Tuesday 31 March 2015

ஒன்பதாம் திருமுறை, பெரியபுராணம், திருமூலர், காரைக்கால் அம்மையார்,

ஒன்பதாம் திருமுறை

  • ஒன்பதாம் திருமுறையை பாடியவர்கள் ஒன்பது பேர்
  • ஒன்பதாம் திருமுறை, “திருவிசைப்பா”, “திருப்பல்லாண்டு”, “தில்லைத் திருமுறை” எனப்படும்
  • இறைவனுக்கு பல்லாண்டு பாடியவர் சேந்தனார்
  • இதில் உள்ள மொத்த பதிகங்கள் = 29
  • தேவாரத்தில் காணப்படாத “சாளரபாணி” என்ற பண் இதில் உள்ளது.

திருமூலர்

  • இவரின் திருமந்திரம் பத்தாம் திருமுறையாகும்.
  • திருமூலர் ஒரு சித்தர்.
  • இவர் கூடு விட்டு கூடு பாய்ந்த இடம் சாத்தனூர்
  • இவர் யோகத்தில் ஆழ்ந்த இடம் திருவாவடுதுறை
  • திருவாவடுதுறைக்கு “நவகோடி சித்தபுரம்” என்ற பெயரும் உண்டு.
  • திருமந்திரத்திற்கு ஆசிரியர் இட்ட பெயர் = திருமந்திர மாலை
  • திருமந்திரத்திற்கு “தமிழ் மூவாயிரம்” என்ற பெயரும் உண்டு.
  • இந்நூலில் 9 தந்திரங்களும், 232 அதிகாரங்களும் உள்ளது.
  • முதல் சித்த நூல் திருமந்திரம்
  • யோகநெறி கூறும் தமிழின் ஒரே நூல்
  • “சைவ சித்தாந்தம்” என்னும் தொடர் முதலில் திருமந்திரத்தில் தான் உள்ளது.
  • இவர் நந்தி தேவரின் அருள் பெற்றவர்.
  • சைவசமயத்தின் முதல் நூல் இதுவே.
  • நாயன்மார்களில் மூத்தவர் இவரே.
  • திருமூலரின் பழைய பெயர் = சுந்தரன்
  • நந்திதேவர் வழங்கிய பெயர் = நாதன்

மேற்கோள்:

  • ஒன்றே குலம் ஒருவனே தேவன்
  • நான்பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
  • அகத்தில் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்
  • மரத்தை மறைத்தது மாமத யானை
  • அன்பே சிவம்
  • உடம்பார் அழியின் உயிரார் அழிவார்
  • உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
  • படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்

பதினோராம் திருமுறை

  • 12 பேர் பாடியுள்ளனர்.
  • மொத்தம் 40 நூல்கள் உள்ளன.
  • 1400 பாடல்கள் உள்ளன.
  • இதனை “பிரபந்தமாலை” என்றும் அழைப்பர்.

காரைக்கால் அம்மையார்

  • இவரின் இயற்பெயர் = புனிதவதி
  • பிறந்த ஊர்  = காரைக்கால்
  • கணவன் = வணிகன் பரமதத்தன்
  • திருவாலங்காட்டில் தலையால் தவழ்ந்து சென்று இறைவனை வழிப்பட்டவர்.
  • இவர் பாடல்கள் மட்டுமே “மூத்த திருப்பதிகம்” என்று சிறப்பிக்கப்படுகிறது
  • கட்டளைக் கலித்துறை என்ற புதுவகை யாப்பைப் படைத்தவர்
  • ஒரு பொருளைப் பல பாடலில் பாடும் பதிக மரபை முதன் முதலாக தொடங்கி வைத்தவர்.
  • அந்தாதி, மாலை என்ற சிற்றிலக்கிய வகையைத் தொடங்கி வைத்தவர்.
  • இறைவனால் “அம்மையே” என அழைக்கப்பட்டவர்.
  • கோயிலில் நாயன்மார்கள் எல்லாம் நின்ற கோலத்தில் இருக்க இவர் மட்டும் அமர்ந்த கோலத்தில் இருக்கும் சிறப்பு பெற்றவர்.
  • இவர் தலையால் நடந்த திருவாலங்காட்டில் கால்பதிக்க அஞ்சி சம்பந்தர் ஊர் வெளியில் தங்கினார்.
  • இவர் பாடியவை = திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திருஇரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி
  • இறைவனிடம் “பேய்” உருவம் வேண்டி கேட்டவர்.
  • இவரின் பாடல்கள் சமய மறுமலர்ச்சிக்கு முன்னோடியாகும்

சேரமான் பெருமாள் நாயனார்

  • இவர் பாடியவை = பொன்வண்ணத் தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை, திருகைலாய ஞான உலா
  • இவரின் இயற் பெயர் = பெருமாக்கோதையார்
  • இவர் சுந்தரரின் நண்பர்
  • இவரை “கழறிற்றறிவார்” என அழைக்கப்படுவார்
  • இவரின் “திருகைலாய ஞான உலா” தமிழின் முதல் உலா நூல். இதனை ”தெய்வீக உலா” அல்லது “ஆதி உலா” என அழைப்பர்
  • இவர் சேர மரபினர்

நம்பியாண்டார் நம்பி

  • இவர் பாடிய நூல்கள் ஒன்பது
  • “தமிழ் வியாசர்” எனப்படுபவர் இவர்.
  • இவரே திருமுறைகளைத் தொகுத்தவர்.
  • இவரின் ஊர் = திருநாரையூர்

பெரியபுராணம்

ஆசிரியர் குறிப்பு:

  • இயற் பெயர் = அருண்மொழித்தேவர்
  • பிறந்த ஊர் = குன்றத்தூர்

நூல் குறிப்பு;

  • சேக்கிழார் தம் நூலிற்கு இட்ட பெயர் = திருத்தொண்டர் புராணம்
  • இதனை “திருத்தொண்டர் மாக்கதை” என்றும் அழைக்கப்படுகிறது
  • “சைவ சமயத்தின் சொத்து” எனப் போற்றப்படும் நூல் இது.
  • “சைவ உலகின் விளக்கு” எனப் போற்றப்படுகிறது
  • “எடுக்கும் மாக்கதை” என நூல் ஆசிரியரே குறிப்பிடுகிறார்.

வேறு பெயர்கள்:

  • உத்தம சோழப் பல்லவன்
  • தொண்டர் சீர் பரவுவார்
  • தெய்வப்புலவர்
  • இராமதேவர்
  • மாதேவடிகள்

குறிப்பு:

  • இவர் அநபாய சோழனிடம் அமைச்சராக இருந்தவர்.
சுந்தரரின் திருத்தொண்டத்தொகைமுதல் நூல்
நம்பியாடார் நம்பியின் திருத்தொண்டத் திருவந்தாதிவழி நூல்
சேக்கிழாரின் பெரியபுராணம்சார்பு நூல்
  • பெரியபுராணத்தில் 2 காண்டம் 13 சருக்கம் உள்ளது.
  • முதல் சருக்கம் = திருமலைச்சருக்கம்
  • இறுதி சருக்கம் = வெள்ளையானைச் சருக்கம்
  • நூலில் 63 நாயன்மார்களையும் 9 தொகை அடியார்களையும் கூறியுள்ளார்.
  • பெரியபுராணத்தின் தலைவன் = சுந்தரர்
  • நூலில் பெரும் பகுதி திருஞானசம்பதர் பற்றிய குறிப்பு உள்ளது.
  • சோழனின் மனதை சீவக சிந்தாமணி நூலில் இருந்து சைவத்தின் பக்கம் திருப்ப சேக்கிழார் பெரியபுராணத்தை படைத்தார்.

சிறப்பு;

  • “இறைவனே சேக்கிழாருக்கு “உலகெலாம்” என அடி எடுத்து கொடுக்க பாடினார்.
  • தமிழின் முதல் களஆய்வு நூல் பெரியபுராணம்
  • தமிழின் இரண்டாவது தேசியக் காப்பியம்
  • மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை படைத்த “சேக்கிழார் பிள்ளைத்தமிழ்” நூலில் “பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ” எனச் சிறப்பிக்கிறார்.
  • “சேக்கிழார் புராணம்” பாடியவர் = உமாபதி சிவம்
  • சிவஞான முனிகள், “எங்கள் பாக்கியப் பயனாகிய குன்றை வாழ் சேக்கிழான் அடி சென்னி இருத்துவாம்” என கூறுகிறார்.
  • பெரியபுராணத்தை உலக பொது நூல் என்கிராட் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
 

No comments:

Post a Comment