Saturday 28 March 2015

நெடுநல்வாடை

நெடுநல்வாடை

நெடுநல்வாடையின் உருவம்:

  • திணை = முல்லைத்திணை, வஞ்சித்திணை(அகமும் புறமும் கலந்த நூல்)
  • பாவகை = ஆசிரியப்பா
  • அடி எல்லை = 188

பெயர்க்காரணம்;

  • தலைவன் பிரிவால் வருந்தும் தலைவிக்கு நெடிய வாடையாகவும், கடமையாற்றும் வேந்தனுக்கு நல்வாடையாகவும் திகழ்வதால் நெடுநல்வாடை என் ஆயிற்று.
  • நெடுமை + நன்மை + வாடை = நெடுநல்வாடை

வேறு பெயர்கள்:

  • பத்து பாட்டின் இலக்கிய கருவூலம்
  • மொழிவளப் பெட்டகம்
  • சிற்பப் பாட்டு
  • தமிழ்ச் சுரங்கம்(திரு.வி.கா)

புலவர், தலைவன்:

  • பாடிய புலவர் = நக்கீரர்
  • பாட்டுடைத் தலைவன் = தலையானங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

உரை:

  • கோதண்டபாணி பபிள்ளை உரை
  • வேங்கடா செட்டியார் உரை

திரு.வி.காவின் கூற்று;

  • நூலின் பெயர் காரணத்தை திரு.வி.க அவர்கள், “வாடை துன்பத்தைக் குறிக்கும்; நல்ல என்பது அன்பை குறிக்கும்; நெடு என்பது அழியாமையை குறிக்கும்; எனவே அழியாது நீளும் நல்வாடை” என்றார்.
  • திரு.வி.க அவர்கள்,”ஒரு சிறு புல் நுனியில் மருவும் ஒரு பனித்துளியிடை ஒரு பெரிய ஆலமரம் காட்சி தருவது போல சிறிய நெடுநல்வாடையில் பெரிய உலகம், உயிர், அன்புத் தெய்வம் இவற்றின் திறன்கள் முதலியன காட்சி தருகின்றன” என்றார்.
  • திரு.வி.க அவர்கள், “நெடுநல்வாடை ஒரு பெருஞ்சுரங்கம்; நக்கீரர் கண்ட சுரங்கம்; தமிழ்ச்சுரங்கம்” என நூலை பாராட்டுகிறார்.

பொதுவான குறிப்புகள்:

  • நெடுநல்வாடை பாட்டு தலைவனாக பாண்டியன் நெடுஞ்செழியனை குறிக்கிறது எனக் கூறியவர் நச்சினார்கினியர் ஆவார்.
  • “கொற்றவை வழிபாடே பாட்டின் நடுமணியாகப் பதிந்துள்ள வைரம்” என்கிறார் மு.வரதராசனார்
  • பாண்டிமாதேவியைப் “புனையா ஓவியம்” என வருணிக்கின்றது இந்நூல்.
  • இதில் கூறப்பட்டுள்ள பாசறை = கூதிர் பாசறை
  • பேராசிரயர் சுந்தரம்பிள்ளை, இந்நூலை,
பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையும் இலக்கிணமில் கற்பனையே
எனப் புகழ்கிறார். 

முக்கிய அடிகள்:

  • குன்று குளிர்ப்பன்னக் கூதிர்ப்பானாள்
  • வேம்புதலை யாத நோன்காழ் எஃகம்
  • சிலரொடு திரிதரும் வேந்தன்
    பலரொடு முரணிய பாசறைத் தொழிலே
  • மா மேயல் மறப்ப மந்தி கூர
  • பறவை பதிவான வீழ, கறவை
    கன்று கோள் ஒழியக் கடிய வீசி
 

No comments:

Post a Comment