Saturday 28 March 2015

களவழி நாற்பது

களவழி நாற்பது

களவழி நாற்பதின் உருவம்:

  • ஆசிரியர் = பொய்கையார்
  • பாடல் = 40
  • திணை = புறத்திணை – வாகைத்திணை
  • பாவகை = வெண்பா

பெயர்க்காரணம்:

  • களம் = போர்க்களம்.
  • போர்க்களம் பற்றிய நாற்பது பாடல்களைக் கொண்டதால் களவழி நாற்பது எனப் பெயர் பெற்றது.
  • இதனை தொல்காப்பியம்,
ஏரோர் களவழி அன்றிக் களவழித்
தேரோர் தோன்றிய வென்றியும்
- தொல்காப்பியம்

வேறு பெயர்:

  • பரணி நூலின் தோற்றுவாய்

பொதுவான குறிப்புகள்:

  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் சார்ந்த ஒரே நூல்.
  • சோழன் செங்கணாணும் சேரமான் கணைக்கால் இரும்பொறையும் போரிட்ட இடம் = போர்ப்புறம்(கழுமலம்)
  • சேரமான் சிறை வைக்கப்பட்ட இடம் = குடவாயில் கோட்டம்
  • சேரமானை விடுவிப்பதற்காக பொய்கையார் களவழி நாற்பது, சோழன் மீது பாடினார்.
  • நூலிற்கு பரிசாக சேரமானை விடுதலை செய்ய வேண்டினார். சோழனும் சம்மதம் தெரிவித்தான்.
  • ஆனால் சிறையில் தன்னை தரக்குறைவாக நடுதியதால் மானம் பெரிதென எண்ணி உயிர் விட்டான்.
  • சேரமான் புறநானூற்றில் பாடிய பாடல்,
குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆளன்று என்று வாளில் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத் தீத்தணியத்
தாம்இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இவ்வுலகத் தானே
  • இந்நூலில் கார்த்திகைத் திருவிழா சிறப்பாக உவமிக்கப்பட்டுள்ளது.
  • களவழி நாற்பதின் நாற்பது பாடல்களும் “அட்ட களத்து” என முடிவது தொல்காப்பியர் கூறும் அம்மை என்னும் வனப்பு வகையை சேர்ந்தது.

முக்கிய அடிகள்:

  • கடிகாவில் காற்று உற்று அறிய, வெடிபட்டு
  • வீற்றுவீற்று ஓடும் மயிலினம் போல் நாற்றிசையும்
  • கேளிர் இழந்தார் அலறுபவே, செங்கண்
  • சினமால் பொறுத்த களத்து
 

No comments:

Post a Comment