Saturday 28 March 2015

பதிற்றுப்பத்து

பதிற்றுப்பத்து

  • சேர அரசர்களைப் பற்றி மட்டுமே பாடும் இலக்கியம்.
  • பத்து சேர அரசர்களுக்குப் பத்து பாடல்கள் வீதம் நூறு பாடல்களைப் கொண்ட நூல் இது.

பதிற்றுப்பத்தின் உருவம்:

  • திணை = பாடாண் திணை (புறத்திணை)
  • பாவகை = ஆசிரியப்பா
  • பாடல்கள் = 100( கிடைத்தவை80)
  • புலவர்கள் = 10(அறிந்த புலவர்8)
  • அடி எல்லை = 8-57

பெயர் காரணம்:

  • பத்து + பத்து = பதிற்றுப்பத்து
  • பத்து + இன் + இற்று + பத்து = பதிற்றுப்பத்து
  • பத்து + பத்து சேர்ந்தால் பதிற்றுப்பத்து ஆகும் என்று தொல்காப்பியம் வெளிப்படையாக கூறவில்லை. நன்னூல் கூறுகிறது.

வேறுபெயர்:

  • இரும்புக்கடலை

தொகுப்பு:

  • இந்நூலை தொகுத்தவர், தொகுப்பிதவர் பெயர் தெரியவில்லை.

உரை:

  • பழைய உரை ஒன்று உள்ளது.
  • பழைய உரைக்கு உ.வே.சா வின் குறிப்புரை

பதிற்றுப்பத்தில் புலவர்களும் பரிசும்:

பத்துக்கள்பாடிய புலவர்அரசன்பரிசு
முதல் பத்து

உதியஞ் சேரலாதன்

இரண்டாம் பத்துகுமட்டுர் கண்ணனார்இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்இறையிலி நிலமாக உம்பற்காடு, ஐநூறு ஊர்கள்
மூன்றாம் பத்துபாலைக் கௌதமனார்பல்யானை செல்கெழு குட்டுவன்பத்து வேள்விகள் செய்ய உதவி, மனைவியுடன் விண்ணுலகம் புகச் செய்தான்
நான்காம் பத்துகாப்பியாற்றுக் காப்பியனார்களங்காய் சென்னி நார்முடிச்சேரல்நாற்பது நூறாயிரம் பொன், சேரநாட்டில் ஒரு பகுதி
ஐந்தாம் பத்துபரணர்கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்உம்பற்காட்டு வருவாய், அரசன் மகா குட்டுவ சேரல்
ஆறாம் பத்துகாக்கைப்பாடினியார் நச்சொள்ளையார்ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்ஒன்பது துலாம் பொன், நூறாயிரம் பொற்காசுகள்
ஏழாம் பத்துகபிலர்செல்வக்கடுங்கோ வாழியாதன்நூறாயிரம் பொன், நன்றா என்ற குன்றிலிருந்து கண்ணுக்கு எட்டிய தொலைவுப் பகுதி
எட்டாம் பத்துஅரிசில்கிழார்தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறைஒன்பது நூறாயிரம் பொன், அரசுக்கட்டில்
ஒன்பதாம் பத்துபெருங்குன்றூர் கிழார்இளஞ்சேரல் இரும்பொறை32000 பொன், ஊர், மனை, ஏர், பிற அருங்கலங்கள் பன்னூறாயிரம்
பத்தாம் பத்து யானைகட்சேய் மாந்தரால் சேரல் இரும்பொறை 

பொதுவான குறிப்புகள்:

  • இந்நூல் பாடாண் திணை என்னும் ஒரே தினைப் பாடலால் ஆனது.
  • இந்நூலின் முதல் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை.
  • ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் துறை, வண்ணம், தூக்கு(இசை) ஆகியன குறிக்கப்பட்டுள்ளன.
  • வழக்கின் இல்லாத பழஞ்சொற்களை மிகுதியாகப் பெற்றுள்ளதால் இந்நூல் “இரும்புக்கடலை” என அழைகப்படுகிறது.
  • பதிற்றுப்பத்து முதல் மூன்று நூற்றாண்டுகளில் ஆண்ட சேர வேந்தர் பரம்பரைச் செய்திகளைத் தெரிவிக்கிறது.
  • சங்க நூல்களில் அனைத்துப் பாடலும் பாடல் தொடரால் பெயர் பெற்ற ஒரே நூல் பதிற்றுப்பத்து மட்டுமே.
  • பதிற்றுப்பத்தும் இசையோடு பாடப்பட்ட நூல்.(இசையோடு பரிபாடலும் பாடப்பட்டது)
  • நான்காம் பத்து அந்தாதி தொடையில் அமைந்துள்ளது.
  • பகைவரது பெண்டிரின் கூந்தலை அறிந்து கயிறாகத் திரித்து யானைகளைக் கட்டி இழுப்பது போன்ற செய்திகள் ஐந்தாம் பத்தில் உள்ளது.
  • “பிற்காலத்தில் கல்வெட்டுகளில் இடம் பெற்ற மெயகீர்த்திகளின் போக்கு பதிகங்களில் காணப்படுகிறது” என்கிறார் தமிழண்ணல்

முக்கிய அடிகள்:

  • ஈத்தது இரங்கான் ஈத்தொறும் மகிழான்
    ஈத்தொறு மாவள்ளியன்
    மாரி பொய்க்குவது ஆயினும்
  • சேரலாதன் பொய்யலன் நசையே
    வாரார் ஆயினும், இரவலர் வேண்டித்
  • தேரில் தந்து, அவர்க்கு ஆர்பதன் நல்கும்
    நசையால் வாய்மொழி இசைசால் தோன்றல்
 

No comments:

Post a Comment