Saturday 28 March 2015

சங்க இலக்கியங்கள், எட்டுத்தொகை நூல்கள்

சங்க இலக்கியங்கள்

  • சங்க இலக்கியங்கள் எனப்படுவது = எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
  • இவ்விரண்டையும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்பர்.
  • பதினெண்மேற்கணக்கு நூல்களின் இலக்கணம் கூறும் நூல் = பன்னிரு பாட்டியல்
ஐம்பது முதலா ஐந்நூறு ஈறா
ஐவகை பாவும் பொருள்நெறி மரபின்
மதுராபுரிச் சங்கம் வைத்தும்
மகாபாரதம் தமிழ்ப் படுத்தும்
தொகுக்கப் படுவது மேற்கணக் காகும்
- பன்னிரு பாட்டியல்
  • தொகை நூல்கள் என்ற வார்த்தையை கையாண்டவர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பேராசிரியர் ஆவார்.
  • சங்க இலக்கியங்களை சான்றோர் செய்யுட்கள் எனக் கூறியவர் தொல்காப்பிய உரையாசிரியர் பேராசியர் ஆவார்.

எட்டுத்தொகை நூல்கள்

நூல்கள்:

  • எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர்.
  • எட்டுத்தொகை நூல்கள் மொத்தம் எட்டு. இதன் நூல் பெயர்களை பழம் பெரும் பாடல் ஒன்று கூறுகிறது.
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம்புறமென்று
இத்திறத்த எட்டுத்தொகை
  • எட்டுத்தொகை நூல்கள் = நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு.
  • எட்டுத்தொகையில் அகம் பற்றிய நூல்கள் = 5 (நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு)
  • எட்டுத்தொகையில் புறம் பற்றிய நூல்கள் = 2 (பதிற்றுப்பத்து, புறநானூறு)
  • எட்டுத்தொகையில் அகமும் புறமும் கலந்த நூல் = 1 (பரிபாடல்)
  • எட்டுத்தொகையில் நானூறு என்னும் எண்ணிக்கையில் குறிக்கப்படும் நூல்கள் = 4 (நற்றிணை நானூறு, அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை நானூறு)
  • எட்டுத்தொகையில் எண்ணிக்கையால் பெயர் பெறாத நூல்கள்  = 2 (கலித்தொகை, பரிபாடல்)
  • கலிப்பா வகையால் ஆன நூல் = கலித்தொகை
  • பரிபாட்டு வகையால் ஆன நூல் = பரிபாடல்
  • மற்ற ஆறு நூல்களும் ஆசிரியப்பாவால் ஆனது.
  • முதலும் முடிவும் கிடைக்காமல் இருக்கும் எட்டுத்தொகை நூல்கள் = 2 (பதிற்றுப்பத்து, பரிபாடல்)
  • எட்டுத்தொகை நூல்களுள் காலத்தால் முந்தியது = புறநானூறு
  • எட்டுத்தொகை நூல்களுள் காலத்தால் பிந்தியது = பரிபாடல், கலித்தொகை
  • எட்டுத்தொகை நூல்களுள் முதன் முதலாக தொகுக்கப்பட்ட நூல் = குறுந்தொகை
நூல்புலவர்பாடல்அடிபொருள்தொகுத்தவர்தொகுபித்தவர்கடவுள் வாழ்த்து பாடியவர்தெய்வம்
நற்றிணை1754009-12அகம்தெரியவில்லைபன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதிபாரதம் பாடிய பெருந்தேவனார்திருமால்
குறுந்தொகை2054004-8அகம்பூரிக்கோதெரியவில்லைபாரதம் பாடிய பெருந்தேவனார்முருகன்
ஐங்குறுநூறு55003-6அகம்புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறைபாரதம் பாடிய பெருந்தேவனார்சிவன்
பதிற்றுபத்து8100(80)8-57புறம்தெரியவில்லைதெரியவில்லை  
பரிபாடல்1370(22)25-400அகம் + புறம்தெரியவில்லைதெரியவில்லை  
கலித்தொகை515011-80அகம்நல்லந்துவனார்தெரியவில்லைநல்லந்துவனார்சிவன்
அகநானூறு14540013-31அகம்உருத்திர சன்மனார்பாண்டியன் உக்கிரப்பெருவழுதிபாரதம் பாடிய பெருந்தேவனார்சிவன்
புறநானூறு1584004-40புறம்தெரியவில்லைதெரியவில்லைபாரதம் பாடிய பெருந்தேவனார்சிவன்
எட்டுத்தொகை நூல்களின் சிறப்பு பெயர்கள்:
எட்டுத்தொகை நூல்கள்வேறு பெயர்கள்
எட்டுத்தொகை
  • எண்பெருந்தொகை
நற்றிணை
  • நற்றிணை நானூறு
  • தூதின் வழிகாட்டி
குறுந்தொகை
  • நல்ல குறுந்தொகை
  • குறுந்தொகை நானூறு
ஐங்குறுநூறு 
பதிற்றுப்பத்து
  • இரும்புக் கடலை
பரிபாடல்
  • பரிபாட்டு
  • ஓங்கு பரிபாடல்
  • இசைப்பாட்டு
  • பொருட்கலவை நூல்
  • தமிழின் முதல் இசைபாடல் நூல்
கலித்தொகை
  • கலி
  • குறுங்கலி
  • கற்றறிந்தோர் ஏத்தும் கலி
  • கல்விவலார் கண்ட கலி
  • அகப்பாடல் இலக்கியம்
அகநானூறு
  • அகம்
  • அகப்பாட்டு
  • நெடுந்தொகை
  • நெடுந்தொகை நானூறு
  • நெடும்பாட்டு
  • பெருந்தொகை நானூறு
புறநானூறு
  • புறம்
  • புறப்பாட்டு
  • புறம்பு நானூறு
  • தமிழர் வரலாற்று பெட்டகம்
  • தமிழர் களஞ்சியம்
  • திருக்குறளின் முன்னோடி.

No comments:

Post a Comment