இந்திய வரலாறு - முக்கிய போர்கள்
இந்திய வரலாறு - முக்கிய போர்கள்

 
1. ஹைடாஸ்பஸ் (ஜீலம்) போர் கி.மு.326
 கிரேக்க மன்னன் 
அலெக்சாண்டருக்கும் இந்திய மன்னர் போரஸ் என்கிற புருஷோத்த மனுக்கும் இடையே 
ஜீலம் நதிக்கரையில் கி.மு.326ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் அலெக்சாண்டர் 
வெற்றி பெற்றார். 
 2. செலியூகசுக்கு எதிராக போர்
 
செலியூகஸ் நிகேட்டருக்கும், சந்திரகுப்த மௌரியருக்கும் இடையே நடைபெற்றது. 
சந்திரகுப்த மௌரியர் வெற்றி பெற்றார். 
 3. கலிங்கப்போர் கி.மு.261  
 
அசோகர் கலிங்க நாட்டின்மீது கி.மு.261-ஆம் ஆண்டு படையெடுத்தார். 
இதனால் கலிங்கப்போர் நடைபெற்றது. இந்தப் போரில் பல்லாயிரக்கணக் கானவர்கள் 
கொல்லப்பட்டனர். இந்த கோரக் காட்சியை கண்டு மனம் வருந்திய அசோகர் இனி போர் 
செய்வதில்லை என சூளுரைத்தார்.
 
 4. முதல் அரேபியர் படையெடுப்பு 
கி.பி.711-713 
 முகம்மது பின் காசிம், படையெடுத்து சிந்து, 
மூல்டான் பகுதிகளைக் கைப்பற்றினார். 
 5. தானேசர் போர் கி.பி. 1014 
 முகமது கஜினி தானேசர் மன்னர் அனந்த பாலை தோற்கடித்தார். பல கோயில்களை
 அழித்ததுடன், நூற்றுக்கணக்கான மக்களை அடிமைகளாகப் பிடித்துச் சென்றார்.
 
 6. மூல்டான் மீது படையெடுப்பு கி.பி.1175
 
 முகமது கோரி 
மூல்டான்மீது படையெடுத்து மூல்டான் கோட்டையை கைப்பற்றினார். 
 7. 
முதலாவது தரேயின் போர் கி.பி.1191 
 அஜ்மீர் மன்னராகிய பிரித்விராஜ்
 சௌஹா னுக்கும் முகமது கோரிக்கும் இடையே முதலாவது தரேயின் போர் 
கி.பி.1191ஆம் ஆண்டு நடைபெற்றது. பிரித்விராஜ் சௌஹான் முகமது கோரியை 
தோற்கடித்தார். 
 8. இரண்டாம் தரேயின் போர் கி.பி.1192 
 
முகமது கோரி பிரித்விராஜ் சௌஹானைத் தோற்கடித்தார். டெல்லி, கனோஜ் நகரங்களை 
கைப்பற்றினார். 
 9. செங்கிஸ்கான் படையெடுப்பு 
 
செங்கிஸ்கான் என்ற மங்கோலியர் படையெடுத்தார். 
 10. தைமூர் 
படையெடுப்பு 
 தைமூர் இந்தியாவின்மீது படையெடுத்து டெல்லியை 
சூறையாடினார். 
 11. முதலாம் பானிபட் போர் கி.பி.1526 
 
பாபருக்கும், இப்ராகிம் லோடிக்கும் இடையே நடைபெற்ற இப்போரில், லோடி 
தோற்கடிக்கப்பட்டு முகலாய அரசு நிறுவப்பட்டது. 
 12. கன்வா போர் 
கி.பி.1527 
 பாபர் மேவார் மன்னர் ராணா சாங்காவைத் தோற்கடித்தார். 
 13. இரண்டாம் பானிபட் போர் கி.பி.1556
 
 அக்பர் ஹெமு என்ற 
இந்து மன்னரை தோற்கடித்தார். இதன் மூலம் மொகலாயர் ஆட்சி மீண்டும் 
நிறுவப்பட்டது. 
 14. தலைக்கோட்டை போர் கி.பி.1565 
 விஜயநகர
 மன்னராகிய ராமராயருக்கும் தக்காண சுல்தானுக்கும் இடையே தலைக்கோட்டை போர் 
நடைபெற்றது. விஜயநகரப் படை தோல்வியுற்றது. 
 15. ஹல்திகாட் போர் 
கி.பி.1576 
 மேவார் மன்னராகிய ராணா பிரதாப்பை மான்சிஸ், ஆசிப்கான் 
ஆகியவர்களின் தலை மையிலான முகலாயர் படை தோற்கடித்தது. 
 16. 
நாதிர்ஷாவின் படையெடுப்பு கி.பி.1739 
 ஈரான் மன்னர் நாதிர்ஷா 
இந்தியாவின் மீது படையெடுத்தார். இதில் முகலாய மன்னர் முகமத் ஷாவின் படைகளை
 தோற்கடித்தார். டெல்லி மக்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். 
 17. 
முதல் கர்நாடகப் போர் கி.பி.1746-1748 
 முதல் கர்நாடகப் போர் 
ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நடைபெற்றது. இதில் 
பிரெஞ்சு படைகள் தோற்கடிக்கப்பட்டு சென்னை ஆங்கிலேயர் வசம் வந்தது. 
 18. இரண்டாம் கர்நாடகப் போர் கி.பி.1749-54 
 ஆங்கிலேயருக்கும் 
பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நடைபெற்றது. பிரெஞ்சு செல்வாக்கு குறைந் 
தது. முகமது அலி கர்நாடக நவாப் ஆனார். 
 19. மூன்றாம் கர்நாடகப் 
போர் கி.பி.1756-63 
 வந்தவாசியில் பிரெஞ்சுப்படைகள் தோற்கடிக் 
கப்பட்டன. 
 20. பிளாசிப் போர் கி.பி. 1757 
 ராபர்ட் 
கிளைவின் தலைமையிலான ஆங்கிலப் படைக்கும், வங்காள நவாப் சிராஜூத் தௌலா 
வுக்கும் நடைபெற்றது. இதில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர். வங்காளத்தில் 
பிரிட்டிஷ் ஆதிக்கம் நிலை நாட்டப்பட்டது. 
 
21. வந்தவாசி போர் கி.பி.1760 
 
 பிரெஞ்சு கம்பெனியின் கவர்னராகிய தௌண்ட் வாலியை 
பிரிட்டிஷ் படைகளின் தளபதியான சர் அயர்கூட் வந்தவாசி என்ற இடத்தில் 
தோற்கடித்தார். 
 22. மூன்றாம் பானிபட் போர் கி.பி.1761 
 
மராட்டிய படைகளுக்கும் ஆப்கானிஸ்தான் மன்னர் அகமதுஷா அப்தாலிக்கும் இடையே 
பானிபட் என்ற இடத்தில் போர் நடைபெற்றது. மராட்டிய படைகள் தோல்வியடைந்தது. 
சதாசிவராவ் கொல்லப்பட்டார். 
 23. பக்சார் போர் கி.பி.1764 
 சர் தாமஸ் மன்றோவின் தலைமையிலான ஆங்கிலேயர் படைக்கும் அயோத்தியின் நவாப் 
மீர் காசிமுக்கும் இடையே பக்சர் போர் நடைபெற் றது. மீர்காசி போரில் 
தோல்வியுற்றார். வங்காளத் தில் கம்பெனி ஆட்சி உறுதி செய்யப்பட்டது. 
 24. முதல் ஆங்கிலோ- மைசூர் போர் கி.பி.1767-69 
 ஹைதர் அலி மதராஸ் 
கோட்டையை கைப்பற்றி னார். சென்னை உடன்படிக்கை கையெழுத்தானது. 
 25. 
இரண்டாவது ஆங்கிலோ மைசூர் போர் கி.பி.1780-84 
 ஹைதர் அலி, வாரன் 
ஹேஸ்டிங்ஸ்சால் தோற்கடிக்கப்பட்டார். 
 26. மூன்றாவது ஆங்கிலோ 
மைசூர் போர் கி.பி.1790-92 
 பிரிட்டிஷ் மற்றும் மைசூர் மன்னர் 
திப்புசுல்தான் இடையே ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை. 
 27. 
நான்காவது மைசூர் போர் கி.பி.1799 
 ஆர்தர் வெல்லெஸ்லியின் 
தலைமையில் பிரிட்டிஷ் படையினர் திப்பு சுல்தானை எதிர்த்து போரிட்டனர். 
இதில் திப்பு சுல்தான் கொல்லப் பட்டார். 
 28. மூன்றாவது ஆங்கிலோ 
மராத்திய போர் கி.பி.1817-18 
 மராத்தியர்களுக்கும் 
ஆங்கிலேயர்களுக்கும் இடையே நடைபெற்ற பல்வேறு போர்களில் பேஷ்வா பாஜிராவ் 
அப்பா சாகப் போஸ்லே, ஸோல்கர் ஆகிய மராத்திய மன்னர்கள் தோற்கடிக்கப்பட்டனர். 
 29. இரண்டாவது ஆங்கிலோ மராத்தியப் போர் கி.பி.1803-1819
 
 
ஆங்கிலேயர் சிந்தியா, பாண்ட்ஸ்லிக்கு இடையே நடைபெற்ற போரில் ஆங்கிலேயர் 
வென்றனர். 
 30. மூன்றாவது ஆங்கிலோ மராத்தியப் போர் கி.பி.1817-1819 
 ஆங்கிலேயர் பேஷ்வாக்கள், பாண்ட்ஸ்லி, ஹோல்கர் போன்றோருக்கு 
நடைபெற்றது. இதில் ஹோல்கர் தோற்கடிக்கப்பட்டார்.
 
 31. முதல் 
சீக்கியப் போர் கி.பி.1845-46: 
 ஆங்கிலேய ராணுவம் பஞ்சாபில் 
சீக்கிய ராணுவத்தை மஸுரி, பெரோஸ்ஷா மற்றும் அப்ர வானில் நடந்த போர்களில் 
தோற்கடித்தது. 
 32. இரண்டாவது சீக்கியப் போர் கி.பி.1848-49 
 ஆங்கிலேயருக்கும், சீக்கியர்களுக்கு மிடையே நடைபெற்ற போரில் சீக்கியர்கள் 
தோற்கடிக்கப்பட் டனர். பஞ்சாப் கிழக்கு இந்தியக் கம்பெனியால் 
கைப்பற்றப்பட்டது. 
 33. முதல் இந்திய சுதந்திரப்போர் கி.பி.1857
ஆங்கிலேயர்களால் "சிப்பாய் கலகம்' என அழைக்கப்பட்ட முதல் இந்திய சுதந்திரப் போர் ஆங்கிலேயர்களை எதிர்த்து மன்னர்களும் இந்திய சிப்பாய்களும் போரிட்டனர். இது உத்திரப் பிரதேச மாநிலத்தில் மீரட் என்ற ஊரில் முதன் முதலாக ஆங்கில ஆட்சியை எதிர்த்து இந்தியர்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள்.   
 
 
 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment