Saturday 28 March 2015

மலைபடுகடாம்

மலைபடுகடாம்

மலைப்படுகடாம் உருவம்:

  • பொருள் =ஆற்றுப்படை
  • திணை = புறத்திணை
  • பா வகை = ஆசிரியப்பா
  • அடி எல்லை = 583(ஆற்றுப்படை நூல்களுள் பெரிய நூல்)

பெயர்க்காரணம்:

  • மலைக்கு யானையை உவமித்து மலையில் உண்டாகும் ஓசைகளைக் கடாம் என்று சிறப்பித்தமையால் இந்நூல் “மலைப்படுகடாம்” எனப்படுகிறது.
  • கடாம் = யானையின் மதநீர்

வேறுபெயர்:

  • கூத்தராற்றுப்படை(கூத்தன் ஒருவன் பிற கூத்தர்களை ஆற்றுப்படுத்துவதால்)

புலவர், தலைவன்:

  • பாடிய புலவர் = இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
  • பாட்டுடைத் தலைவன் = நன்னன் சேய் நன்னன்

மலைப்படுகடாம் குறிப்பிடும் இசைக்கருவிகள்:

கருவிவிளக்கம்
முழவுபறை
ஆகுளிசிறுபறை
பதலைதபேலா
கோடுகொம்பு
பாண்டில்ஜால்ரா

பொதுவான குறிப்புகள்:

  • நன்னன் ஆண்ட பகுதி சவ்வாது மலைப்பகுதி.
  • கூத்தரைக் “களம் பெரு கண்ணுளர்” என்று கூறுகிறது.
  • சிவனைக் “காரி உண்டிக் கடவுள்” என்கிறது.
  • பண்டைய இசைக் கருவிகள் பற்றி மிகுதியாக கூறும் நூல் மலைப்படுகடாம் ஆகும்
  • நன்னனின் தலைநகரம் = செங்கண்மா(இன்றைய செங்கம்)
  • நன்னனின் மலை = நவிரமலை
  • நன்னனின் மனைவி கற்புக்கென்று தனிக்கொடி கண்டவள்.
  • ஆற்றுப்படை நூல்களுள் இதுவே பெரியது.
  • நன்னன் நாட்டிற்கு செல்லும் வழி, வழியில் கிட்டும் உணவு, சோலை அழகு, மலைவளம், நாட்டின் சிறப்பு, நன்னனின் முன்னோர் பெருமை போன்றவை கூறப்பட்டுள்ளது.

முக்கிய அடிகள்:

  • குறமகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி
  • மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர்
    செருசெய் முன்பின் குருசில் முன்னிய
    பரிசில் மறப்ப நீடலும் உரியீர்
  • இட்ட எல்லாம் பொட்டாங்கு விளைய
    பெயரோடு வைகிய வியன்கண் இரும்புனம்
  • தலைநான் அன்ன புகலொடு வழிசிறந்து
    பலநாள் நிற்பினும் பெறுகுவீர்

No comments:

Post a Comment