Tuesday 5 July 2016

ஐந்தாண்டு திட்டங்கள்


ஆண்டு

திட்டத்தின் நோக்கம்

1

1951 - 1956

உணவு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது.

விவசாயம் மற்றும் சமுதாய மேம்பாடுபாசனம் மற்றும் மின்னுற்பத்திபோக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத் துறைசமூக சேவைகள் மற்றும் புனர்வாழ்வு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துதல்.
2

1956 - 1961

கிராமப் புற இந்தியாவை சீரமைத்தல், தொழில் துறை வளர்ச்சிக்கான அடிக்கல்லை நாட்டுதல்பின்தங்கிய மக்களின் வளர்ச்சிக்காக அதிக பட்ச வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் நாட்டின் அனைத்துப் பகுதிகளும் ஒரே சீராக வளர்ச்சி அடைவதை உறுதிசெய்தல்.
3

1961 - 1966

முதல் மற்றும் இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டங்களின் நீட்சியாக  இத்திட்டம் அமைந்தது. மேலும் நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தை நோக்கி இந்திய மக்களை இட்டுச்செல்லும் வழிகாட்டியாகவும் இது அமைந்தது.
4

1969 - 1974

மக்களின் வாழ்க்கைத் தரத்தை குறிப்பாக பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்.
உற்பத்தியைப் பெருக்குவது மட்டுமின்றி ஈட்டப்பட்ட செல்வத்தை மக்கள் அனைவருக்கும் சமமாகப் பிரித்து நாட்டின் செல்வமும் பொருளாதார சக்தியும் சில இடங்களில் மட்டுமே குவிந்திருக்காமல் அவற்றைப்
பரவலாக்குவது
5

1974 - 1979

உலக அளவில்உணவுப் பொருட்கள்உரம் போன்ற விவசாய இடுபொருட்கள் மற்றும் எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் பெரிதும் உயர்ந்தன.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது அவசரத் தேவையாக இருந்தது.

1974-75 இன் மத்தியில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பிற நாடுகளின் கவனத்தை ஈர்த்தது
6

1980 - 1985

வறுமை, வேலை இல்லாத் திண்டாட்டம் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றைக் களைதல்.
7

1985 - 1989

உணவு தானிய உற்பத்திவேலை வாய்ப்பைப் பெருக்குதல் மற்றும் மக்களின் உற்பத்தித் திறனைப் பெருக்குதல்
8

1992 - 1997

அதிகமான அளவில் வேலைவாய்ப்பினை உருவாக்குவதன் மூலம் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் முழு அளவு வேலைவாய்ப்பினை எட்டுதல்

மக்களின் ஒத்துழைப்பின் மூலமும் ஊக்கத்திட்டங்கள் மற்றும் ஊக்கத்தொகைகளை  விளக்கிக்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலமும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துதல்.
அனைவருக்கும் ஆரம்பக் கல்வி அளித்தல் மற்றூம் 15 முதல் 35 வயது வரை உள்ள மக்களிடத்து காணப்படும்
எழுத்தறிவின்மையைப் போக்குதல்


அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடி நீர் வழங்குதல்,அடிப்படை மருத்துவ வசதிகளை அளித்தல்நோய் தடுப்பு முறைகளை அளித்தல் மற்றும் தோட்டிப் பணிகளை அற்வே ஒழித்தல்

விவசாய வளர்ச்சிபல்வகைப் பயிர்களைப் பயிரிடல் மற்றும் ஏற்றுமதி  செய்யக் கூடிய அளவுக்கு தானிய உற்பத்தியைப் பெருக்குதல் மின்னாற்றல்போக்குவரத்துதகவல் தொடர்பு மற்றும் பாசனம் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கி வளர்ச்சிப் பணிகளைத் தடையின்றி நீடிக்கச் செய்தல்.
9

1997 - 2002

வேலை வாய்ப்பைப் பெருக்குதல் மற்றும் வறுமையை ஒழிப்பு ஆகியவற்றுக்காக விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளித்தல்

விலைவாசிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதே நேரத்தில் வளர்ச்சி வேகத்தை அதிகரித்தல்

அனைவருக்கும் - குறிப்பாக - பின்தங்கிய சமூகத்தினருக்கு - உணவு மற்றும் சத்துணவை உறுதி செய்தல்
அனைவர்க்கும் பாதுகாக்கப்பட்ட குடி நீர் அடிப்படை சுகாதார வசதிகள்அடிப்படைக் கல்விதங்குமிடம் ஆகியவற்றை குறித்த கால வரையறைக்குள் உறுதி செய்தல்

மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துதல்

அனைத்து நிலைகளிலும் உள்ள மக்களின் ஒத்துழைப்பு மற்றும் பங்கேற்பின் மூலம் வளர்ச்சிப் பணிகளின் காரணமாக சுற்றுச்சூழல்  பாதிக்கப் படாமல் காத்தல்

பெண்கள் மற்றும் சமுதாயத்தில் பின் தங்கிய - அட்டவனை இன மக்கள்பிற பின் தங்கிய இனத்தவர்கள் மற்றும் சிறுபான்மை இனத்தவர் ஆகியோருக்கு அதிகாரம் வழங்குதல்

பஞ்சாயத்து ராஜ்கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் ஆகியவற்றில் மக்களின் பங்களிப்பை அதிகரிக்க ஊக்கப்படுத்துதல்

சுய சார்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை வலுப்படுத்துதல்.
10

2002 - 2007

வறுமையைக் குறைப்பது

வேலைவாய்ப்பைப் பெருக்குவது

2007 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் அடிப்படைக் கல்வியை எட்டச் செய்வது

மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை 16.2 விழுக்காடாகக் குறைப்பது
2007 ஆம் ஆண்டுக்குள் கல்வி ஏற்றோர் எண்ணிக்கையை எழுபத்தைந்து விழுக்காடாக உயர்த்துவது

குழந்தை இறப்பு விகிதத்தை குறைப்பது

பேறுகாலத்தில் பெண்கள் இறக்கும் விகிதத்தைக் குறைப்பது

வனப் பரப்பை அதிகரிப்பது

2012 ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வழி செய்தல்

மாசு பட்ட அனைத்து ஆறுகளையும் 2007 ஆம் ஆண்டுக்குள் தூய்மைப் படுத்துவது.

11

2007 - 2012

மொத்த உள்நாட்டு உற்பத்தியை பெருக்குதல்,

வேலை வாய்ப்புகளை பெருக்குதல்,

ஆரம்பபள்ளிகளில் வசதிகளை பெருக்குதல்,

குழந்தை இறப்பு விகிதத்தை குறைத்தல்,

அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பை வழங்குதல்,

வனப் பரப்பளவை பெருக்குதல்.
12

2012 - 2017

பன்னிரண்டாம் ஐந்தாண்டு திட்டம் விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான கொள்கை வரைவினை இறுதி செய்யும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.

Monday 21 March 2016

TNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்

TNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்


தாவரவியல் - பூஞ்சைகள்
பூஞ்சைகள்
பூஞ்சைகள் மிகப் பெரிய உயிரினக் குழுக்களில் ஒன்று.
வளமற்ற மண்ணும்தாவரவிலங்கு கழிவுகளும் இவற்றின்தாக்கத்தால் மாற்றமடைந்து நிலத்துடன் சேர்வதால் நிலவளம்அதிகரிக்கிறது எனலாம்.

பூமியில் எல்லா வகை சுற்றுச்சுழல்களிலும் பூஞ்சைகள்காணப்படுகின்றனஇவை இருண்ட ஈரப்பசை நிரம்பிய இடங்களிலும்கனிம ஊட்டப்பொருட்கள் நிறைந்த வளர்தளங்களிலும் வளர்கின்றனய.
பூஞ்சைகளைப் பற்றிய தாவரவியல் பிரிவிற்கு மைகாலஜி (Mycology)என்று பெயர்
பூஞ்சைகள் பச்சயமற்ற தாலோபைட்டு வகையைச் சார்ந்தவை.இப்பூஞ்சைகளினால் ஏற்படும் வேதிவினை மாற்றங்கள் சுற்றுப்புறத்தில்மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
விட்டேக்கரின் ஐந்துலக வகைப்பாட்டில் பூஞ்சைகள் உலகம் மற்றும்தாவர உலகம் என்ற இரண்டு தனி உலகங்களாக வகைப்பட்டுள்ளது.
பொதுவாக பூஞ்சைகள் பல செல்களால் ஆன யூகேரியோட்டுகள்ஆகும்.
பூஞ்சைகள் மட்குண்ணிகள்ஒட்டுண்ணிகள் என இரண்டு வகையானவேறுபட்ட ஊட்ட முறைகளை கொண்டுள்ளது.
மட்குண்ணிகள் இறந்த மற்றும் அழுகிய அங்கக் பொருள்களின் மீதுவாழ்கின்றன.காரைசோபஸ்அகாரிகஸ்
பூஞ்சைகளின் உடலம் மைசீலியம் என்று அழைக்கப்படுகிறது.
மைசீலியங்கள் கிளைத்த மெல்லிய இழைகளால் ஆனவைஇந்தஇழைகளுக்கு ஹைபாக்கள் என்று பெயர்.
பூஞ்சைகளின் செல் சுவர் கைட்டின் மற்றும் பூஞ்சைசெல்லுலோஸினால் ஆனது.
மைசீலியம் வளரக்கூடிய தளத்திற்கு வளர்தளம் என்று பெயர்.
மைசீலியமானது மெல்லிய இழைகள் போன்ற ஹைபாக்களால் ஆனது.
ஈஸ்ட்டு போன்ற பூஞ்சைகள் ஒரு செல் உயிரினங்களாகும்
வண்ணான் படை அல்லது தேமல் போன்றவை பூஞ்சைகளால்மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களாகும்சில பூஞ்சைகள்மரப்பட்டையில் வளர்கின்றன.
மரக்கட்டையின் மீது வளர்வது சைலோபில்லஸ் அல்லது மரக்கட்டைபூஞ்சையாகும்.
முடி அல்லது மாட்டுக் கொம்பு போன்ற பொருளின் மீது வளர்பவைகெராட்டினோபில்லஸ் அல்லது கெரடின் பூஞ்சைகள் எனப்படும்.
சில பூஞ்சைகள் உயர்நிலைத் தாவரங்களின் வேர்களோடுகூட்டுயிரியாக வளர்கின்றனஇந்த வகை வேர்களுக்கு மைகோரைசாஎன்று பெயர்.
பூஞ்சைகளின் தனிப் பண்புகள்:
பூஞ்சையின் செல்களுக்கு செல் சுவர் உண்டுஇவை கைட்டின்எனப்படும் அசிட்டைல் குளுக்கோசமைன் அலகுகளால் ஆன ஒருபாலிமரினால் ஆனதுஇது ஒரு மியூக்கோ பாலிசாக்கரைடு வகையைச்சார்ந்தது.
பூஞ்சைகளில் பச்சையம் இல்லைஎனவே இவை பிறஊட்டமுறையைச் சார்ந்தவை.
பூஞ்சையில் சேமிப்புப் பொருள் தரசம்(ஸ்டார்ச்கிடையாதுதரத்திற்குபதிலாக சேமிப்பு பொருளாக எண்ணெய் மற்றும் கிளைக்கோஜன்உள்ளது.
பூஞ்சைகளின் உடல் அமைப்பு:
பூஞ்சைகள் நன்கு கிளைத்து மெல்லிய நூல் வடிவ ஹைஃபாக்கள்எனப்படும் இலைகளால் ஆனதுஹைஃபாக்கள் அனைத்தும் சேர்ந்துமைசீலியம் என்று அழைக்கப்படுகிறது.
ஹைஃபாக்களின் இடையில் செப்டம் எனப்படும் குறுக்குச்சுவர்களுடனோ அல்லது இல்லாமலோ பூஞ்சைகள் காணப்படலாம்.
குறுக்குச் சுவர் அற்ற ஹைஃபாக்களில் பல நியூக்ளியஸ்கள் உள்ளன.இதற்கு சீனோசைட்டிக் என்று பெயர்.
பூஞ்சைகளின் உணவூட்ட முறை:
பூஞ்சைகளிள் பிற ஊட்டமுறையைக் கொண்டவைதமது உடலத்துக்குவெளியே உள்ள ஊட்டப் பொருட்களை உறிஞ்சி எடுத்துக் கொள்கிறது.
எனவே பூஞ்சையில் உணவு செறித்தல் செல்லுக்கு வெளியே உள்ளநொதிகளின் உதவியால் செல்லுக்கு வெளியில் நடைபெறுகிறதுஇந்தஅம்சம் ஒர் வித்தியாசமான அம்சமாகும்.
பூஞ்சைகள் தனது ஊட்டத்தை மட்குண்ணிகளாகவோ(Decomposers),ஒட்டுண்ணிகளாகவோ (Parasite) அல்லது கூட்டுயிர்களாகவோ(Symbionts) பெறுகின்றன.
பூஞ்சைகள் கட்டாய ஒட்டுண்ணிக்ள் ஊடுருவவும்உறிஞ்சுவதற்கும்சில சிறப்பு அமைப்புக்களை உருவாக்குகின்றனஇவைஹாஸ்டோரியாக்கள் எனப்படுகின்றன.
ஹாஸ்டோரியாக்கள் என்பவை ஹைஃபாக்களின் மாறுபட்டவளர்ச்சியாகும்.
பூஞ்சைகளின் கூட்டுயிர் வாழ்க்கை:
பூஞ்சைகளின் இரு முக்கியக் கூட்டுயிர் வாழ்க்கையில் ஈடுபடுகின்றன.அவை: 1.லைக்கன்கள் 2. மைக்கோரைசாக்கள்.
ஆல்காக்களுக்கும்பூஞ்சைகளுக்கும் இடையே காணப்படும் கூட்டுயிர்வாழ்க்கை லைக்கன்கள் ஆகும்.
லைக்கன்கள் வகையில் காணப்படும் ஆல்காபச்சை ஆல்கா அல்லதுநீலப்பசும் ஆல்காபூஞ்சைகளில் ஆஸ்கோமைசீட்ஸ் அல்லதுபெசிடியோமைசீட்ஸ் வகுப்பைச் சார்ந்த பூஞ்சைகள் கூட்டுயிரிவாழ்க்கையை மேற்கொள்ளும்.
பூஞ்சைகளுக்கும்சில உயர் தாவர வேர்களுக்கும் இடையேகாணப்படும் கூட்டுயிர் வாழ்க்கையே மைக்கோரைசாக்கள் எனப்படும்.
இரு வகையான மைக்கோ ரைசாக்கள் காணப்படுகின்றன. 1.எக்டோடிராஃபிக் மைக்கோ ரைசாக்கள் 2. எண்டோடிராஃபிக்மைக்கோரைசாக்கள்.
மரங்களிலிருந்து பூஞ்சைகள் கார்போ ஹைட்ரேட்டையும்,வைட்டமின்களையும் பெறுகின்றனஅதற்குப் பதிலாக மண்ணின்மட்கில் காணப்படும் புரதங்களை அமினோ அமிலங்களாக பூஞ்சைகள்சிதைக்கின்றனஇவை எளிதாகத் தாவரங்களால் உறிஞ்சப்படுகின்றன.
பூஞ்சைகளின் வகைப்பாடு:
ஆல்காக்களுக்கு இணையான ஒரு வகுப்பாக கருதப்பட்டுதாலோஃபைட்டா என்ற பிரிவின் கீழ் தாவர உலகில்வகைப்படுத்தப்பட்டன.
வாஸ்குலார் திசுக்களற்ற வேர்தண்டுஇலை என்று பிரித்தறியமுடியாத உடலம் தாலஸ் ஆகும்.
பூஞ்சைகள் மிக்சோமைக்கோட்டாயூமைக்கோட்டா என இரு பெரும்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
மிக்சோமைக்கோட்டாவிற்கு எடுத்துக்காட்டு ஸ்லைம் மோல்டுகள்.
யூமைக்கேோட்டா என்ற பிரிவின் கீழ் ஐந்து துணைப் பிரிவுகள் உள்ளன.அவை: 1. மாஸ்டிகோ மைக்கோட்டினா 2. சைகோ மைக்கோட்டினா 3.ஆஸ்கோ மைகோட்டினா 4. பெசிடியோ மைசீட்டுகள் 5. டியூட்ரோமைசீட்டுகள் ஆகியன.
கருப்பு ரொட்டிக் காளான்கள் என்று அழைக்கப்படும் ரைசோபஸ்மற்றும் மியூக்கர்சைகோ மைகோட்டினா வகுப்பைச் சார்ந்தவை.
மியூக்கர் ஒரு மட்குண்ணிப் பூஞ்சையாகும்இது பொதுவாகஊசிக்காளான் என்று அழைக்கப்படுகிறதுகருப்பு ரொட்டிக் காளான்என்றும் இதை அழைப்பதுண்டுஇப்பேரினத்தில் 50 சிற்றினங்கள்உள்ளன.
மியூக்கர் சைகோ மைசீட்ஸ் வகுப்பைச் சேர்ந்ததுமியூக்கரின் ஒய்வுநிலையிலுள்ள ஸ்போர்கள் கிளாமிடோஸ்போர்கள் எனப்படும்.