்பட்டது.
  • யாழ்பாணம் கதிரைவேலனாரால் “தமிழ்ச்சொல் அகராதி” வெளியிடப்பட்டது. இதனை “சங்க அகராதி” எனவும் அழைப்பர்.
  • இதில் சொல்லின் மூலம் தருதல், மேற்கோள் அமைதல் எனும் மரபு பின்பற்றப்பட்டுள்ளது.

பிற அகரமுதலிகள்:

  • குப்புசாமி என்பவர் “தமிழ்ப் பேரகராதி” வெளியிட்டார்.
  • இராமநாதன் என்பவர் படங்களுடன் கூடிய ஓர் அகரமுதலியை வெளியிட்டார். இந்நூல் “இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அகராதி” எனும் பெயருடன் வந்தது.
  • வின்சுலோ என்பவர் “தமிழ்-ஆங்கிலப் பேரகராதி” வெளியிட்டார்.

பவானந்தர்:

  • பவானந்தர் என்பார் 1925ஆம் ஆண்டு “தற்காலத் தமிழ்ச்சொல் அகராதியும்”, 1937ஆம் ஆண்டு “மதுரைத் தமிழ்ப் பேரகராதியும்” வெளியிட்டார்.

சண்முகம்:

  • மு.சண்முகம் என்பவரால் “தமிழ்-தமிழ் அகரமுதலி” 1985ஆம் ஆண்டு தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டது

தமிழ் லெக்சிகன்:

  • இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப்பெரிய அகரமுதலி “சென்னைப் பல்கலைக்கழக அகராதி”.
  • இது நன்கு திட்டமிட்டு முழுமையாக உருவாக்கப்பட்டது.
  • இவ்வகரமுதலி “தமிழ் லெக்சிகன்” என்னும் பெயரில் ஆறு தொகுதிகளாக வெளிவந்தது.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி:

  • 1985ஆம் ஆண்டு “தேவநேயபாவாணர்”யின் “செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி”யின் முதல் தொகுதி வெளிவந்தது.
  • இரண்டாவது தொகுதி 1993ஆம் ஆண்டு வெளியானது.
  • ஒவ்வொரு சொல்லின் சொற்பிறப்பும், இனமொழிச் சொற்களுக்கான குறிப்பும், பதிப்பின் இறுதியில் தரப்பட்டுள்ளன.
  • படங்களுடன் வேலி வந்த இரண்டாவது அகரமுதலி இதுவேயாகும்.

கணினி உதவியுடன் அகரமுதலி:

  • முழுமையாக கணினி உதவியுடன் உருவாக்கப்பட்டு வெளிவந்த முதல் அகரமுதலி “கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி”.
  • விளக்கச் சொற்களோடு வெளிவந்த முதல் அகரமுதலி இதுவே.

கலைக்களஞ்சியம்:

  • தமிழ்க் கலைக்களஞ்சியங்களின் முன்னோடி = அபிதான கோசம்.
  • இது 1902ஆம் ஆண்டு இலக்கியப் புராண இதிகாசச் செய்திகளைக்கொண்டு வெளிவந்தது.
  • இது இலக்கியக் களஞ்சியம் ஆக திகழ்கிறது.

அபிதான சிந்தாமணி:

  • 1934ஆம் ஆண்டு இலக்கியச் செய்திகளோடு, அறிவியல் துறைப் போருகளையும் முதன் முதலாகச் சேர்த்து விளக்கம் தந்து வெளிவந்தது = அபிதான சிந்தாமணி.
  • இதனை சிங்காரவேலனார் தொகுத்து வெளியிட்டார்.

தமிழ் வளர்ச்சி கழகம்:

  • தமிழ் வளர்ச்சி கழகம் முறையான “முதல் கலைக்களஞ்சியத்தை” தொகுத்து வெளியிட்டது.
  • இது பத்து தொகுதிகளை உடையது.
  • இக்கழகம் குழந்தைகள் கலைக்களஞ்சியம், நாடகக் கலைக்களஞ்சியம், இசுலாமிய கலைக்களஞ்சியம் முதலிய பல கலைக்களஞ்சியங்களை வெளியிட்டது.

கலைச்சொல் அகரமுதலி:

  • காலைக்கதிர் நிறுவன முயற்சியால் பொதுஅறிவு, உளவியல், புவியியல், புள்ளியல், வரலாறு, வானவியல் முதலிய துறைகளுக்கும் கலைச்சொல் அகரமுதலிகள் 1960ஆம் ஆண்டு தொகுக்கக்ப்பட்டன.
  • மணவை முஸ்தபா அறிவியல் சார்ந்த துறைவாரியான கலைச்சொல் அகரமுதலிகளைத் தொகுத்து வெளியிட்டார்.
  • அறிவியல் கலைச்சொல் களஞ்சியம் 1991ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

தேவநேயபாவாணர்

வாழ்க்கைக் குறிப்பு:

  • ஊர் = திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் அருகே புத்தூர்
  • பெற்றோர் = ஞானமுத்து, பரிபூரணம் அம்மையார்

சிறப்பு பெயர்:

  • செந்தமிழ்ச் செல்வர்(தமிழக அரசு)
  • செந்தமிழ் ஞாயிறு(பறம்புமலை பாரி விழாவினர்)
  • மொழி ஞாயிறு(தென்மொழி இதழ்)

படைப்புகள்:

  • இயற்றமிழ் இலக்கணம்(முதல் நூல்)
  • கட்டுரை வரைவியல் என்னும் உரைநடை இலக்கணம்
  • ஒப்பியல் மொழி நூல்
  • திராவிடத்தாய்
  • சொல்லாராய்ச்சிக் காட்டுரை
  • உயர்தரக் கட்டுரை இலக்கணம்
  • பழந்தமிழ் ஆட்சி
  • முதல் தாய்மொழி
  • தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்
  • தமிழர் திருமணம்
  • இசைத்தமிழ் கலம்பகம்
  • பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்
  • தமிழ் வரலாறு
  • வடமொழி வரலாறு
  • தமிழர் வரலாறு
  • தமிழ் கடன் கொடுத்து தழைக்குமா?
  • இன்னிசைக்கோவை
  • திருக்குறள் தமிழ் மரபுரை
  • தமிழர் வேதம்
  • வேர்ச்சொல் கட்டுரைகள்
  • மண்ணில் வின் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை
  • தமிழ் இலக்கிய வரலாறு
  • செந்தமிழ்க் காஞ்சி(பாடல் தொகுப்பு)
  • இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?
  • மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்(இறுதி கட்டுரை)

குறிப்பு:

  • உலக முதல் மொழி தமிழ்; திராவிட மொழிகளின் தாய் மொழி தமிழ் என்ற இவர்தம் கொள்கையை நிலைநாட்ட வாழ்நாள் முழுவதும் முயன்றார்
  • உலகத் தமிழ் கழகம் தொடங்கினார்
  • மன்னிப்பு உருதுச் சொல்; பொறுத்துக்கொள்க என்பது தமிழ்ச் சொல் என்றவர்
  • தமிழை வடமொழி வல்லான்மையில் இருந்து மீட்கவே இறைவன் தன்னை படைத்ததாக கூறியவர்

சிறப்பு:

  • அறிஞர் அண்ணா = பாவாணர் தமிழ்மொழிக்கும் நாட்டுக்கும் இடைவிடாத நற்தொண்டாற்றி நம் அனைவரின் நிலையினையும் உயர்த்தியவர், அவருடைய புலமை தெளிவும் துணிவும் மிக்கது
  • மறைமலை அடிகளின் தனித்தமிழ்க் கொள்கையை நாடு முழுக்க பரப்பியவர்

 

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

வாழ்க்கை குறிப்பு:

  • இயற் பெயர் = துரை மாணிக்கம்
  • ஊர் = சேலம் மாவட்டம் சமுத்திரம்
  • பெற்றோர் = துரைசாமி, குஞ்சம்மாள்

சிறப்பு பெயர்:

  • பாவலரேறு
  • தற்கால நக்கீரர்

படைப்பு:

  • கொய்யாக்கனி
  • ஐயை
  • பாவியக் கொத்து
  • எண்சுவை எண்பது
  • மகபுகுவஞ்சி
  • அறுபருவத்திருக்கூத்து
  • கனிச்சாறு
  • நூறாசிரியம்
  • கற்பனை ஊற்று
  • உலகியல் நூறு பள்ளிப்பறவைகள்

இதழ்:

  • தென்மொழி
  • தமிழ்ச் சிட்டு
  • தமிழ் நிலம்

குறிப்பு:

  • உலக தமிழ் முன்னேற்ற கலகத்தை தொடங்கினார்
  • மொழி ஞாயிறு தேவநேயபாவாணரின் கொள்கைகளைப் பரப்பும் தலை மாணாக்கர்

ஜி.யு.போப்

வாழ்க்கை குறிப்பு:

  • பெயர் = ஜியார்ஜ் யுக்ளோ போப் என்று அழைக்கப்படும் ஜி.யு.போப்
  • பிறந்த ஊர் = பிரான்ஸ் நாட்டின் எட்வர்ட் தீவு
  • பிறப்பு = கி.பி.1820ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி
  • பெற்றோர் = ஜான் போப், கேதரின் போப்

சிறப்பு பெயர்:

  • தமிழ் பாடநூல் முன்னோடி
  • வேத சாஸ்திரி

படைப்புகள்:

  • தமிழ் செய்யுட் கலம்பகம்
  • Extracts from Puranaanooru to Purapporul venbaamaalai
  • Elementary Tamil Grammar
  • The Lives of Tamil Saints

இதழ்:

  • Royal Asiatic Quarterly
  • The Indian Magazine
  • Siddhantha Deepika

மொழிப்பெயர்ப்பு நூல்கள்:

  • திருக்குறள்
  • நாலடியார்
  • திருவாசகம்
  • சிவஞான போதம்
  • புறநானூறு(சில பாடல்கள்)
  • புறப்பொருள் வெண்பா மாலை(சில பாடல்கள்)

குறிப்பு:

  • இவருக்கு தமிழ் கற்ப்பித்தவர் = இராமானுஜ கவிராயர்
  • இவர் 19ஆம் வயதில் தமிழகம் வந்தார்
  • இவரின் திருவாசக மொழிப்பெயர்ப்பு மிகச் சிறப்பானது
  • “திருக்குறளை ஏசுநாதரின் இதயஒலி, மலை உபதேசத்தின் எதிரொலி” எனப் புகழ்ந்தவர்
  • Elementary Tamil Grammar என்ற இலக்கண நூலை எழுதியுள்ளார். இது திரு.வி.க பபடித்த முதல் இலக்கண நூல்
  • தம் கல்லறையில் “தமிழ் மாணவன்” என்று பொரிக்க வேண்டும் என்றவர்
  • இவர் ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டு அன்றும் புறநானூற்றுப் பாடல் ஒன்றை மொழிப்பெயர்க்கும் வழக்கம் கொண்டிருந்தார்

சிறப்பு:

  • ஜூலியன் வில்சன் = “இருவினை கடந்த செல்வன் இசைத்த வாசகத்தை எல்லாம் வரு விளையாட்டாற் போலும் மறுமொழி யதனில் வைத்தீர்

வீரமாமுனிவர்

வாழ்க்கைக் குறிப்பு:

  • பெயர் = வீரமாமுனிவர்
  • இயற்பெயர் = கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி
  • பெற்றோர் = கொண்டல் போபெஸ்கி, எலிசபெத்
  • பிறந்த ஊர் = இத்தாலி நாட்டில் காஸ்திக்கிளியோன்
  • அறிந்த மொழிகள் = இத்தாலியம், இலத்தின், கிரேக்கம், எபிரேயம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம்
  • தமிழ்க் கற்பித்தவர் = மதுரைச் சுப்ரதீபக் கவிராயர்
  • சிறப்பு = முப்பதாம் வயதில் தமிழகம் வந்து தமிழ் பயின்று காப்பியம் படைத்தமை.
  • காலம் = 1680-1747

சிறப்பு பெயர்:

  • தமிழ் சிறுகதையின் முன்னோடி
  • தமிழ் உரைநடையின் தந்தை
  • எள்ளல் இலக்கிய வழிகாட்டி
  • உரைநடை இலக்கிய முன்னோடி
  • செந்தமிழ் தேசிகர்
  • மொழிபெயர்ப்பு துறையின் வழிக்காட்டி
  • வீரமாமுனிவர்(மதுரை தமிழ் சங்கம்)
  • தமிழ் அகராதியின் தந்தை
  • ஒப்பிலக்கண வாயில்
  • தொகுப்புப்பணியின் வழிகாட்டி

காப்பியம்:

  • தேம்பாவணி(கிறித்தவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்)

சிற்றிலக்கியம்:

  • திருக்காவலூர் கலம்பகம்
  • கித்தேரி அம்மாள் அம்மானை
  • அடைக்கல நாயகி வெண்பா
  • அன்னை அழுங்கல் அந்தாதி
  • கருணாகரப் பதிகம்

உரைநடை:

  • வேதியர் ஒழுக்கம்
  • வேத விளக்கம்
  • பேதகம் மறத்தல்
  • லூதர் இனதியல்பு
  • ஞானக் கண்ணாடி
  • வாமணன் கதை

இலக்கணம்:

  • தொன்னூல் விளக்கம்(“குட்டித் தொல்காப்பியம்” என்பர்)
  • கொடுந்தமிழ் இலக்கணம்
  • செந்தமிழ் இலக்கணம்

மொழிபெயர்ப்பு:

  • திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலத்தின் மொழியில் மொழிபெயர்த்துள்ளார்

அகராதி:

  • சதுரகராதி(தமிழின் முதல் அகராதி)
  • தமிழ்-இலத்தின் அகராதி
  • போர்த்துகீசியம்-தமிழ்-இலத்தின் அகராதி

ஏளன இலக்கியம்:

  • பரமார்த்த குரு கதை(தமிழின் முதல் ஏளன இலக்கியம்)

தொகுப்பு:

  • தமிழ் செய்யுள் தொகை

குறிப்பு:

  • எழுத்து சீர்திருத்தம் செய்து, சில குறில் எழுத்துக்களையும் நெடில் எழுத்துக்களையும் வேறுபடுத்தி மாற்றம் செய்தார்
  • ஐந்திலக்கண நூலான “தொன்னூல் விளக்கம்” என்னும் இலக்கண நூலை படைத்தார். இதன் சிறப்பு கருதி இந்நூலை “குட்டித் தொல்காப்பியம்” என்பர்
  • சதுரகராதி என்னும் அகராதி நூலை வெளியிட்டு பிற்கால அகராதி நூல்களுக்கெல்லாம் வழிகாட்டினார்
  • தேம்பாவணி காப்பியத்திற்கு வீரமாமுனிவரே உரை வடித்துள்ளார்
  • திருச்சியை ஆண்ட சந்தா சாகிப்பிடம் திவானாக பணி புரிந்தார்
  • இவர் மறைந்த இடம் = அம்பலகாடு
  • தனது பெயரை முதலில் “தைரியநாதர்” என மாற்றிக்கொண்டார்

சிறப்பு:

  • கவியோகி சுத்தானந்த பாரதி = சாரமாம் தேம்பாவணியினைத் தொடினும், தமிழ் மனம் கமழும் என்கரமே
  • கவியோகி சுத்தானந்த பாரதி = தமிழ் மாலைகளில் ஒரு வாடாத கற்பகமாலை காணப்படுகிறது. அதுவே தேம்பாவணி என்னும் பெருங் காப்பிய மாலை
  • திரு பூர்ணலிங்கம் பிள்ளை = இது சீவக சிந்தாமணிக்கு இணையான காவியமாகும்
  • கால்டுவெல் = தமிழ் இலக்கியத்தில் தலை சிறந்த நான்கு காவியங்களுள் தேம்பாவணியும் ஒன்று
  • ரா.பி.சேதுபிள்ளை = தேம்பாவணி தமிழ் அன்னையின் கழுத்தில் வாடாத மாலையாகத் திகழ்கின்றது. காவலூர்க் கலம்பகம் கதம்ப மாலையாகக் காட்சியளிக்கிறது; தொன்னூல் பொன்னூலாக இலங்குகின்றது; சதுரகராதி முத்தாரமாக மிளிர்கிறது; வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகிறார்

No comments:

Post a Comment