Tuesday 31 March 2015

உலா

உலா

  • “ஊரொடு தோற்றமும் உரிதென மொழிப” என்ற தொல்காப்பிய நூற்பா அடிப்படையில் தோன்றிய இலக்கியம் உலா இலக்கியம்
  • உலாவின் வேறு பெயர்கள் = பவனி, பெண்பாற் கைக்ள்கிளை
  • உலா வர பயன்படுவன = தேர், குதிரை, யானை
  • உலாவில் முன்னிலைப் பகுதி, பின்னிலைப் பகுதி என இரு பகுதிகள் உண்டு
  • தசாங்கம் உலா இலக்கியத்தில் இடம் பெரும்
  • முதல் உலா நூல் = திருக்கைலாய ஞானஉலா(ஆதி உலா அல்லது தெய்வீக உலா)
  • உலாவின் பாவகை = கலிவெண்பா
  • “கோவை உலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தர்”

முன்னிலைப் பகுதி:

  • முன்னிலைப் பகுதியில் தலைவனின் சிறப்புக் கூறப்படும்
  • ஏழு வகைப் பருவ ஆண்கள் கூறப்படுவர்
  • பாலன் = 1-7 வயது
  • மீளி = 8-10 வயது
  • மறவோன் = 11-14 வயது
  • திறலோன் = 15 வயது
  • காளை = 16 வயது
  • விடலை = 17-30 வயது
  • முதுமகன் = 30 வயதிற்கு மேல்

பின்னிலைப் பகுதி:

  • பின்னிலைப் பகுதியில் ஏழு பருவப் பெண்களின் காமம் கூறப்படும்.
  • ஏழு வகைப் பருவ மகளிர்
  • பேதை = 5-7 வயது
  • பெதும்பை = 8-11 வயது
  • மங்கை = 12-13 வயது
  • மடந்தை = 14-19 வயது
  • அரிவை = 20-25 வயது
  • தெரிவை = 26-32 வயது
  • பேரிளம் பெண் = 33-40 வயது

உலாவின் நூல்கள்:

திருக்கைலாய ஞான உலாசேரமான் பெருமாள் நாயனார்
மூவருலாஒட்டக்கூத்தர்
ஆளுடைய பிள்ளை திரு உலா மாலைநம்பியாண்டார் நம்பி
ஏகாம்பரநாதர் உலாஇரட்டையர்கள்
திருவாரூர் உலாஅந்தக்கவி வீரராகவர்
திருக்கழுகுன்ற உலாஅந்தக்கவி வீரராகவர்
திருகுற்றாலனாதர் உலாதிரிகூட ராசப்ப கவிராயர்
தில்லை உலாஒட்டக்கூத்தர்
சிவந்த்தெழுந்த பல்லவராயன் உலாபடிக்காசுப் புலவர்

மூவருலா:

  • இந்நூலின் ஆசிரியர் = ஓட்டக்கூத்தர்
  • “கோவை உலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தர் “ எனச் சிறப்பிக்கப்படுபவர்.
  • மூவருலா என்பது மூன்று சோழ மன்னர்களை பற்றியது.
  • இதில் விக்ரமசோழ உலா, குலோத்துங்க சோழ உலா, இராசராசசோழன் உலா ஆகிய மூன்று உலாக்கள் உள்ளன.

விக்ரமசோழன் உலா:

  • முதற் குலோத்துங்கசோழனின் நான்காவது மகன் விக்ரமசோழன்.
  • அவனின் தயார் மதுராந்தகி.
  • இவர் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்தார்.

திருக்கைலாய ஞான உலா:

  • இதன் ஆசரியர் சேரமான் பெருமாள் நாயனார்
  • இந்நூலை “தெய்வீக உலா, ஆதி உலா” என்றும் கூறுவர்.
  • உலா நூல்களில் இதுவே முதல் நூல்.
 

No comments:

Post a Comment