Tuesday 31 March 2015

தமிழ்ப்பணி - உ.வே.சா-தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

தமிழ்ப்பணி - உ.வே.சா

வாழ்க்கைக்குறிப்பு:

  • இயற் பெயர் = வேங்கடரதினம்
  • பெற்றோர் = வேங்கடசுப்பையா, சரஸ்வதி அம்மையார்
  • ஊர் = திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரம்
  • ஆசிரியர் = மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
  • இசை ஆசிரியர் = சோமசுந்தர பாரதியார்
  • காலம் = 19.02.1855 முதல் 28.04.1942

சிறப்பு பெயர்கள்:

  • “தமிழ்த் தாத்தா”(கல்கி)
  • மகாமகோபாத்தியாய(சென்னை ஆங்கில அரசு)
  • குடந்தை நகர் கலைஞர்(பாரதி)
  • பதிப்பு துறையின் வேந்தர்
  • திராவிட வித்ய பூஷணம்(பாரத தருமா மகா மண்டலத்தார்)
  • தட்சினாத்திய கலாநிதி(சங்கராச்சாரியார்)
  • டாக்டர்(சென்னைப் பல்கலைக்கழகம்)

படைப்புகள்:

  • மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம்
  • புதியதும் பழையதும்
  • கண்டதும் கேட்டதும்
  • நினைவு மஞ்சரி
  • என் சரிதம்(வாழ்க்கை வரலாறு)
  • மணிமேகலை கதை சுருக்கம்
  • உதயணன் கதை சுருக்கம்
  • சிலப்பதிகாரக் கதைச் சுருக்கம்
  • திருக்குறளும் திருவள்ளுவரும்
  • மத்தியார்ச்சுன மான்மியம்
  • புத்தர் சரித்திரம்
  • தியாகராச செட்டியார் சரித்திரம்
  • நல்லுரைக்கோவை
  • சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்

கவிதை நூல்கள்:

  • கயர்கண்ணிமாலை
  • தமிழ்ப்பா மஞ்சரி

குறிப்பு:

  • இவரின் ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் இவருக்கு இட்ட பெயர் = சாமிநாதன்
  • உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனான சாமிநாதன் என்பதன் சுருக்கமே “உ.வே.சா”
  • குடந்தை, சென்னை போன்ற இடங்களில் உள்ள அரசினர் கலைக் கல்லோரிகளில் பேராசிரியராக பணி புரிந்தார்
  • இவர் தமிழ் கற்றது = சடகோப அய்யங்காரிடம்
  • இவரை பதிப்பு துறையில் ஈடுபட வைத்தவர் = சேலம் இராமசாமி முதலியார்
  • இவரின் நெருங்கிய நண்பர் = தியாகராஜா செட்டியார்
  • இவருக்கு சங்க இலக்கியங்களை அறிமுகம் செய்தவர் = சேலம் இராமசாமி செட்டியார்
  • இவர் பதிபித்த முதல் நூல் = வேனுலிங்க விலாசச் சிறப்பு
  • இவர் பதிபித்த முதல் காப்பியம் = சீவக சிந்தாமணி
  • இவர் பதிபித்த மொத்த நூல்கள் = 87
  • தம் வீட்டிற்கு நண்பரின் பெயரை வைத்தவர் = தியாகராச விலாசம்
  • இவர் மறைந்த இடம் = திருக்கழுக்குன்றம்

சிறப்பு:

  • தமிழில் முதன்முதலில் டாக்டர்(மதிப்பில்) பட்டம் பெற்றவர் இவரே
  • சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு D.Litt பட்டம் வழங்கியது
  • 1942இல் உ.வே.சா நூல்நிலையம் சென்னை பெசன்ட் நகரில் தொடங்கப்பட்டது.
  • ஆங்கில அரசினரால் இவருக்கு “மகாமகோபாத்தியாய” பட்டம் வழங்கப்பட்டது
  • இவர் பணியாற்றிய மாநிலக் கல்லூரியில் இவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. மேலும் மதுரை தல்லாகுளம் அருளுமிகு பெருமாள் கோயில் முன்புறமும் உள்ளது
  • உ.வே.சா நினைவு இல்லம் உத்தமதானபுரத்தில் உள்ளது.
  • உ.வே.சா அவர்களின் தமிழ்ப் பணிகளி வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூழியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
  • நடுவண் அரசு 2006ம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிட்டது.
  • பாரதியார் இவரை,
குடந்தை நகர்க் கலைஞர் கோவே
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
காலமெல்லாம் புலவர் வாயில்
துதியறிவாய் எவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்
சிறப்பின்றித் துலங்குவாயே
  • செல்லின் வாயில் சென்ற தமிழை மீட்டுக் காத்த தமிழ் தாத்தா என்பர்
  • ஏட்டில் புதைந்து கிடந்த தமிழை நாடறியச் செய்த பெருமை இவரையே சாரும்

தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

வாழ்க்கைக் குறிப்பு:

  • ஊர் = சென்னை சிந்திரிப் பேட்டை
  • தந்தை = பொன்னுசாமி கிராமணி

சிறப்பு பெயர்:

  • பல்கலைச் செல்வர்(திருவாவடுதுறை ஆதீனம்)
  • பன்மொழிப் புலவர்(குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்)
  • பெருந்தமிழ் மணி(சிவபுரி சன்மார்க்க சபை)
  • நடமாடும் பல்கலைக்கழகம்(திரு.வி.க)
  • இலக்கிய வித்தகர்

நூல்கள்:

  • வள்ளுவரும் மகளிரும்
  • அன்பு முடி
  • கால்டுவெல் ஒப்பிலக்கணம்
  • தமிழா நினைத்துப்பார்
  • நீங்களும் சுவையுங்கள்
  • வள்ளுவர் கண்ட நாடும் காமமும்
  • பிறந்தது எப்படியோ?
  • கானல்வரி
  • சமணத்தமிழ் இலக்கிய வரலாறு
  • கல்விச் சிந்தனைகள்
  • தமிழ் மணம்
  • தமிழும் பிற பண்பாடும்
  • வாழும் கலை
  • தமிழ் மொழி வரலாறு
  • மொழியியல் விளையாட்டுக்கள்
  • பத்துப்பாட்டு ஆய்வு

ஆங்கில நூல்கள்:

  • A History of Tamil Language
  • A History of Tamil Literature
  • Philosophy of Thiruvalluvar
  • Advaita in Tamil
  • Tamil – A Bird’s eye view

குறிப்பு:

  • இவர் தமிழ் வித்துவான் தேர்வில் மாநிலத்தில் முதல் மாணவராக வெற்றிப் பெற்றார்
  • சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார்
  • அரிஜனங்களுக்கு இரவுப்பள்ளி தொடங்கினார்
  • மொழியியல் துறையை மொழியியல் உயராய்வு மையமாக மாற்றினார்
  • சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழ்க் கல்வி தொடங்கிய பொது அங்குத் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்
  • இவர் பத்மபூஷன் விருதும், கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்

சி.இலக்குவனார்

வாழ்க்கைக் குறிப்பு:

  • இயற் பெயர் = இலட்சுமணன்
  • ஊர் = தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள வாயமைமேடு
  • பெற்றோர் = சிங்காரவேலு தேவர், இரத்தினம் அம்மாள்

புனைப் பெயர்:

  • தொல்காப்பியன்

படைப்பு:

  • எழிலரசி
  • மாணவர் ஆற்றுப்படை
  • அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து
  • அமைச்சர் யார்?
  • எல்லோரும் இந்நாட்டு அரசர்
  • தமிழ் கற்பிக்கும் முறை
  • வள்ளுவர் வகுத்த அரசியல்
  • வள்ளுவர் கண்ட இல்லறம்
  • பழந்தமிழ்
  • தொல்காப்பிய ஆராய்ச்சி விளக்கம்
  • இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்
  • கருமவீரர் காமராசர்
  • A brief study of Tamil words
  • The Making of Tamil Grammar

தன் வரலாறு நூல்:

  • எனது வாழ்க்கைப் போர்

குறிப்பு:

  • இலட்சுமணன் என்ற தம் பெயரை சாமி சிதம்பரனார் இலக்குவணன் என் மாற்றிக் கொண்டார்
  • இவர் தமிழாசிரியராகப் பணி புரிந்தவர்
  • இவர் தமிழ் பாதுக்காப்புக் கழகம் தொடங்கினார்
  • தொல்காப்பியத்தில் மிகுத்த ஈடுபாடு கொண்டவர். அதனால் “தொல்காப்பியன்” என்ற புனை பெயரை வைத்துக்கொண்டார்
 

1 comment:

  1. பலருக்கும் பயன்படும் நல்ல தொகுப்பு...ஒரு சிறிய திருத்தம்..உ.வே.சா வின் இசை ஆசிரியர் : கோபால கிருஷ்ண பாரதியார்

    ReplyDelete