பனிரெண்டாம் வகுப்பு சமசீர்க்கல்வி தமிழ் வினா விடைகள்
கடவுள் வாழ்த்து
ஆசிரியர் குறிப்பு:
- கம்பர் சோழ நாட்டுத் திருவழுந்தூரில் பிறந்தவர்.
- இவரின் காலம் கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டு.
- கம்பரைத் திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல் என்பார் ஆதரித்து வந்தார்.
- “கவிச்சக்ரவர்த்தி” எனப் போற்றப்படுபவர் கம்பர்.
- “கல்வியில் பெரியவன் கம்பன், கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும், விருத்தமென்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்” என்னும் தொடர்கள் அவர்தம் பெருமையை விளக்குகின்றன.
- நூல்கள் = சடகோபர் அந்தாதி, ஏரெழுபது, சிலை எழுபது, திருக்கை வழக்கம், சரஸ்வதி அந்தாதி.
நூற் குறிப்பு:
- வடமொழியில் வான்மீகி முனிவர் இயற்றிய இராமாயணத்தை தழுவி, தமிழில் கவிப் பேரரசர் கம்பர் இயற்றியது கம்பராமாயணம்.
- கம்பரால் இயற்றப்பட்டதால் “கம்பராமாயணம்” என வழங்கப்படுகின்றது.
- கம்பர் தம்நூலுக்கு இட்ட பெயர் “இராமாவதாரம்”
சொற்பொருள்:
- ஒன்றேயென்னின் – ஒன்றே என்று கூறின்
- நம்பி – இறைவன்
இலக்கணக்குறிப்பு:
- வாழ்க்கை – தொழிற்பெயர்
- அம்மா – வியப்பிடைச்சொல்
மொழி வாழ்த்து
நூல் குறிப்பு:
- தோரமங்கலம் திரு.அ.வரதநஞ்சையப் பிள்ளை இயற்றியது “தமிழரசி குறவஞ்சி”.
- 96வகை சிற்றிலக்கியங்களுள் குறவஞ்சியும் ஒன்று.
- தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன் = சுவாமிமலை முருகப்பெருமான்.
- தமிழன்னையையே பாட்டுடைத் தலைவியாக்கி இந்நூல் இயற்றப்பட்டுள்ளது.
ஆசிரியர் குறிப்பு:
- தமிழரசி குறவஞ்சியை இயற்றியவர் தோரமங்கலம் திரு.அ.வரதநஞ்சையப் பிள்ளை.
- பெற்றோர் = அப்பசாமிப் பிள்ளை, வரதாயி அம்மையார்.
- இவர் விரைந்து கவி பாடுவதில் வல்லவர்.
- கரந்தை தமிழ் சங்கத்தில் “ஆசிரியர்” என்னும் சிறப்புப்பட்டம் பெற்றவர்.
- “புலவரேறு” எனச் சிறப்பிக்கபடுவார்.
- கரந்தை தமிழ் சங்கத்தில் நமச்சிவாய முதலியார் தலைமையில் “தங்கத் தோடா” பரிசு பெற்றுள்ளார்.
- தமிழவேள் உமாமகேசுவரனார் இவரிடம் கேட்டு கொண்டதற்கு இணங்க இந்நூலை இயற்றினார்.
- இந்நூலை கரந்தை தமிழ் சங்கத்தின் வெள்ளி விழாவின் பொது ஞானியரடிகள் தலைமையில் அரங்கேற்றினர்.
சொல்பொருள்:
- நண்ணும் – கிட்டிய
- இசைத்த – பொருந்தச் செய்த
- வண்ணம் – ஓசை
- பிறமொழி – வேற்றுமொழி
- வண்மை – வளமை
இலக்கணக்குறிப்பு:
- அசைத்த, இசைத்த – பெயரெச்சம்
- உலகம் – இடவாகுபெயர்
- திருந்துமொழி – வினைத்தொகை
- வாழிய – வியங்கோள் வினைமுற்று
- அடிவாழ்த்துவம் – இரண்டாம் வேற்றுமைத்தொகை
- வாழ்த்துவம் – தன்மைப் பன்மை வினைமுற்று
நாட்டு வாழ்த்து
நூல் குறிப்பு:
- “நாமக்கல் கவிஞர் பாடல்கள்” என்னும் நூலில் கவிஞரின் பாடல்கள் பல தொகுக்கப்பட்டுள்ளது.
- கவிஞர் சத்தியாகிரகத் தொண்டர்கள் பாடுவதற்கென இயற்றிய சில பாடல்கள் “என்னுடைய நாடு” என்னும் தலைப்பில் தேசிய மலரில் இடம் பெற்றுள்ளன.
ஆசிரியர் குறிப்பு:
- இயற் பெயர் = இராமலிங்கனார்
- பெற்றோர் = வெங்கடராமன், அம்மணியம்மாள்
- இவற் முத்தமிழிலும், ஓவியக்கலையிலும் சிறந்தவர்.
- இவர் தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தார்.
- தமிழக அரசு இவரை சட்ட மேலவை உறுபினராக நியமித்தது.
- நடுவண் அரசு இவருக்கு “பத்மபூஷன்” விருது வழங்கி சிறப்பித்துள்ளது.
சொற்பொருள்:
- வாடின – தளர்ந்த
- ஓடின – மறைந்தன
இலக்கணக்குறிப்பு:
- தினந்தினம் – அடுக்குத்தொடர்
- வந்தவர் – வினையாலணையும் பெயர்
- போனவர் – வினையாலணையும் பெயர்
- இல்லாதவர் – எதிர்மறை வினையாலணையும் பெயர்
- யாரையும் – முற்றும்மை
புறநானூறு
நூல் குறிப்பு;
- புறம் + நான்கு + நூறு = புறநானூறு
- இந்நூலை புறப்பாட்டு, புறம் எனவும் அழைப்பர்.
- நானூறு பாடல்கள் உள்ளன.
- இதனை தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.
- இந்நூலின் 11 புறத்திணைகளும், 65 துறைகளும் எடுத்தாளப்பட்டுள்ளன.
- ஜி.யு.போப் இந்நூலின் சில பாடல்களை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.
ஆசிரியர் குறிப்பு:
- நரிவெரூஉத் தலையார்.
- இவரால் பாடப்பட்டவன் சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரலிரும் பொறை ஆவான்.
- இவர் இயற்றிய பாடல்கள் குறுந்தொகையிலும், திருவள்ளுவமாலையிலும் உள்ளன.
சொற்பொருள்:
- கயன்முள் – மீன்முள்
- திரைகவுள் – சுருக்கங்களை உடைய கன்னம்
- கணிச்சி – மழுவாயுதம்
- திறல் – வலிமை
- ஒருவன் – எமன்
- ஆறு – நெறி
இலக்கணக்குறிப்பு:
- கயன்முள் – ஆறாம் வேற்றுமைத்தொகை
- திரைகவுள் – வினைத்தொகை
- கூர்ம்படை – பண்புத்தொகை
- ஆற்றீர் – முன்னிலை பன்மை எதிர்மறை வினைமுற்று
- படூஉம் – இசைநிறை அளபெடை
அகநானூறு
நூல் குறிப்பு:
- அகம் + நான்கு + நூறு = அகநானூறு
- அடி எல்லை = 13 முதல் 31
- நானூறு பாடல்கள் உள்ளன.
- தொகுத்தவர் = மதுரை உப்பூரி குடிகிழார் மகன் உருதிரசன்மனார்
- தொகுபித்தவர் = பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
- வேறுபெயர்கள் = அகம், நெடுந்தொகை
- இந்நூலில் மூன்று பகுதிகள் உள்ளன.
- முதல் 120 பாடல்கள், “களிற்றியானை நிறை” எனப்படும்.
- அடுத்த 180 பாடல்கள், “மணிமிடை பவளம்” எனப்படும்.
- கடைசி 100 பாடல்கள் “நித்திலக்கோவை” எனப்படும்.
- 1,3,5 என ஒற்றைப்படை எண்கள் அமைந்த பாடல்கள் = பாலைத்திணை பாடல்கள்
- 2,8 என வரும் பாடல்கள் = குறிஞ்சித்திணை பாடல்கள்
- 4,14 என வரும் பாடல்கள் = முல்லைதினைப் பாடல்கள்
- 6,16 என வரும் பாடல்கள் = மருதத்திணை பாடல்கள்
- 10,20 என வரும் பாடல்கள் = நெய்தல் திணை பாடல்கள்.
சொற்பொருள்:
- பசை – ஓட்டும் பசை(ஈரம்)
- பச்சை – தோல்
- மாச்சிறைப் பறவை – கரிய சிறகுகள் உடைய வௌவால்
- முதுமரம் – பழையமரம்
- முகை – மொட்டு
- கடிமகள் – மணமகள்
- கதப்பு – கூந்தல்
- தண்பதம் – குளிர்பதம்
இலக்கணக்குறிப்பு:
- உயர்சினை – வினைத்தொகை
- சிறைப்பறவை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- பகலுறை – ஏழாம் வேற்றுமைத்தொகை
- முதுமரம் – பண்புத்தொகை
- கடிமகள் – உரிச்சொற்றொடர்
- புல்லார் – இரண்டாம் வேற்றுமைத் தொகை
- வல்விரைந்து – ஒருபொருட்பன்மொழி
நற்றிணை
நூல் குறிப்பு:
- நன்மை + திணை = நல் + திணை = நற்றிணை
- எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக அமையப்பெற்றது நற்றிணை.
- நானூறு பாடல்கள் உள்ளன.
- அடி எல்லை = 9 முதல் 12
- இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
- தொகுத்தவர் = பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
ஆசிரியர் குறிப்பு:
- நக்கண்ணையார் பெண்பாற் புலவர் ஆவார்.
- இவர் “பெருங்கோழி நாயக்கன் மகள் நக்கண்ணை” என் கூறப்படுபவர்.
- உறையூர் வீரை வேண்மான் வெளியன் தித்தன் என்னும் சோழ மன்னனின் மகன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி ஆவான்.
- அவன் தன் தந்தையோடு பகைத்துக் கொண்டு நாடிழந்து, வறுமையில் புல்லரிசிக் கூழுண்டு வாழ்ந்து வந்தான்.
- அந்நிலையிலும் ஆமூர் மல்லன் என்பவனை போரில் வெற்றி கொண்டான்.
- அவன் வீரத்தைக் கண்ட நக்கண்ணையார் அவ்வரசனைத் தாம் மணந்து கொள்ள விரும்பியதாக அவர் பாடிய புறநானூற்று 83,84,85 ஆம் பாடல்கள் மூலம் அறியலாம்.
சொற்பொருள்:
- இறவு – இறாமீன்
- முதல் – அடி
- பிணர் – சருச்சரை(சொர சொரப்பு)
- தடவு – பெருமை
- சுறவு – சுறாமீன்
- கொடு – கொம்பு
- மருப்பு – தந்தம்
- உழை – பெண்மான்
- உரவு – வலிமை
இலக்கணக்குறிப்பு:
- இறவுப்புறம் – ஆறாம் வேற்றுமைத்தொகை
- களிற்று மருப்பு – ஆறாம் வேற்றுமைத்தொகை
- முள்ளிலை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க்க தொகை
- நன்மான், நெடுந்தேர் – பண்புத்தொகை
- செலீஇய – சொல்லிசை அளபெடை
குறுந்தொகை
நூல் குறிப்பு:
- குறுமை + தொகை = குறுந்தொகை
- அடி எல்லை = 4 முதல் 8
- இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
- நானூற்றி ஒரு பாடல் உள்ளன.
ஆசிரியர் குறிப்பு:
- கபிலர் பாண்டி நாட்டிலுள்ள திருவாதவூரில், அந்தணர் மரபில் பிறந்தவர்.
- கடையெழு வள்ளல்களுள் ஒருவனான பாரியை உயிர்த் தோழராக கொண்டவர்.
- பாரியின் அவைகளப் புலவராக விளங்கியவர்.
- இவர் குருஞ்சித் திணை பாடல்கள் பாடுவதில் வல்லவர்.
கபிலரை பற்றிய புகழுரைகள்:
- நக்கீரர் = வாய்மொழிக் கபிலன்
- பெருங்குன்றூர்க் கிழார் = நல்லிசைக் கபிலன்
- பொருந்தில் இளம்பூரனார் = வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன்
- மாறோக்கத்து நப்பசலையார் = புலனழுக்கற்ற அந்தணாளன், பொய்யா நாவிற் கபிலன்
சொற்பொருள்:
- ஒழுகுநீர் – ஓடுகின்ற நீர்
- ஆரல் – ஆரல் மீன்
- குருகு – நாரை
இலக்கணக்குறிப்பு:
- யாரும் – முற்றும்மை
- ஒழுகுநீர் – வினைத்தொகை
- குருகும் – இழிவு சிறப்பும்மை
ஐங்குறுநூறு
நூல் குறிப்பு:
- ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு
- அடி எல்லை = 3 முதல் 6
- ஐநூறு பாடல்கள் உள்ளன.
- ஒவ்வொரு தினைக்கும் நூறு பாடல்கள் உள்ளன.
- குருஞ்சித் திணை பாடல்கள் பாடியவர் = கபிலர்
- முல்லைத் திணை பாடல்கள் பாடியவர் = பேயன்
- மருதத் திணை பாடல்கள் பாடியவர் = ஓரம்போகி
- நெய்தல் திணை பாடல்கள் பாடியவர் = அம்மூவன்
- பாலை திணை பாடல்கள் பாடியவர் = ஓதலாந்தை
- இந்நூலில் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
- தொகுத்தவர் = புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
- தொகுபிதவர் = சேரமான் யானைக் கட்சேய்மாந்தரஞ் சேரலிரும்பொறை
ஆசிரியர் குறிப்பு:
- ஆந்தையார் என்பது இயற்பெயர்.
- ஓதலூர் என்னும் ஊர்.
- ஓதலூர் மேலைக் கடற்கரைக் பகுதியில் குட்டநாட்டில் உள்ளது.
- ஆந்தை என்பது ஆதன் தந்தை என்பதன் மரூஉ.
சொற்பொருள்:
- மறு – குற்றம்
- தூவி – இறகு
- மரபு – முறைமை
- ஓதி – கூந்தல்
- கிளை – சுற்றம்
- ஊன் – தசை
- நிணம் – கொழுப்பு
- வல்சி – உணவு
- போலாம் – பொன்
- விறல் – வலிமை
இலக்கணக்குறிப்பு:
- பச்சூன், பைந்நிணம் – பண்புத்தொகை
- பொலம்புனை – மூன்றாம் வேற்றுமைத்தொகை
- புனைகலம் – வினைத்தொகை
- வேற்காளை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- காளை – உவமையாகுபெயர்
திருக்குறள்
நூல் குறிப்பு:
- திருக்குறள் என்பது அடையடுத்த கருவியாகுபெயர்
- இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பெரும்பிரிவுகளை கொண்டது.
- அறத்துப்பால் = பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என நான்கு இயல்களும் 38 அதிகாரங்களையும் கொண்டது.
- பொருட்பால் = அரசியல், அங்கவியல், ஒழிபியல் என் 3 இயல்களும், 70 அதிகாரங்களையும் கொண்டது.
- இன்பத்துப்பால் = களவியல், கற்பியல் என் 2 இயல்களும், 25அதிகாரங்களையும் உடையது.
- திருக்குறளின் வேறு பெயர்கள் = முப்பால், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, உத்தரவேதம், தெய்வநூல், திருவள்ளுவம், தமிழ்மறை, பொதுமறை, திருவள்ளுவப்பயன், பொருளுரை, முதுமொழி.
- திருவள்ளுவரின் வேறு பெயர்கள் = நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதானுபாங்கி, செந்நாப்போதார், பெருநாவலர், பொய்யில் புலவர்.
சொற்பொருள்:
வையகம் – உலகம் | நன்றி – நன்மை |
தினை – மிகச் சிறிய அளவு | பனை – ஒரு பேரளவு |
சால்பு – நிறைபண்பு | கேண்மை – நட்பு |
மாசு – குற்றம் | விழுமம் – துன்பம் |
அகழ்வாரை – தோண்டுபவரை | தலை – சிறந்த அறமாகும் |
பொறுத்தல் – மன்னிக்க | இன்மை – வறுமை |
ஓரால் – நீக்குதல் | வன்மை – வலிமை |
மடவார் – அறிவிலிகள் | பொறை – பொறுத்தல் |
விருந்து – புதியராய் வந்தவர் | நிறை – சால்பு |
பொன்றும் – அழியும் | அற்றம் – அழிவு |
அரண் – கோட்டை | ஓரீஇ – நீக்கி |
ஒட்பம் – அறிவுடைமை | கூம்பல் – குவிதல் |
அதிர – நடுங்கும் படி | நோய் – துன்பம் |
திட்பம் – வலிமை | ஊறு – பழுதுபடும் வினை |
ஒரால் – செய்யாமை | ஆறு – நெறி |
கோள் – துணிபு | கொட்க – புலப்படும் படி |
வீறு – செய்தல் | திண்ணியர் – வலியர் |
இலக்கணக்குறிப்பு:
செய்யாமல் – எதிர்மறை வினையெச்சம் | செய்த – இறந்தகால பெயரெச்சம் |
வையகமும் வானகமும் – எண்ணும்மை | தூக்கார் – முற்றெச்சம் |
தூக்கின் – எதிர்கால பெயரெச்சம் | செயின் – வினையெச்சம் |
தெரிவார் – வினையாலணையும் பெயர் | சால்பு – பண்புப்பெயர் |
மறவற்க – எதிர்மறை வியங்கோள் வினைமுற்று | எழுபிறப்பும் – முற்றும்மை |
துடைத்தவர் – வினையாலணையும் பெயர் | உள்ள – வினையெச்சம் |
கொன்றார் - வினையாலணையும் பெயர் | அகழ்வார் - வினையாலணையும் பெயர் |
பொறுத்தல் – தொழிற்பெயர் | விருந்து – பண்பாகு பெயர் |
ஒரால், பொறை – தொழிற்பெயர் | நீங்காமை – எதிர்மறை தொழிற்பெயர் |
போற்றி – வினையெச்சம் | ஒருத்தார் - வினையாலணையும் பெயர் |
செய்தாரை - வினையாலணையும் பெயர் | துறந்தார் - வினையாலணையும் பெயர் |
இன்னா சொல் – ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் | உண்ணாது – எதிர்மறை வினையாலணையும் பெயர் |
அற்றம் – தொழிற்பெயர் | ஓரீஇ – சொல்லிசை அளபெடை |
உய்ப்பது - வினையாலணையும் பெயர் | எண்பொருள் – பண்புத்தொகை |
கூம்பல் – தொழிற்பெயர் | அறிகல்லாதவர் – வினையாலணையும் பெயர் |
அஞ்சுவது - வினையாலணையும் பெயர் | அஞ்சல் – தொழிற்பெயர் |
அதிர – வினையெச்சம் | உடையார் – குறிப்பு வினைமுற்று |
மனத்திட்பம் – ஆறாம் வேற்றுமைத்தொகை | ஒல்காமை – தொழிற்பெயர் |
ஏற்றா – ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் | சொல்லுதல் – தொழிற்பெயர் |
யார்க்கும் – முற்றும்மை | எளிய – குறிப்பு வினைமுற்று |
எய்தி – வினையெச்சம் | மாண்டார் - வினையாலணையும் பெயர் |
சிலப்பதிகாரம்
நூல் குறிப்பு:
- இக்காப்பியம், “முத்தமிழ்க் காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், நாடகக் காப்பியம்” என்று பல்வேறு சிறப்புப் பெயர்களால் பாராட்டப்படுகிறது.
- கண்ணகியின் காற்சிலம்பு காரணமாக வளர்ந்த கதையாதலினால் சிலப்பதிகாரம் எனப் பெயர்பெற்றது.
- இதுவே தமிழின் முதல் காப்பியம்.
- புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என மூன்று காண்டங்களையும், மங்கள வாழ்த்துப் பாடல் முதலாக வரந்தருகாதை ஈறாக முப்பது காதைகளையும் உடையது.
- நூல் கூறும் மூன்று உண்மை = அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்.
ஆசிரியர் குறிப்பு:
- இந்நூலை இயற்றியவர் இளங்கோவடிகள்
- பெற்றோர் = இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், நற்சோனை
- தமையன் = சேரன் செங்குட்டுவன்
- காலம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு
- இந்நூலுக்கு உரையெழுதிய பழைய உரையாசிரியர்கள் இருவர். ஒருவர் அரும்பதங்களுக்கு மட்டும் உரை எழுதிய அரும்பத உரைகாரர். மற்றொருவர் விளக்கமாக உரை எழுதிய அடியார்க்கு நல்லார்(இவர் உரை முழுவதுமாக கிடைக்கவில்லை)
- இக்காலத்தே வாழ்ந்த ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை நூல் முழுமைக்கும் உள்ளது.
நூல் சிறப்பு:
- பாரதியார் இந்நூலின் அருமை பெருமைகளை உணர்ந்து, “நெஞ்சையள்ளும் சிலம்பு” எனப் புகழ்ந்துள்ளார்.
- கவிமணி இந்நூலை, “தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தோறும் சிலப்பதிகாரம்” எனப் பாராட்டியுள்ளார்.
சொற்பொருள்:
- வெய்யோன் – கதிரவன்
- ஈர்வளை – அறுத்து செய்யப்பட்ட வளையல்
- இலங்கு – ஒளிருகின்ற
- தோளி – கண்ணகி
- முறை – நீதி
- நிறை – கற்பு
- படுகாலை – மாலைக்காலம்
- மாதர் – காதல்
- மல்லல் – வளம்
- கொற்றம் – அரசியல்
- வைவாள் – கூரியவாள்
- பழுது – உடல்
இலக்கணக்குறிப்பு:
- ஈர்வளை – வினைத்தொகை
- கையேந்தி – ஏழாம் வேற்றுமைத்தொகை
- காற்சிலம்பு – ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- நல்லுரை – பண்புத்தொகை
- தண்குடை – பண்புத்தொகை
- பொற்சிலம்பு – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- மாமதுரை – உரிச்சொற்றொடர்
- வைவாள் – உரிச்சொற்றொடர்
- வளைக்கை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
கம்பராமாயணம்
நூல் குறிப்பு:
- கம்பர் தாம் இயற்றிய இந்நூலுக்கு இராமாவதாரம் என்றே பெயரிட்டார். அதுவே கம்பராமாயணம் என்று வழங்கப்படுகிறது.
- இராம காதைக்கு ஆதிகாவியம் என்றும் அக்காதையை வடமொழியில் இயற்றிய வான்மீகிக்கு ஆதிகவி என்றும் பெயர் உண்டு.
- கம்பராமாயணம் வழி நூல் எனப்படுகிறது.
- கம்பரின் இராமாயணத்தைக் கம்ப நாடகம் எனவும் கம்பசித்திரம் எனவும் அழைப்பர்.
- கம்பரின் யாப்பு வண்ணங்கள் நூல் முழுவதும் மிளிர்கிறது. “வரமிகு கம்பன் சொன்ன வண்ணமும் தொண்ணுற்றாறே” என்று ஒரு கணக்கீடும் உள்ளது.
- தமிழ் இலக்கியத்தில் தொடங்கிய காப்பிய வளர்ச்சி கம்பர் படைப்பில் உச்ச நிலையை அடைந்தது.
- கம்பராமாயணம் 6 காண்டங்களை உடையது. அவை பாலகாண்டம், அயோத்தியாகாண்டம், ஆரண்யகாண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தரகாண்டம், யுத்தகாண்டம்.
- ஏழாவது காண்டமாகிய உத்தர காண்டம் ஒட்டக்க்கூத்தர் எழுதினார்.
சுந்தரகாண்டம்:
- இக்காண்டாமே “காப்பியத்தின் மணிமகுடமாக” விளங்குகிறது.
- சிறிய திருவடி = அனுமன்
- அனுமனுக்கு “சுந்தரன்” என்னும் பெயரும் உண்டு.
- இராமனின் அடையாளமாக சீதையிடம் அனுமன் கொடுத்தது = கணையாழி
- சீதை அனுமனிடம் கொடுத்தது = சூடாமணி
சொற்பொருள்:
கழல் – திருவடி | முளரி – தாமரை |
தையல் – திருமகளாகிய சீதாப்பிராட்டி | இறைஞ்சி – வணங்கி |
திண்டிறல் – பேராற்றல் மிக்க இராமன் | ஓதி – கூந்தல் |
மற்று – மேலும் | துறத்தி – கைவிடுக |
திரை – அலை | மருகி – மருமகள் |
தனயை – மகள் | தடந்தோள் – அகன்ற தோள் |
உம்பி – உன் தம்பி | வேலை – கடல் |
கனகம் – பொன் | சாலை – பர்ணசாலை |
அலங்கல் – மாலை | கோரல் – கொல்லுதல் |
திருக்கம் – வஞ்சனை | முறிவு – வேறுபாடு |
வீங்கினள் – பூரித்தாள் | ஆழி – மோதிரம் |
தோகை – மயில் | மாமணிக்கரசு – சூடாமணி |
இலக்கணக்குறிப்பு:
மொய்கழல் – வினைத்தொகை | கழல் – தானியாகு பெயர் |
தழீஇ – சொல்லிசை அளபெடை | தெண்டிரை – பண்புத்தொகை |
அலைகடல் – வினைத்தொகை | துறத்தி – ஏவல் வினைமுற்று |
தடந்தோள் – உரிச்சொற்றொடர் | பெருந்தவம் – பண்புத்தொகை |
இற்பிறப்பு – ஏழாம் வேற்றுமைத்தொகை | களிநடம் – வினைத்தொகை |
கண்ணின் நீர்க்கடல் – உருவகம் | கோறல் – தொழிற்பெயர் |
ஆருயிர் – பண்புத்தொகை | பொன்னடி – உவமத்தொகை |
பேர்அடையாளம் – உம்மைத்தொகை | மலரடி – உவமத்தொகை |
மாமணி – உரிச்சொற்றொடர் | கைத்தலம் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை |
தேம்பாவணி
நூல் குறிப்பு;
- வீரமாமுனிவர் இயற்றியது தேம்பாவணி.
- இந்நூலில் மூன்று காண்டங்கள், முப்பத்தாறு படலங்கள், 3615 பாடல்கள் உள்ளன.
- தேம்பா + அணி = தேம்பாவணி. வாடாத மாலை எனப் பொருள்.
- தேன் + பா + அணி = தேம்பாவணி. தேன் போன்ற பாக்களை அணியாக உடைய நூல் எனப் பொருள் கொள்வர்.
- நூலின் தலைவன் = இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தை சூசை மாமுனிவர்.
- இந்நூலை “கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்” என்பர்.
வீரமாமுனிவர்:
- இயற் பெயர் = கொன்ஸ்டான் ஜோசப்பெஸ்கி
- கொன்ஸ்டான் என்னும் இத்தாலி மொழி சொல்லுக்கு அஞ்சாமை எனப் பொருள்.
- இவர் தம் பெயரை “தைரியநாதசாமி” என மாற்றிக்கொண்டார்.
- தமிழ்ச் சான்றோர் இவரை “வீரமாமுனிவர்” என அழைத்தனர்.
- 1710ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்த இப்பெரியார் 37 ஆண்டுகள் சமயப் பணியும் தமிழ்ப்பணியும் புரிந்து 1747ஆம் ஆண்டில் அம்பலக்காடு என்னும் இடத்தில இயற்கை எய்தினார்.
- படைப்புகள் = திருக்காவலூர் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை, வேதியர் ஒழுக்கம், பரமார்ர்த்த குரு கதை, செந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம், தொன்னூல் விளக்கம், சதுரகராதி போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார்.
- திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்துள்ளார்.
வளன் செனித்த படலம்:
- காப்பியத் தலைவனான வளன் என்னும் சூசை மாமுனிவர் தாவீது மன்னனின் அரச மரபில் தோன்றிய வரலாற்றை கூறுவதே வளன் செனித்த படலம் ஆகும்.
- யோசேப்பு என்றும் சூசை என்றும் ஒலிபெயர்க்கப்பட்ட ஜோசப் என்னும் பெயரை வீரமாமுனிவர் வளன் என்று தமிழ்ப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- வளங்களை வளரச் செய்பவன் என்னும் பொருளுடைய எபிரேய மொழியில் சூசை என்னும் பெயர் வழங்கி வருகிறது.
- அதன் நேரிய மொழி பெயர்பே தமிழில் வளன் ஆகும்.
கதை சுருக்கம்:
- யூதேயா நாட்டு மன்னன் சவுல்.
- பிலித்தையர் என்பார் திருமறையை பழித்தும் கடுவுளை இகழ்ந்தும் வந்தனர்.
- அரக்கன் கோலியாத் இச்ரேயால் மக்களை இகழ்ந்து, அவர்களுள் ஒருவனை போருக்கு அழைத்தான்.
- தாவீதன் என்னும் சிறுவன் அவனிடம் போர் புரிந்து அவனை கொன்றான்.
சொற்பொருள்:
மாலி – சூரியன் | ஆலி – மலை நீர் |
கரிந்து – கருகி | புடை – இடையின் ஒருபக்கம் |
வியன்வட்டம் – அகன்ற கேடயம் | கீண்டு – கிழித்து |
கிளர்ப – நிறைய | தொழும்பர் – அடிமைகள் |
ஓகையால் – களிப்பினால் | வெருவி – அஞ்சி |
கதத்த – சினமிக்க | கல்நெடுங்குவடு – மலைச்சிகரம் |
நிரூபன் – அரசன் | விளி – சாவு |
கைவயம் – தோள்வலிமை | மெய்வயம் – உடல் வலிமை |
ஐஞ்சிலை – ஐந்து கற்கள் | ஓதை – ஓசை |
மருகி – சுழன்று | மிடல் – வலிமை |
செல் – மேகம் | நுதல் – நெற்றி |
உருமு – இடி | மருங்கு – இடுப்பு |
சிரம் – தலை | அசனி – இடி |
இலக்கணக்குறிப்பு:
கதுவிடா – ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் | அகல்முகில் – வினைத்தொகை |
கருமுகில் – பண்புத்தொகை | கூடினர் – வினையாலணையும் பெயர் |
கதத்த – குறிப்பு பெயரெச்சம் | கேட்டனர் – வினையாலணையும் பெயர் |
தொடர்ந்தனன் நகைப்பான் – முற்றெச்சம் | அஞ்சினர் - வினையாலணையும் பெயர் |
கேட்ட வாசகம் – பெயரெச்சம் | கைவயம் – ஆறாம் வேற்றுமைத் தொகை |
அறிய ஆண்மை – குறிப்புப் பெயரெச்சம் | இருந்த பாலன் – பெயரெச்சம் |
கருமுகில் – பண்புத்தொகை | வைவேல் – உரிச்சொற்றொடர் |
காண்கிலர் – எதிர்மறை வினைமுற்று | நாமவேல் – உரிச்சொற்றொடர் |
பாண்டியன் பரிசு
ஆசிரியர் குறிப்பு:
- பாவேந்தர் பாரதிதாசன் புதுவையில் பிறந்தவர்.
- இயற்பெயர் = சுப்புரத்தினம்
- பெற்றோர் = கனகசபை, இலக்குமியம்மாள்
- தமிழாசிரியராக பணிபுரிந்தவர்.
- இவர் புரட்சிக் கவிஞர் என்றும், தமிழ்நாட்டு இரசூல் கம்சதேவ் என்றும் அழைக்கப்படுபவர்.
- இவரின் பிசிராந்தையார் நாடகம் சாகித்ய அகாடமி பரிசு பெற்றது.
- இவரின் “வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே” என்னும் பாடல் தற்பொழுது புதுவை அரசின் தமிழ் தாய் வாழ்த்தாக உள்ளது.
கதை:
- கதிர் நாட்டு மன்னன் கதிரைவேலன்.
- அவன் மனைவி கண்ணுக்கிணியாள், இவர்களின் ஒரே மகள் அன்னம்.
- கண்ணுக்கிணியாள் அண்ணனும் படைத்தளபதியும் ஆன நரிக்கண்ணன் சூழ்ச்சியால் நிகழ்ந்த வேழ நாட்டு படையெடுப்பில் அரசனும் அரசியும் இறந்தனர்.
- பாண்டிய மன்னன் பரிசாக வழங்கிய உடைவாளும் மணிமுடியும் கொள்ளை அடிக்க விரும்பினான் நரிக்கண்ணன்.
- பேழையை தவறுதலாக வீரப்பனிடம் கொடுத்துவிடுகிறான் நரிக்கண்ணன்.
- பேழையை கொண்டு வந்து தருபவர்களுக்கு அன்னம் மாலையிடுவாள் என் அறிவிக்கப்பட்டது.
- அரசியின் தோழி ஆத்தாக்கிழவி. இவள் அன்னத்தின் செவிலித்தாய்.
- ஆத்தாக்கிழவியின் மகன் வேலன்.
- ஆத்தாக்கிழவியின் கணவன் வீரப்பன்.
- அன்னத்தின் தோழி நீலி
சொற்பொருள்:
- மின் – மின்னல்
- குறடு – அரண்மனை முற்றம்
- பதடி – பதர்
- பேழை – பெட்டி
இலக்கணக்குறிப்பு:
- என்மகள் – நான்காம் வேற்றுமைத்தொகை
- காத்தார் – வினையாலணையும் பெயர்
- விலகாத – எதிர்மறை பெயரெச்சம்
- ஈன்ற தந்தை – பெயரெச்சம்
- இழந்த பரிசு – பெயரெச்சம்
சிற்றிலக்கியங்கள்
சிற்றிலக்கியம்:
- பிரபந்தம் என்ற வடசொல்லுக்கு “நன்கு கட்டப்பட்டது” என்பது பொருள்.
- சிற்றிலக்கியங்களின் இலக்கணம் கூறுவது பாட்டியல் நூல்கள்.
- பாட்டியல் நூல்களுள் வச்சணந்திமாலை குறிப்பிட்ட நூலாகும்.
- வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதியில் பிரபந்தம் 96 வகை எனக் கூறப்பட்டுள்ளது.
இராசராச சோழன் உலா
உலா:
- உலா என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
- உலா என்பதற்கு “பவனி வருதல்” என்பது பொருள்.
- தலைவன் வீதியில் உலா வர அவனைப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்னும் ஏழு வகைப் பருவ மகளிரும் காதல் கொள்வதாக அமைத்து பாடுவது உலா ஆகும்.
- இது கலிவென்பாவால் இயற்றப்படும்.
- இதில் பாட்டுடைத் தலைவனின் சிறப்பு, நீராடல், ஒப்பனை செய்தல், பரிவாரங்கள் புடைசூழத் தன் ஊர்தியில் ஏறி வரல் ஆகியவற்றை உலாவின் முன்னிலை என்பர்.
- உலாவரும் தலைவனைக் கண்டு காதல் கொண்ட ஏழு பருவ மகளிர் தனித்தனியாக கூறுவன உலாவின் பின்னிலை எனப்படும்.
- ஏழு பருவப் பெண்களின் வயது = பேதை(5-7), பெதும்பை(8-11), மங்கை(12-13), மடந்தை(14-19), அரிவை(20-25), தெரிவை(26-32), பேரிளம்பெண்(33-40).
ஒட்டக்கூத்தர்:
- இராசராசசோழன் உலாவை பாடியவர் ஒட்டக்கூத்தர்.
- இவர், “கவிச்சக்ரவர்த்தி, கவிராட்சசன்” என்றெல்லாம் புகழப்படுவார்.
- இவர், விக்ரமசோழன், இரண்டாம் குலோத்துங்கச் சோழன், இரண்டாம் ராசராசன் ஆகிய மூன்று மன்னர்களின் அவையிலும் செல்வாக்கோடு இருந்தவர்.
- இம்மூவரைப் பற்றி ஒட்டக்க்கூத்தர் பாடியதே, “மூவருலா”
- இவரின் இயற் பெயர் = கூத்தர்
- ஓட்டம்(பந்தயம்) வைத்துப் பாடுவதில் வல்லவர் ஆதலால் இவர் ஒட்டக்க்கூத்தர் எனப்பட்டார்.
சொற்பொருள்:
சூளிகை – நிலாமுற்றம் | சாளரம் – பலகணி |
தெற்றி – திண்ணை | பாங்கரும் – பக்கத்தில் உள்ள இடங்கள் |
பிணங்கி – நெருங்கி | மறுகு – தெரு |
கோடி – வளைந்து | சதகோடி – நூறுகோடி |
மகோததி – கடல் | உதியர் – சேரர் |
சரதம் – வாய்மை | பவித்ரம் – தூய்மை |
மூவெழுகால் – 21 தலைமுறை | அவனி – நாடு |
பெருமாள் – அரசர் | கூடல் – காவிரிப்பூம்பட்டினம் |
இலக்கணக்குறிப்பு:
வாயிலும் மாளிகையும் – எண்ணும்மை | எம்மருங்கும் – முற்றும்மை |
மாடமும் ஆடரங்கும் – எண்ணும்மை | செய்குன்று – வினைத்தொகை |
ஆடரங்கு – வினைத்தொகை | சுற்றிய பாங்கர் – பெயரெச்சம் |
மயங்கி, வணங்கி – வினையெச்சம் | செற்ற சிலை – பெயரெச்சம் |
காணீர் – ஏவல் வினைமுற்று | விட்டவள் – பெயரெச்சம் |
மதயெறிது - இரண்டாம் வேற்றுமைத்தொகை | முத்து முரசம் – பண்புத்தொகை |
ஓங்கியுயர் – ஒருபொருட்பன்மொழி | உயரண்டம் – வினைத்தொகை |
திருவேங்கடத்தந்தாதி
அந்தாதி:
- அந்தாதி 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
- அந்தம் = இறுதி, ஆதி = முதல்
- ஒவ்வொரு பாடலிலும் உள்ள இறுதி எழுத்தோ, அசையா, சீரோ அடியோ அதற்கு அடுத்து வரும் பாடலின் முதலாக வரும்படி அமைத்துப் பாடுவது அந்தாதி எனப்படும்.
- இதனை “சொற்றொடர்நிலை” எனவும் கூறுவர்.
பிள்ளை பெருமாள் ஐயங்கார்:
- இவர், “அழகிய மணவாளதாசர், திவ்வியக்கவி” எனவும் அழைக்கப்படுவார்.
- இவர் இயற்றிய எட்டு நூல்களின் தொகுதியை “அஷ்டப்பிரபந்தம்” என்று அழைப்பர்.
- “அஷ்டப்பிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்” என்னும் பழமொழி இந்நூலின் உயர்வைப் வெளிப்படுத்தும்.
- இவர் 1623 முதல் 1659 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரின் அவையில் ஓர் அலுவலராய் அமர்ந்து வாழ்க்கை நடத்தி வந்தார்.
சொற்பொருள்:
- கழல் – திருவடி
- பத்தி – ஊர்
- குஞ்சி – தலைமயிர்
- போதன் – பிரமன்
- வாசவன் – இந்திரன்
- அந்தி – மாலை
- வேலை – கடல்
- இருக்கு ஆரணம் – இருக்கு வேதம்
- கஞ்சம் – தாமரை மலர்
- அணங்கு – திருமகள்
- பொழில் – சோலை
இலக்கணக்குறிப்பு:
- சிற்றன்னை – பண்புத்தொகை
- தாழ்பிறப்பு – வினைத்தொகை
- மால் கழல் – ஆறாம் வேற்றுமைத்தொகை
- கழல் – தானியாகு பெயர்
- அந்தி காளை – உம்மைத்தொகை
- வேங்கடம் – வினைத்தொகை
- மதிவிளக்கு – உருவகம்
- சேவடி – பண்புத்தொகை
- இருக்கு ஆரணம் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
- நற்றாய் – பண்புத்தொகை
மதுரைக் கலம்பகம்
கலம்பகம்:
- பலவகை உறுப்பும் பலவகைப் பாவும் பாவினங்களும் பலவகைப் பொருளும் கலந்து செய்யப்பெறும் சிற்றிலக்கிய வகையை கலம்பகம் என்பர்.
- கதம்பம் என்பது கலம்பகம் எனத் திரிந்ததாக உ.வே.சா கூறுவார்.
- கலம்பகம் 18 உறுப்புகளை உடையது.
- தமிழின் முதல் கலம்பகம் = நந்திக் கலம்பகம்
குமரகுருபரர்:
- இவரின் காலம் பதினேழாம் நூற்றாண்டு.
- பிறந்தது முதல் ஐந்தாண்டு வரை பேசாத குழந்தையாக இருந்த இவர் பின்னர் திருச்செந்தூர் முருகப் பெருமானின் அருளால் பேசினார்.
- படைப்புகள் = மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், கந்தர்கலிவெண்பா, காசிக்கலம்பகம், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் போன்ற பல நூல்களை இயற்றி உள்ளார்.
- இவரது செய்யுட்களின் தனிச்சிறப்பு அவற்றின் “இன்னோசை” ஆகும்.
சொற்பொருள்:
- ஏமவெற்பு – மேருமலை
- ஏமம் – பொன்
- மலயாசலம் – பொதிகை மலை
இலக்கணக்குறிப்பு:
- கயிலாய வெற்பு – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
- அசலம் – காரணப்பெயர்
- முச்சங்கம் – பண்புத்தொகை
- வளர்கூடல் – வினைத்தொகை
- மதிப்பிஞ்சு – ஆறாம் வேற்றுமைத்தொகை
- இரைதேர் – இரண்டாம் வேற்றுமைத்தொகை
முக்கூடற்பள்ளு
பள்ளு:
- “பள்” என்பது பள்ளமான நன்செய் நிலங்களையும் அங்குச் செய்யப்படும் உழவினையும் குறிக்கும்.
- பள்ளு 96 வகை சிற்றிலக்கிய வகையுள் ஒன்று.
- தொல்காப்பியர் குறிப்பிடும் எட்டு வகைப்பிரிவில் ஒன்றான “புலன்” என்னும் இலக்கிய வகை “பள்ளு வகை” இலக்கியத்திற்கு பொருந்தும்.
முக்கூடற்பள்ளு:
- திருநெல்வேலிக்குச் சிறிது வடகிழக்கில் தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகளும் கலக்கும் இடத்திற்கு வடக்கே உள்ள சிற்றூர் முக்கூடல்.
- அங்குள்ள இறைவனாகிய அழகர் மீது பாடப்பட்டது இந்நூல்.
- சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியங் கொண்ட நூல், “முக்கூடற்பள்ளு” ஆகும்.
- இந்நூலை இயற்றியவர் பெயர் தெரியவில்லை.
- இது சிந்தும் விருத்தமும் பரவிவர பாடப்பெறும்.
இலக்கணக்குறிப்பு:
- வெண்தயிர் – பண்புத்தொகை
- காய, மாய – பெயரெச்சம்
- நாழிகை வாரம் – உம்மைத்தொகை
- தாபதர் உள்ளம் – ஆறாம் வேற்றுமைத்தொகை
- செந்நெல் – பண்புத்தொகை
- சுழி வெள்ளம் – வினைத்தொகை
மறுமலர்ச்சிப் பாடல்கள் - மாலைக்கால வருணனை
zநூல் குறிப்பு:
- வடமொழியில், வியாசர் இயற்றிய மகாபாரததக் கதையில் வரும் பாஞ்சாலி, துரியோதனன் சபையில் செய்த சூளுரையை மையமாகக் கொண்டு, பாரதியார் இக்குறுங்காவியத்தைப் படைத்தார்.
- பாஞ்சாலிசபதம் என்னும் இந்நூலில் அழைப்புச் சருக்கம் ,சூதாட்டச் சருக்கம், அடிமைச் சுருக்கம், துகிலுரிதற்சருக்கம், சபதச் சருக்கம் ஆகிய ஐந்து சருக்கங்கள் உள்ளன.
பாரதியார்:
- இவர் 1882ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 11ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்தார்.
- பெற்றோர் = சின்னசாமி, இலக்குமி அம்மையார்.
- இளமையிலேய கலைமகள் என்னும் பொருள் தரும்,”பாரதி” என்னும் பட்டதை பெற்றார்.
- இவர் இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.
- இவரின் முப்பெரும் படைப்புகள் = கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு.
சொற்பொருள்:
- பரிதி – சூரியன்
- வண்ணம் – அழகு
- முகில் – மேகம்
- பொய்கை – நீர்நிலை
- இருட்கடல் – நீலக்கடல்
- களஞ்சியம் – தொகுப்பு
இலக்கணக்குறிப்பு;
- படர்முகில் – வினைத்தொகை
- செழும்பொன் – பண்புத்தொகை
- தங்கத்தீவு – உருவகம்
- பொற்கரை – உருவகம்
- சுடரொளி – வினைத்தொகை
புத்தக சாலை
ஆசிரியர் குறிப்பு:
- பாரதிதாசன் புதுவையில் 1891ஆம் ஆண்டு பிறந்தார்.
- பெற்றோர் = கனகசபை, இலக்குமி அம்மாள்
- இயற்பெயர் = சுப்புரத்தினம்
- படைப்புகள் = குடும்ப விளக்கு, இருண்ட வீடு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, இசையமுது, அழகின் சிரிப்பு, கண்ணகி புரட்சிக் காப்பியம், பிசிராந்தையார் போன்ற பல நூல்களை படைத்துள்ளார்.
சொற்பொருள்:
- மனோபாவம் – உளப்பாங்கு
- சகமக்கள் – உடன் வாழும் மக்கள்
- ஒன்று – ஓரினம்
- இலகுவது – விளங்குவது
- சுவடி – நூல்
- சுவடிச்சாலை – நூலகம்
- சர்வகலாசாலை – பல்கலைக்கழகம்
இலக்கணக்குறிப்பு;
- அன்புநெறி – இருபெயரொட்டு பண்புத்தொகை
- உயர்எண்ணம் – வினைத்தொகை
- செந்தமிழ் – பண்புத்தொகை
- தருதல், வைத்தல் – தொழிற்பெயர்
காடு
ஆசிரியர் குறிப்பு;
- வாணிதாசன் புதுவையை அடுத்த வில்லியனூரில் பிறந்தவர்.
- பெற்றோர் = அரங்க திருக்காமு, துளசியம்மாள்
- இயற்பெயர் = அரங்கசாமி என்ற எத்திராசலு
- இவர் பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக்கல்வி பயின்றவர்.
- இவரின் பாடல்கள் சாகித்திய அகாதெமி வெளியிட்ட “தமிழ்க் கவிதைக் களஞ்சியம்” என்ற நூலிலும், தென்மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட “புதுதமிழ்க் கவிமலர்கள்” என்ற நூலிலும் மற்றும் பற்பல தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன.
- இவர், “தமிழ்-பிரெஞ்ச் கையகர முதலி” என்ற நூலை வெளியிட்டார்.
- பிரெஞ்ச் குடியரசு தலைவர் இவருக்கு “செவாலியர்” என்ற விருதினை வழங்கி உள்ளார்.
- இவர், “கவிஞரேறு, பாவலர் மணி, தமிழகத்தின் வோர்ட்ஸ்வொர்த்” என்று அழைக்கப்படுவார்.
சொற்பொருள்:
- வெய்யோன் – கதிரவன்
- புரையோடி – உள்ளுக்குள் அரிக்கப்பட்டு
- முதல் – வேர்
- செல் – ஒருவகை கரையான்
- சோங்கி – வாட்டமுற்று
சிக்கனம்
ஆசிரியர் குறிப்பு;
- இவமை கவிஞர் எனப்போற்றப்படுபவர் கவிஞர் சுரதா
- இவர் திருவாரூர் மாவட்டம் பழையனூரில் பிறந்தவர்.
- இயற்பெயர் = இராசகோபாலன்
- படைப்புகள் = தேன்மழை, துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும்.
- இவர் தமிழக இயலிசை நாடகமன்றம் வழங்கிய கலைமாமணி பட்டம் பெற்றவர்.
- இவருடைய “தேன்மழை” நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்றுள்ளது.
- பாவேந்தர் நினைவு பரிசினை பெற்ற முதல் கவிஞர் இவரே.
சொற்பொருள்;
- பகட்டு வாழ்க்கை – ஆடம்பரமான வாழ்க்கை
- செட்டு – சிக்கனம்
இலக்கணக்குறிப்பு:
- சட்டதிட்டம் – உம்மைத்தொகை
- நீதிநூல் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- நீரூற்று – ஆறாம் வேற்றுமைத்தொகை
- தீராத – எதிர்மறைப் பெயரெச்சம்
மனித நேயம்
ஆசிரியர் குறிப்பு;
- கவிஞர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் 01.06.1942 இல் சென்னையை அடுத்த ஆலந்தூரில் பிறந்தவர்.
- பெற்றோர் = கோபால், மீனாம்பாள்
- இவரின்”இமயம் எங்கள் காலடியில்” என்னும் கவிதைத் தொகுப்பு நூல் தமிழக அரசின் பரிசினை பெற்றுள்ளது.
சொற்பொருள்:
- சிந்தை – உள்ளம்
- குன்றி – குறைந்து
- சாந்தி – தெருக்கள் கூடுமிடம்
- சிறுமை – இழிவு
இலக்கணக்குறிப்பு:
- சிந்தித்தேன் – தன்மை ஒருமை வினைமுற்று
- கன்றுகுரல் – ஆறாம் வேற்றுமைத் தொகை
- தலைகுனிந்து – இரண்டாம் வேற்றுமைத் தொகை
வேலைகளல்ல வேல்விகளே!
ஆசிரியர் குறிப்பு:
- கவிஞர் தாராபாரதி 26.02.1947இல் திருவண்ணாமலை மாவட்டம் குவளை என்னும் ஊரில் பிறந்தார்.
- பெற்றோர் = துரைசாமி, புஷ்பம் அம்மாள்
- இவர் 34 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி, நல்லாசிரியருக்கான டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது பெற்றுள்ளார்.
- படைப்புகள் = புதிய விடியல்கள், விரல்நுனி வெளிச்சங்கள், பூமியைத் திறக்கும் பொன்சாவி, இன்னொரு சிகரம்.
சொற்பொருள்:
- மூடத்தனம் – அறியாமை
- மூலதனம் – முதலீடு
இலக்கணக்குறிப்பு;
- வெறுங்கை – பண்புத்தொகை
- விரல்கள் பத்தும் – முற்றும்மை
- பாறையும் – உயர்வு சிறப்பும்மை
- மலர்ச்சோலை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
- கங்கையும் சிந்துவும் – எண்ணும்மை
- தெற்கு வடக்காய் – முரண்தொடை
- மாவிலி – உரிச்சொற்றொடர்
தீக்குச்சிகள்
ஆசிரியர் குறிப்பு:
- கவிஞர் அப்துல் ரகுமான் 1937இல் மதுரையில் பிறந்தவர்.
- இவர், “மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” எனப் பாராட்டப்படுபவர்.
- படைப்புகள் = பால்வீதி, நேயர் விருப்பம், சொந்தச் சிறைகள், கரைகளே நதியாவதில்லை, விலங்குகள் இல்லாத கவிதை.
- தமிழக அரசின் “பாரதிதாசன் விருது”, தமிழ்ப்பல்கலைக்கழகம் வழங்கிய, “தமிழ் அன்னை விருது” போன்ற பல பரிசினை பெற்றுள்ளார்.
இலக்கணக்குறிப்பு:
- புல்நுனி – ஆறாம் வேற்றுமைத்தொகை
- கண்ணீர் வெள்ளம், பசிக்கயிறு – உருவகம்
- மெல்லிய காம்பு – உருவகம்
வழிப்பாட்டுப் பாடல்கள் - சிவபெருமான்
சுந்தரர்:
- சுந்தரர் தேவாரம் பன்னிருதிருமுறை வைப்பில் ஏழாந் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.
- சுந்தரர் திருமுனைப்பாடி நாட்டில் பிறந்தவர்.
- பெற்றோர் = சடையனார், இசை ஞானியார்.
- இயற்பெயர் = நம்பிஆரூரர்
- இவர் திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட நரசிங்க முனையரையர் என்ற சிற்றரசர் மகன்மை கொண்டு வளர்க்கப்பட்டார்.
- சிவபெருமான் இவரைத் தம் தோழராகத் கொண்டமையால் “தம்பிரான் தோழர்” என அழைக்கப்பட்டார்.
- இவர் எழுதிய திருதொண்டதொகை என்னும் நூலையே முதனூலாக கொண்டு சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணம் எழுந்தது.
சொற்பொருள்:
- காமகோபன் – காமனைக் காய்ந்தவன்
- ஆவணம் – அடிமையோலை
இலக்கணக்குறிப்பு:
- கண்ணுதல் – இலக்கணப் போலி
- பழ ஆவணம் – பண்புத்தொகை
- சொற்பதம் – ஒருபொருட் பன்மொழி
திருமால்
குலசேகர ஆழ்வார்:
- ஆழ்வார் என்னும் சொல்லுக்கு ஆழ்ந்தறியும் அறிவைக் கருவியாக உடையவர் என்றும் எம்பெருமானுடைய மங்கலக் குணங்களில் ஆழங்காற்பட்டவர் என்றும் பொருள் கூறுவர்.
- குலசேகர ஆழ்வார் சேரநாட்டுத் திருவஞ்சிக் களத்தில் தோன்றியவர்.
- இவர் எழுதிய பாடல்கள் பெருமாள் திருமொழி எனப்படும்.
- அவை மொத்தம் 105 பாடல்கள் ஆகும்.
- ஆழ்வார்களின் அருளிச் செயலுக்குப் பெரிய வாச்சான் பிள்ளை என்பார் உரை எழுதியுள்ளார்.
- திருவாய்மொழிக்கு வடக்குத் திருவீதிப் பிள்ளை என்பார் எழுதிய ஈடு என்னும் பேருரை ஆழமும் அகலமும் உடையதாகும்.
சொற்பொருள்:
- ஆனாத – குறைவு படாத
- அரம்பையர்கள் – தேவமாதர்கள்
புத்தர் பிரான்
ஆசிரியர் குறிப்பு:
- மணிமேகலை நூலின் ஆசிரியர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் ஆவார்.
- இவரைத் “தண்டமிழ் ஆசான்” எனப் புகழ்வர்.
- இவரின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.
- மணிமேகலை புத்த சமய காப்பியம்.
- இந்நூலுக்கு “மணிமேகலைத் துறவு” என்னும் வேறு பெயரும் உண்டு.
- இந்நூல் இந்திர விழவூரெடுத்த காதை முதலாகப் பவதிரம் அறுகெனப்பாவை நோற்ற காதை ஈறாக முப்பது காதைகளை உடையது.
சொற்பொருள்:
- தீர்த்தன் – தூயன்
- புராணன் – மிகப்பழையன்
- ஏமம் – பாதுகாப்பு
- ஆரம் – சக்கரக்கால்
- கடிந்தேன் – துறந்தேன்
இலக்கணக்குறிப்பு:
- தீநெறி – பண்புத்தொகை
- கடும்பகை – பண்புத்தொகை
- உணர்ந்த முதல்வன் – பெயரெச்சம்
அருகன்
நூல் குறிப்பு:
- அருகதேவனை பற்றி கூறியுள்ள இந்நூல் நீலகேசியாகும்.
- சீவக சிந்தாமணிக்கு நிகராக கவிதைச் சுவைமிக்க இந்நூலை எழுதியவர் விவரம் தெரியவில்லை.
- இந்நூல் “நீலகேசித் தெருட்டு” என்றும் அழைக்கப்படும்.
சொற்பொருள்:
- சாமரை – சாமரம் ஆகிய வெண்கவரி
- புடைபுடை – இருமருங்கினும்
- இயக்கர் – கந்தருவர்
- இரட்ட – அசைக்க
- சிங்காசனம் – அரியணை
- ஆசனம் – இருக்கை
- ஒளிமண்டிலம் – ஆலோகம்
- நிழற்ற – ஒளிர
- சந்திராதித்தம் – முத்துக்குடை
- சகலபாசனம் – பொற்குடை
- நித்தவிநோதம் – மணிக்குடை
இயேசு பெருமான்
ஆசிரியர் குறிப்பு:
- இரட்சணியம் என்பதற்கு ஆன்ம ஈடேற்றம் என்பது பொருளாம்.
- ஆன்ம ஈடேற்றம் விரும்புவார் செல்லும் சிந்தனை யாத்திரை என்பதுவே இரட்சணிய யாத்திரிகம் என்பதன் பொருள்.
- ஜான் பனியன் என்பார் எழுதிய பில்க்ரிம்ஸ் பிராகிரஸ் என்ற நூலினையே இரட்சணிய யாத்திரிகம் என படைத்துள்ளார்.
- எச்.ஏ.கிருடினப்பிள்ளை திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பு என்னும் ஊரினர்.
- பெற்றோர் = சங்கர நாராயணபிள்ளை, தெய்வநாயகி அம்மை
- படைப்புகள் = இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம், போற்றித் திருவகவல்.
- இவரை “கிறித்துவ கம்பர்” என்பர்.
சொற்பொருள்:
- கண்ணி – மரியன்னை
- காசினி – உலகம்
- வான்கதி – துறக்கம்
- மருவ – அடைய
இலக்கணக்குறிப்பு:
- கண்ணிபாலன் – நான்காம் வேற்றுமைத்தொகை
நபிகள் நாயகம்
உமறுப்புலவர்:
- உமறுப்புலவர் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் என்னும் ஊரினர்.
- தந்தை = செய்கு முகமது அலியார் என்னும் சேகு முதலியார்
- கடிகை முத்துப் புலவரின் மாணவர் இவர்.
- இவரின் காலம் பதினேழாம் நூற்றாண்டு.
- சீறாப்புராணம் வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க எழுதினார்.
- நூல் நூற்றும் முன்னரே சீதக்காதி இறந்ததால் அபுல் காசிம் என்பார் உதவியுடன் எழுதி முடிக்கப்பட்டது.
- பானு அஹமது மரைக்காயர் என்பவரே நூலை முழுவதும் எழுதி முடித்தார். அது “சின்னச் சீறா” எனப்பட்டது.
- உமறுப்புலவர் முதுமொழிமாலை, சீதக்காதி நொண்டி நாடகம் முதலிய நூல்களையும் எழுதியுள்ளார்.
சொற்பொருள்:
- பொறி – ஒளிப்பிழம்பு
- வடிவார் – வடிவினையுடையார்
- நவியார் – நபிகள் நாயகம்
இலக்கணக்குறிப்பு:
- மெய்ப்பொருள் – இருபெயரொட்டு பண்புத்தொகை
- சுவர்க்கபதி - இருபெயரொட்டு பண்புத்தொகை
No comments:
Post a Comment