Saturday 28 March 2015

புறநானூறு

புறநானூறு

புறநானூற்றின் உருவம்:

  • திணை   = புறத்திணை
  • பாவகை   = ஆசிரியப்பா
  • பாடல்கள் = 400
  • புலவர்கள் = 157
  • அடி எல்லை = 4-40

பெயர்க்காரணம்:

  • புறம் + நான்கு + நூறு = புறநானூறு
  • நூலின் பெயரிலேயே புறம் என்று புறத்திணைப் பாகுபாடு புலப்பட உள்ள நூல் இது மட்டுமே.
  • புறத்திணை சார்ந்த நானூறு பாடல்கள் கொண்டதால் புறநானூறு எனப் பெயர் பெற்றது.

வேறு பெயர்கள்:

  • புறம்
  • புறப்பாட்டு
  • புறம்பு நானூறு
  • தமிழர் வரலாற்று பெட்டகம்
  • தமிழர் களஞ்சியம்
  • திருக்குறளின் முன்னோடி.
  • தமிழ்க் கருவூலம்

தொகுப்பு:

  • இந்நூலை தொகுத்தவர் தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.

உரை, பதிப்பு:

  • முதல் 266 பாடல்களுக்கு பழைய உரை உள்ளது.
  • 267-400 பாடல்களுக்கு உ.வே.சா உரை உள்ளது.
  • நூலினை முதலில் பதிப்பித்தவர் = உ.வே.சா

கடவுள் வாழ்த்து:

  • இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • இந்நூலில் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் = சிவபெருமான்
புறநானூறு பாடிய பெண்பாற் புலவர்கள் = 15 பேர்:
ஔவையார்பாரி மகளிர்
வெண்ணிக் குயத்தியார்ஒக்கூர் மாசாத்தியார்
காவற்பெண்டுபெருங்கோப் பெண்டு

பொதுவான குறிப்புகள்:

  • புறநானூற்றில் 11 திணைகளும், 65 துறைகளும் கூறப்பட்டுள்ளன.
  • புறநானூற்றில் கூறப்படாத திணை = உழிஞைத் திணை.
  • 244,282,289,323,355,361 ஆகிய என்னுடைய பாடல்களுக்கு தினைப் பெயர் தெரியவில்லை.
  • ஆசிரியபாவால் அமைந்திருந்தாலும் வஞ்சி அடிகளும் உள்ளது.
  • பெண்களின் வீரத்தைக் கூறும் துறை மூதின் முல்லை
  • கரிகாலன் போர் செய்த இடம் = வெண்ணிப் பரந்தலை
  • பாண்டியன் நெடுஞ்செழியன் போர் செய்த இடம் = தலையானங்கானம்
  • சோழர்கள் மௌரியர்களைத் தோற்கடித இடம் = வல்லம்
  • புறநானூற்றில் மிக அதிக பாடலை பாடியவர் = ஔவையார்.
  • ஜி.யு.போப் அவர்களை கவர்ந்த நூல் புறநானூறு. இந்நூலின் சில பாடல்களை அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
  • 15 பாண்டியர்கள், 18 சோழர்கள், 18 சேரர்கள், 18 வேளிர்களைப் பற்றி கூறுகிறது புறநானூறு.
  • புறநானூறில் 10 வகை ஆடைகள், 28 வகை அணிகலன்கள், 30 வகை படைக்கருவிகள், 67 வகை உணவுகள் கூறப்பட்டுள்ளன.
  • மேல் சாதி கீழ் சாதிப் பாகுபாடு இருப்பினும் அதனை கல்வி நீக்கும் என கூறுகிறது.

முக்கிய அடிகள்:

  • செல்வத்துப் பயனே ஈதல்
  • துய்ப்போம் எனினே தப்புந பலவே
  • யாதும் ஊரே யாவரும் கேளிர்
  • உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
  • உண்பது நாழி உடுப்பது இரண்டே
  • ஈயென இறத்தல் இழிந்தன்று, அதனெதிர்
    ஈயோன் என்றல் அதனினும் இழிந்தன்று
  • நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
    மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்
  • நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
    அல்லது செய்தல் ஓம்புமின்
 

No comments:

Post a Comment