Saturday 28 March 2015

பட்டினப்பாலை

பட்டினப்பாலை

பட்டினப்பாலையின் உருவம்:

  • திணை = நெய்தல் திணையும் பாலைத் திணையும்
  • துறை = பொருள்வயின் பிரியக் கருதிய தலைவன் செலவழுங்குதல்(செலவழுங்குதல் = செல்லாது விடுதல்)
  • பாவகை = இடையிடையே ஆசிரியப்பா அமைந்த வஞ்சி நெடும் பாட்டு
  • அடி எல்லை = 301

பெயர்க்காரணம்:

  • பாலைத் திணையையும், காவிரிப்பூம்பட்டினம் நகரின் வளத்தையும் ஒருங்கே கூறுவதால் பட்டினப்பாலை எனப் பெயர் பெற்றது.

வேறு பெயர்கள்:

  • வஞ்சி நெடும் பாட்டு(தமிழ் விடு தூது கூறுகிறது)
  • பாலைபாட்டு

புலவர், தலைவன்:

  • பாடிய புலவர் = கடியலூர் உருத்திரங்கண்ணனார்
  • பாட்டுடைத் தலைவன் = சோழன் கரிகாலன்

உரை:

  • மறைமலையடிகள் உரை
  • ரா.இராகவையங்கார் உரை

பொதுவான குறிப்புகள்:

  • பட்டினப்பாலை பாடியமைக்காக கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்கு கரிகாற் சோழன் பதினாறு நூறாயிரம் பொற்காசுகள் பரிசளித்தான் என கலிங்கத்துப்பரணி கூறுகிறது.
  • இந்நூலுக்கு வஞ்சிநெடும் பாட்டு என்ற பெயர் இருந்தமையை தமிழ் விடு தூது குறிப்பிடுகிறது
  • பட்டினம் என்பது காவிரிப்பூம்பட்டினம் ஆகும். இந்நகரை புகார், பூம்புகார் எனவும் அழைப்பர்.
  • இந்நூலில் 163 அடிகள் வஞ்சிப்பாவல் அமைந்துள்ளது.
  • இந்நூல் அரகேற்றப்பட்ட இடம் = பதினாறு கால் மண்டபம்
  • பிற்காலப் பாண்டிய மன்னன் ஒருவன் சோழநாட்டை வென்று அதன் தலைநகரை அழித்தபோது, அந்நகரில் இந்நூல் அரங்கேற்றப்பட்ட பதினாறு கால் மண்டபத்தை அழிக்காதிருக்க ஆணையிட்டான் என “திருவெள்ளரைக் கல்வெட்டு” கூறுகிறது.
  • இந்நூலில் கிளவித் தலைவனின் பெயர் கூறப்படவில்லை.

முக்கிய அடிகள்:

  • நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
    காலின் வந்த கருங்கறி மூடையும்
    வடமலை பிறந்த மணியும் பொன்னும்
    குடமலை பிறந்த ஆரமும் அகிலும்
  • தமவும் பிறவும் ஒப்ப நாடி
    கொள்வதுஉம் மிகை கொளாது
    கொடுப்பதூஉம் குறைகொடாது
    பல்பண்டம் பகர்ந்து வீசும்
  • முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்
    வார் இருங் கூந்தல் வயங்கு இழை ஒழிய
    வாரேன் வாழிய நெஞ்சே
 

No comments:

Post a Comment