Saturday 28 March 2015

பெரும்பாணாற்றுப்படை

பெரும்பாணாற்றுப்படை

பெரும்பானாற்றுப்படையின் உருவம்:

  • பொருள் = ஆற்றுப்படை
  • திணை = புறத்திணை
  • பாவகை = ஆசிரியப்பா
  • அடி எல்லை = 500

பெயர்க்காரணம்:

  • பெரிய யாழ்ப்பாணர்கள் ஆற்றுப்படுத்துவதாலும்,
  • சிறுபாணாற்றுபடையை காட்டிலும் அதிக அடிகளைப் பெற்றிருப்பதாலும் இது பெரும்பாணாற்றுப்படை ஆயிற்று.

புலவர், தலைவன்:

  • பாடிய புலவர் = கடியலூர் உருத்திரங் கண்ணனார்
  • பாட்டுடைத் தலைவன் = தொண்டைமான் இளந்திரையன்

வேறு பெயர்கள்:

  • பாணாறு
  • சமுதாயப் பாட்டு

தொண்டைமான்:

  • சோழன் ஒருவனுக்கும் நாகக் கன்னிக்கும் பிறந்தவன் என நச்சினார்கினியர் கூறுகிறார்.
  • சோழன் நெடுமுடிக்கிள்ளிக்கும் நாக நாட்டரசன் மகள் பீலவள்ளிக்கும் பிறந்தவன் தொண்டைமான் என்கிறது மணிமேகலை.
  • துரோணர் மகன் அசுவத்தாமனுக்கும், மதனி என்கிற அரக்கன் மகளுக்கும் பிறந்த பல்லவ மன்னனே தொடைமான் என்கிறார் இராகவையங்கார்

பொதுவான் குறிப்புகள்:

  • நீர்ப்பெயற்று என்னும் ஊரின் பழம் பெயர் “நீர்ப்பாயல்துறை”.
  • இங்கு மிகப்பெரிய கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டிருந்தது.
  • தொண்டைமானின் தலைநகரம் திருவெகஃகா.
  • திருவெகஃகா என்பது காஞ்சிபுரம்
  • யாழின் வருணனை, பாலை நிலத்தில் எயினர் குடியிருப்பு, காஞ்சி மாநகரத்தில் பற்பல சமயத்தாரும் கொண்டாடும் விழாக்கள் பற்றி கூறுகிறது.
  • நெல்லரிசி கொண்டு மது தயாரித்தல் பற்றி குறிப்பிடுகிறது.

முக்கிய அடிகள்:

  • பொழிமலை துறந்த புகைவேய் குன்றத்து
    பழுமரம் தேடும் பறவை போல
  • மணிவார்த் தன்ன மாயிரு மருப்பின்
    பொன்வார்த் தன்ன புரியடங்கு நரம்பு
  • முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டி நர்க்கும்
    வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கு அருளி
  • புனலோடு மகளிர் இட்ட பொலங்குழை
    இறைதேர் மணிச்சிரல் இரைசெத்து எரிந்து
 

No comments:

Post a Comment