Saturday 28 March 2015

கைந்நிலை

கைந்நிலை

கைந்நிலையின் உருவம்:

  • ஆசிரியர் = மாறோக்கத்து முள்ளி நாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லாங்காடனார்
  • பாடல்கள் = 60(5*12=60)
  • திணை = ஐந்து அகத்திணைகளும்
  • பாவகை = வெண்பா

பெயர்க்காரணம்:

  • கை = ஒழுக்கம்
  • ஐந்திணை ஒழுக்க நிலை கூறும் நூல் என்னும் பொருளில் “கைந்நிலை” எனப் பெயர் பெற்றது.

பொதுவான குறிப்புகள்:

  • இந்நூலின் சில பாடல்கள் சிதைந்து விட்டன
  • தற்போது உள்ளவை 43 வெண்பாக்களே
  • வடசொல் கலப்பு மிகுந்த நூல்
  • ஆசிரியர் பாண்டியனை “தென்னவன் கொற்கை” என்னும் தொடரால் குறிப்பிடுகிறார்

மேற்கோள்:

  • ஒத்த உரிமையளா ஊடற்கு இனியளாக்
  • குற்றம் ஒரூஉம குணத்தளாக் – கற்றறிஞர்ப்
    பேணும் தகையாளாக் கொண்கன் குறிப்பறிந்து
    நாணும் தகையளாம் பெண்
 

No comments:

Post a Comment