Tuesday 31 March 2015

அந்தாதி

அந்தாதி

  • அந்தாதி 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  • அந்தம் = இறுதி, ஆதி = முதல்
  • ஒவ்வொரு பாடலிலும் உள்ள இறுதி எழுத்தோ, அசையா, சீரோ அடியோ அதற்கு அடுத்து வரும் பாடலின் முதலாக வரும்படி அமைத்துப் பாடுவது அந்தாதி எனப்படும்.
  • இதனை “சொற்றொடர்நிலை” எனவும் கூறுவர்.
  • முதல் அந்தாதி நூல் = காரைக்கால் அம்மையாரின் “அற்புதத் திருவந்தாதி’

அந்தாதி வகைகள்:

  • பதிற்றுப் பத்தந்தாதி
  • யமாக அந்தாதி
  • திரிபந்தாதி
  • நீரோட்டக யமாக அந்தாதி

அந்தாதி நூல்கள்:

அற்புதத் திருவந்தாதி(முதல் நூல்)காரைக்கால் அம்மையார்
சரஸ்வதி அந்தாதி, சடகோபர் அந்தாதிகம்பர்
திருவேங்கடத்தந்தாதிபிள்ளை பெருமாள் ஐயங்கார்
திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி(குட்டித் திருவாசகம் எனப்படும்)அதிவீரராம பாண்டியன்
வீரை அந்தாதி, கோமதி அந்தாதிகாவடிசிந்து அண்ணாமலையார்

அற்புதத் திருவந்தாதி:

  • இந்நூலின் ஆசிரியர் = காரைக்கால் அம்மையார்
  • இவரின் இயற்பெயர் = புனிதவதி
  • இறைவனால் “அம்மையே” என அழைக்கப்பட்டவர்
  • 63 நாயன்மார்களில் கோவிலில் நின்றிருக்க இவர் மட்டுமே அமர்ந்த நிலையில் இருக்கும் பெருமை பெற்றவர்.
  • இவரின் பாடல்கள் மட்டும் “மூத்த திருப்பதிகம்” எனப் போற்றப்படும்
  • கட்டளை கலித்துறை, அந்தாதி, மாலை என்னும் சிற்றிலக்கிய வகைகளை தொடங்கி வைத்தவர்.
  • ஒரு பொருளை பல பொருளில் பாடும் பதிக மரபை தொடங்கி வைத்தவர்.

திருவேங்கடத் தந்தாதி:

  • இந்நூலின் ஆசிரியர் பிள்ளை பெருமாள் ஐயங்கார்
  • இவர், “அழகிய மணவாளதாசர், திவ்வியக்கவி” எனவும் அழைக்கப்படுவார்.
  • இவர் இயற்றிய எட்டு நூல்களின் தொகுதியை “அஷ்டப்பிரபந்தம்” என்று அழைப்பர்.
  • “அஷ்டப்பிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்” என்னும் பழமொழி இந்நூலின் உயர்வைப் வெளிப்படுத்தும்.
  • இவர் 1623 முதல் 1659 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரின் அவையில் ஓர் அலுவலராய் அமர்ந்து வாழ்க்கை நடத்தி வந்தார்.

No comments:

Post a Comment