Tuesday 31 March 2015

கலம்பகம்

கலம்பகம்

  • பல்வகை வண்ணமும், மனமும் கொண்ட மலர்களால் கட்டப்பட்டக் கதம்பம் போன்று பல்வகை உறுப்புகளைக் கொண்டு அகம், புறமாகிய பொருட்கூறுகள் கலந்து வர பல்வகைச் சுவைகள் பொருந்தி வருவதால் ‘கலம்பகம்” எனப் பெயர் பெற்றது.
  • கலம் + பகம் = கலம்பகம்
  • கலம் = 12
  • பகம் = 6
  • கலம்பகம் 18 உறுப்புகளைக் கொண்டது.
  • கலம்பகத்தின் இலக்கணம் கூறும் நூல் = பன்னிரு பாட்டியல்
  • முதல் கலம்பக நூல் = நந்திக் கலம்பகம்(ஆசிரியர் பெயர் தெரியவில்லை)
  • “கன்பாய கலபகத்திற்கு இரட்டையர்கள்” எனக் கூறப்படும்
  • அந்தாதி தொடை அமையப் பாடப்படும் சிற்றிலக்கியம் கலம்பகம்
  • அகப்பொருளும் புறப்பொருளும் கலந்து பாடப்படும்
  • கதம்பம் என்பது கலம்பகம் என்று திரிந்ததாக கூறுவார் உ.வே.சா

கலம்பக நூல்:

நந்திக் கலம்பகம்(முதல் கலம்பக நூல்)ஆசிரியர் பெயர் தெரியவில்லை
ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்நம்பியாண்டார் நம்பி
திருவரங்கக் கலம்பகம்பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
திருவாமாத்தூர்க் கலம்பகம்இரட்டையர்கள்
தில்லைக் கலம்பகம்இரட்டையர்கள்
மதுரைக் கலம்பகம், காசிக் கலம்பகம்குமரகுருபரர்
திருக்காவலூர்க் கலம்பகம்வீரமாமுனிவர்
புள்ளிருக்குவேளூர் கலம்பகம்படிக்காசுப் புலவர்
திருசெந்திற் கலம்பகம்சாமிநாததேசிகர்(ஈசான தேசிகர்)
சேயூர்க் கலம்பகம்அந்தக்கவி வீரராகவர்

நந்திக் கலம்பகம்:

  • இதன் தலைவன் = மூன்றாம் நந்திவர்மன்
  • இதுவே கலம்பக நூல்களில் முதல் நூல்
  • இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை
  • 144 பாடல்கள் உள்ளன
  • தமிழ் மீது கொண்ட காதலால் மன்னன் உயிர் விட்டான்.
  • “நந்தி கலம்பகத்தால் இறந்ததை நாடறியும்” என்பது சோமேசர் முதுமொழி வெண்பா பாடல்

திருவரங்கக் கலம்பகம்:

  • இதன் ஆசிரியர் பிள்ளை பெருமாள் ஐயங்கார்
  • இவர் எட்டு நூல்களை எழுதியுள்ளார்.
  • இவ்வெட்டு நூல்களையும் “அஷ்டப் பிரபந்தம்” எனக் கூறப்படும்.
  • “அஷ்டப் பிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்” என்னும் வழக்கு இதன் சிறப்பை உணர்த்தும்.
  • இவர், “அழகிய மணவாளதாசர், திவ்வியக்கவி” எனவும் அழைக்கப்படுவார்.
  • இவர் 1623 முதல் 1659 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரின் அவையில் ஓர் அலுவலராய் அமர்ந்து வாழ்க்கை நடத்தி வந்தார்.

ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்:

  • இதன் ஆசிரியர் = நம்பியாண்டார் நம்பி
  • இவற் 11 திருமுறைகளைத் தொகுத்தவர்.
  • இவரைத் “தமிழ் வியாசர்” ஈனப் போற்றப்படுவார்.
  • இவரின் ஊர் = திருநாரையூர்
  • இவர் இயற்றியது ஒன்பது நூல்கள்.
  • இவரின் திருத்தொண்டர் திருவந்தாதி பெரியபுராணத்திற்கு வழி நூலக அமைத்து அடியார் பெருமை பேசுகிறது.
 

No comments:

Post a Comment