Saturday 28 March 2015

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பதின்  உருவம்:

  • ஆசிரியர் = கண்ணஞ் சேந்தனார்
  • பாடல்கள் = 50(5*10=50)
  • திணை = ஐந்து அகத்திணைகளும்
  • திணை வைப்பு முறை = குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்
  • பாவகை   = வெண்பா

பெயர்க்காரணம்:

  • திணைக்கு பத்து பாடல் வீதும் ஐம்பது பாடல்களைக் கொண்டதால் திணைமொழி ஐம்பது எனப் பெயர்பெற்றது.

பொதுவான குறிப்புகள்:

  • இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
  • இந்நூலில் 46 பாடல்கள் இன்னிசை வெண்பா ஆகும்.
  • 4 பாடல்கள் நேரிசை வெண்பா ஆகும்
  • குறிஞ்சித் திணையை முதலாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
  • சேந்தனாரின் தந்தை சாத்தந்தையார் என்பார் சோழன் போரவைக்கொப்பெருனற் கிள்ளியை பாடியவர் என உ.வே.சா கூறுகிறார்.

நூலின் சிறப்பு:

  • நூலின் அனைத்துப் பாடல்களும் எதுகை, மோனை கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.
  • நச்சினார்கினியரரால் இந்நூலின் சில பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன

முக்கிய அடிகள்:

  • அரிபரந்த உண்கண்ணாள் ஆற்றாமை நும்மின்
  • தெரிவார்யார் தேடும் இடத்து
  • துணிகடல் சேர்ப்பான் துறந்தான்கொல் தோழி!
  • தணியும் என்தோள் வளை
 

No comments:

Post a Comment