Saturday 28 March 2015

பொருநராற்றுப்படை

பொருநராற்றுப்படை

பொருநராற்றுப்படையின் உருவம்:

  • பொருள் = ஆற்றுப்படை
  • திணை = புறத்திணை
  • பாவகை = வஞ்சியடிகள் கலந்த ஆசிரியப்பா
  • அடி எல்லை = 248(ஆற்றுப்படை நூல்களுள் சிறியது)

பொருநர்:

  • ஒருவரைப் போல வேடமிட்டுப் பாடுபவரை பொருநர் என்பர்.
  • பொருநராற்றுப்படை போர்க்களம் பாடும் பொருநரை கூறுகிறது.

புலவர், தலைவன்:

  • பாடிய புலவர் = முடத்தாமக் கண்ணியார்
  • பாட்டுடைத் தலைவன் = சோழன் கரிகாலன்

உரை:

  • இந்நூலிற்கு நச்சினார்க்கினியர் உரை உள்ளது.
  • மகாதேவ முதலியார் உரை

பெயர்க்காரணம்:

  • பொருநரைப் புரவலனிடம் பரிசில் பெற்ற பொருநன் ஆற்றுப்படுத்துவதாக அமைந்ததால் பொருநராற்றுப்படை எனப்பட்டது.

பொதுவான குறிப்புகள்:

  • கரிகாற் சோழன், பொருநரை அனுப்பும் போது  ஏழு அடி காலால் நடந்து சென்று வழியனுப்புவான்.
  • கரிகாலனின் வெண்ணிப்பறந்தலை வெற்றி கூறப்பட்டுள்ளது.
  • பொருநர் இசைவிழா, விரலி வருணனை, கரிகாற் சோழனின் விருந்து உபசரிப்பு போன்றவை கூறப்பட்டுள்ளது.
  • கரிகாலனின் வலிமையை “வெண்ணித்தாங்கிய வொருவரு நோன்றாள்” எனச் சிறப்பிக்கப்படுகிறது.
  • வறுமைக் கோலத்தோடு விளங்கிய ஆடையை நீக்கிப் பாம்பின் தோல் ஒத்த மெல்லிய ஆடையை கரிகாலன் வழங்குவான் எனப் கூறப்படுகிறது.

முக்கிய அடிகள்:

  • கொள்ளை உழுகொழு ஏய்ப்ப, பல்லே
    எல்லையும் இரவும் ஊன்றுகிறது மழுங்கி
  • ஆறுதலைக் கள்வர் படைவிட அருளின்
    மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை
  • சாறுகழி வழிநாள் சோறுநசை வறாது
    வேறுபுலம் முன்னிய விறகறிபொருந

No comments:

Post a Comment