Tuesday 31 March 2015

பிள்ளைத்தமிழ்

பிள்ளைத்தமிழ்

  • முதல் பிள்ளைத்தமிழ் நூல் = ஒட்டக்கூத்தரின் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
  • பெரியவர்களை குழந்தையாக பாவித்து பாடுதல் ஆகும்
  • இதனை “பிள்ளை கவி, பிள்ளைப் பாட்டு” எனவும் கூறுவர்
  • இது இரு வகைப்படும் = ஆண் பால் பிள்ளைத்தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ்
  • பிள்ளைத்தமிழ் பாடாமல் விலக்கு அளிக்கப்பட்ட கடவுள் = சிவன்

ஆண் பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள்:

  • காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்.

பெண்பாற் பிள்ளைத்தமிழ் பருவங்கள்:

  • காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மானை, கழங்கு(நீராடல்), ஊசல்.

பிள்ளைத்தமிழ் நூல்கள்:

குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்(முதல் நூல்)ஒட்டக்கூத்தர்
மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ்குமரகுருபரர்
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்குமரகுருபரர்
திருச்செந்தூர் முருகன்
பிள்ளைத்தமிழ்(பெரிய தமிழ்)
பகழிக் கூத்தர்
காந்தியம்மை பிள்ளைத்தமிழ்அழகிய சொக்கநாதர்
சேக்கிழார் பிள்ளைத்தமிழ்மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்அந்தக்கவி வீரராகவர்

முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்:

  • இதன் ஆசிரியர் குமரகுருபரர்
  • பெற்றோர் – சண்முகசிகாமணிக் கவிராயர், சிவகாமி சுந்தரியம்மை
  • ஊர் – திருவைகுண்டம்
  • இயற்றிய நூல்கள் – கந்தர்கலிவெண்பா, மதுரை மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம் முதலியன.
  • சிறப்பு – தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர். திருப்பணந்தாளிலும், காசியிலும் தம்பெயரால் மேடம் நிறுவி உள்ளார்.
  • இறப்பு – காசியில் இறைவனடி சேர்ந்தார்.
  • காலம் – பதினேழாம் நூற்றாண்டு.
 

No comments:

Post a Comment