Saturday 28 March 2015

அகநானூறு

அகநானூறு

அகநானூற்றின் உருவம்:

  • திணை = அகத்திணை
  • பாவகை = ஆசிரியப்பா
  • பாடல்கள் = 400
  • பாடியோர் = 145
  • அடி எல்லை = 13-31

பெயர்க்காரணம்:

  • அகம் + நான்கு + நூறு = அகநானூறு
  • அகத்திணை பற்றிய நானூறு பாடல்கள் கொண்டுள்ளதால் அகநானூறு எனப் பெயர் பெற்றது.

வேறு பெயர்கள்:

  • அகம்
  • அகப்பாட்டு
  • நெடுந்தொகை
  • நெடுந்தொகை நானூறு
  • நெடும்பாட்டு
  • பெருந்தொகை நானூறு

தொகுப்பு:

  • தொகுத்தவர் = உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மனார்
  • தொகுப்பித்தவர் = பாண்டியன் உக்கிர பெருவழுதி

உரை, பதிப்பு:

  • நூலிற்கு முதலில் உரை எழுதியவர் = நா.மு.வேங்கடசாமி நாட்டார்
  • நூலை முதலில் பதிப்பித்தவர் = வே. இராசகோபால் ஐயர்

நூலின் மூவகை பாகுபாடுகள்:

  • 1-120 = களிற்றியானை நிரை
  • 121-300 = மனிமிடைப்பவளம்
  • 301-400 = நித்திலக்கோவை

தினைப் பாகுபாடு:

  • 1,3,5,7,9 என வருவன = பாலைத்திணை( 200 பாடல்கள்)
  • 2,8,12,18 என வருவன = குறிஞ்சித்திணை( 80 பாடல்கள்)
  • 4,14,24 என வருவன = முல்லைத்திணை( 40 பாடல்கள்)
  • 6,16,26 என வருவன = மருதத்திணை( 40 பாடல்கள்)
  • 10,20,30 என வருவன = நெய்தல் திணை( 40 பாடல்கள்)
ஒன்றுமூன்று ஐந்துஏழ்ஒன் பான்பாலை; ஓதாது
நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை; அன்றியே
ஆறாம் மருதம்; அணிநெய்தல் ஐயிரண்டு
கூறாதவை குறிஞ்சிக் கூற்று

பாலைவியம் எல்லாம்; பத்தாம் பனிநெய்தல்
நாலு நளிமுல்லை; நாடுங்கால் மேலையோர்
தேரும் இரண்டொட்டு இவைகுறிஞ்சி; செந்தமிழின்
ஆறு மருதம் அகம்

அகநானூறு குறிப்பிடும் அரசர்கள்:

அதியமான்எழினி
சோழன் கரிகாலன்பாண்டியன் நெடுஞ்செழியன்
உதியஞ் சேரலாதன்ஆதிமந்தி

கடவுள் வாழ்த்து:

  • இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • இந்நூலில் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் = சிவபெருமான்

பொதுவான குறிப்புகள்:

  • சோழர்களின் குடவோலைத் தேர்தல் முறையை பற்றி கூறுகிறது.
  • சங்க இலக்கியங்களுள் வரலாற்று செய்திகளை அதிகமாக கூறும் நூல் அகநானூறு.
  • பண்டைய தமிழ் மக்களின் திருமண விழ நடைபெறும் விதம் பற்றி கூறுகிறது.
  • அலெக்சாண்டரின் படையெடுப்புக்கு அஞ்சி நந்தர்கள் தமது செல்வங்களை எல்லாம் கங்கையாற்றின் அடியில் புதைத்து வைத்த செய்தி 20,25ஆம் பாடல்களில் கூறப்பட்டுள்ளது.

பாடல் அடிகள்:

  • இம்மை உலகத்து இசையோடும் விளங்கி
    மறுமை யுலகமும் மறுவின்றி எய்துப
    செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
    சிறுவர்ப் பயந்த செம்ம
  • நாவோடு நவிலா நகைபடு தீஞ்சசொல்
    யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வன்
  • யவனர் தந்த வினைமாண் நன்கலம்
    பொன்னோடு வந்து கறியோடு பெயரும்
  • செந்தார்ப் பைங்கிளி முன்கை ஏந்தி
    இன்றுவரல் உரைமோ சென்றிசினோர் திறத்தென
    இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென
    மழலை இன்சொல் பயிற்றும்
 

No comments:

Post a Comment