Saturday 28 March 2015

ஆசாரக்கோவை

ஆசாரக்கோவை

ஆசாரக்கோவையின் உருவம்:

  • ஆசிரியர் = பெருவாயின் முள்ளியார்
  • பாடல்கள் = 100
  • பாவகை = பல்வேறு வெண்பா வகைகள்

பெயர்க்காரணம்:

  • கொள்ளத்தக்க ஆசாரம் என்றும் தள்ளத் தக்க ஆசாரம் என்றும் இரு நோக்கில் ஆசிரியர் அருளியுள்ளார்.
  • நீராடல், ஆடல் அணிதல், உணவு முறைமை, உண்ணும் திசை போன்றவை கொள்ளத் தக்க ஆசாரங்கள்.
  • எச்சிலுடன் செய்யத் தகாதவை, நின்று கிடந்தது உண்ணாமை ஆகியவை தள்ளத் தக்க ஆசாரங்கள்.

பொதுவான குறிப்புகள்:

  • ஆசாரம் = ஒழுக்கம், கோவை = தொகுப்பு
  • வட நூல்களான “சுகர ஸ்மிருதி, போதாயான தர்ம சூத்திரம்” போன்ற நூல்களின் சாரமே இந்நூல்.
  • ஒழுக்கங்களை அடுக்கிக் கூறுகிறது.
  • பல வெண்பாக்கள் கலந்து பாடப்பட்ட நூல் இது.
  • “கயத்தார் பெருவாயின் முள்ளியார்” என அழைக்கப்படுபவர்.
  • இந்நூலின் கடவுள் வாழ்த்து சிவபெருமானைப் பற்றியது.

மேற்கோள்:

  • விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை
  • இவர்க்கு ஊன் கொடுத்தல்லால் உண்ணாரே என்றும்
    ஒழுக்கம் பிழையா தவர்
  • பகல் தெற்கு நோக்கார் இராவடக்கு நோக்கார்
  • பகற்பொய்யார் தீயினுள் நீர்
  • உமிழ்வும் உயர்ந்துழி ஏறலும் பாக்கும்
  • வகையில் உறையும் வளர்ச்சியும் ஐந்தும்
    புணரார் பெரியார் அகத்து
 

No comments:

Post a Comment