Tuesday 31 March 2015

சிற்பம்

சிற்பம்

  • கல்லைக் குடைந்து செதுக்கியும் கோயில் கலையை வளர்த்த பல்லவர்கள் சிற்பக்கலையையும் வளர்த்தார்கள்
  • மகேந்திரவர்மன் காலந்தொட்டே சிற்பக்கலை வளர்ந்து வருகிறது
  • பல்லவர் காலத்தில் கோயில் சிற்பங்கள், திறந்தவெளி சிற்பங்கள் எனவும் புடைப்புச் சிற்பங்கள், தனிச்சிலைகள் எனவும் வளர்ந்தன
  • மண்டகப்பாட்டு, திருச்சிச் சிவன் கோயில், தளவானூர், சீயமங்கலம், மாமல்லாபுரம், காஞ்சி கைலாசநாதர் கோயில், வைகுந்த பெருமாள் கோயில் போன்ற இடங்களில் பல்லவர்காலச் சிற்பங்கள் உள்ளன
  • சோழர் காலச் சிற்பங்கள் தனிச் சிறப்புடையன. அதனால் உலகெங்கும் உள்ள பொருட்காட்சிகளில் இடம் பெற்றுள்ளன
  • saivam, வைணவம், சமணம், பௌத்தம், சிறுதெய்வ வழிபாடு என அனைத்துச் சமய தெய்வங்களுக்கும் சோழர் காலத்தில் சிற்பங்கள் வடிக்கப்பட்டன
  • கி.பி.7ஆம் நூற்றாண்டு முதல் 13 நூற்றாண்டு வரை சோழர்கள் சிறந்த ஆட்சி செய்தனர். இவர்கள் காலத்தில் சிற்பக்கலையும் வளர்ந்தது
  • கும்பகோணம், தக்கோலம், தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் போன்ற இடங்களில் சோழர் காலச் சிற்பங்கள் உள்ளன
  • தொடக்கத்தில் கோயில் கட்டுவதற்கு முதன்மை கொடுத்த சோழர்கள், பின் சிற்பங்களுக்கு முதன்மை கொடுத்தனர்
  • சிற்பங்களின் ஆடை ஆபரணங்கள் அளவாக இருந்தது பொய் மிகை அலங்காரச் சிற்பங்கள் தோன்றின
  • மூன்று பக்கங்களிலும் புடைப்பு மிகுதியாக இருக்கும்
  • இலக்கியம், சமயம் சார்ந்த சிற்பங்கள் மிகுதியாகச் செதுக்கப்பட்டன
  • கோயில் கட்டுவதில் மிகுத்த ஆர்வம் காட்டாத நாயக்கர்கள் சிற்பக்கலையில் மிகுந்த ஈடுபாடு கொண்டார்கள்
  • மீனாட்சி அம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபம், பேரூர்பட்டிப் பெருமாள் கோயிலின் கனகசபை, இராமேஸ்வரம் தூண்சிற்பங்கள் போன்ற இடங்களில் நாயக்கர் காலச் சிற்பங்கள் உள்ளன
  • பல்லவர் காலச் சிற்பத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது மாமல்லபுரத்தில் உள்ள ஒற்றைப்பாறைச் சிற்பம் உலகப் புகழ் பெற்றதாகும்
  • கட்டடக் களையும் சிற்பக்கலையும் கொழிக்கும் ஊர் கும்பகோணம்
  • அரிசிலாற்றின் தென்கரையில் தாராசுரம் என்னும் ஊர் அமைந்துள்ளது.
 

No comments:

Post a Comment