வாழ்த்து
முத்தே பவளமே மொய்த்தபசும் பொற்சுடரே சித்தேஎன் னுள்ளத் தெளிவே பராபரமே கண்ணே கருத்தேயென் கற்பகமே கண்ணிறைந்த விண்ணே ஆனந்த வியப்பே பராபரமே - தாயுமானவர் |
சொற்பொருள்:
- சுடர் – ஒளி
- ஆனந்தம் – மகிழ்ச்சி
- பராபரம் – மேலான பொருள், இறைவன்
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் = தாயுமானவர்
- பெயர் காரணம் = திருச்சி மலைமீது உள்ள இறைவனான தாயுமானவர் அருளால் பிறந்தமையால் இவருக்கு தாயுமானவர் என்று பெயர் சூட்டப்பட்டது.
- பெற்றோர் = கேடிலியப்பர் – கெசவல்லி அம்மையார்
- மனைவி = மட்டுவார்குழலி
- ஊர் = நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமறைக்காடு(வேதாரண்யம்)
- நூல் = தாயுமானவர் திருப்பாடல் திரட்டு
- பணி = திருச்சியை ஆண்ட விஷய ரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலர்
- காலம் = கி.பி. 18ம் நூற்றாண்டு
- நினைவில்லம் = இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரத்தில் உள்ளது
நூல் குறிப்பு:
- இப்பாடல் “தாயுமானவர் திருப்பாடல் திரட்டு” என்னும் நூலில் “பராபரக்கண்ணி” என்னும் தலைப்பில் உள்ளது.
திருக்குறள்
சொற்பொருள்:
- வினை - செயல்
- காப்பு - காவல்
- நீரவர் - அறிவுடையார்
- கேண்மை - நட்பு
- நவில்தொறும் - கற்கக்கற்க
- நயம் - இன்பம்
- நகுதல் - சிரித்தல்
- கிழமை - உரிமை
- அகம் - உள்ளம்
- ஆறு - நல்வழி
- உய்த்து - செலுத்தி
- உடுக்கை - ஆடை
- கொட்பின்றி - வேறுபாடு இல்லாமல்
- புனைதல் - புகழ்தல்
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் = திருவள்ளுவர்
- வேறுபெயர்கள் = முதற்பாவலர், பொய்யில் புலவர், பெருநாவலர், செந்நாப்போதார்
- காலம் = கி.மு. 31ம் நூற்றாண்டு
சிறப்பு;
- பாரதியார் இவரை
“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகல் கொண்ட தமிழ்நாடு” என்றார்.
- பாரதிதாசன் இவரை
“ வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” என்றார்.
நூல் குறிப்பு:
- இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- குறள் வெண்பாக்களால் ஆனதால், குறள் எனவும், மேன்மை கருதி திரு என்னும் அடைமொழியுடன் திருக்குறள் எனவும் அழைக்கப்பெறுகிறது.
- இது “உலகப்பொதுமுறை” என போற்றப்படுகிறது.
- வாயுறை வாழ்த்து, பொதுமறை, பொய்யா மொழி, தெய்வ நூல் முதலிய பெயர்களும் இதற்கு உண்டு.
நூல் சிறப்பு:
- உருசிய நாட்டில் அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் உள்ள சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் திருக்குறளும் இடம்பெற்றுள்ளது.
- இங்கிலாந்து நாட்டுக் காட்சிச்சாலையில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் வளர்த்த சான்றோர்
தமிழ் வளர்த்த சான்றோர்:
- புதுக்கவிதைக்கு = பாரதியார்
- சமுதாய புரட்சிக்கு = பாரதிதாசன்
- பொதுவுடைமை = திரு.வி.க
- தனித்தமிழுக்கு = மறைமலையடிகள்
- பேச்சுக்கலை = அறிஞர் அண்ணா
- சிறுகதை = புதுமைப்பித்தன்
வீரமாமுனிவர்(1680 – 1747):
- இவர் இத்தாலி நாட்டில் பிறந்தார்.
- இவரின் இயற்பெயர் “கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி”.
- இவர் தம் முப்பதாம் வயதில் தமிழகம் வந்தார்.
- தமிழின் மீது கொண்ட பற்றின் காரணமாக தன் பெயரை “தைரியநாதன்” என மாற்றிகொண்டார்.
- பின்னர் தனித்தமிழுக்கு ஏற்ப “வீரமாமுனிவர்” என மாற்றம் பெற்றது.
சதுரகராதி, தேம்பாவணி:
- தமிழில் முதன்முதலாக “சதுரகராதி” என்னும் அகரமுதலியை படைத்தார்.
- கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் எனப் போற்றப்படும் “தேம்பாவணி” என்னும் காப்பியத்தை படைத்தார்.
எழுத்து சீர்திருத்தம்:
- தமிழ் எழுத்து வரிவடிவத்தை திருத்தி, எழுத்துச் சீர்திருத்தம் செய்தார்.
குட்டித் tholkaதொல்காப்பியம்:
- குட்டித் தொல்காப்பியம் எனப் போற்றப்படும் “தொன்னூல் விளக்கம்” படைத்தார்.
பிற நூல்கள்:
- கலம்பகம், அம்மானை போன்ற சிற்றிலக்கிய வகை நூல்களையும், பரமார்த்த குரு கதை என்னும் நகைச்சுவை நூலையும் படைத்தார்.
ரா.பி.சேதுபிள்ளையின் பாராட்டு:
- “தேம்பாவணி, காவலூர் கலம்பகம் கதம்ப மாலையாக காட்சி அளிக்கிறது. தொன்னூல் பொன்நூலாக இலங்குகின்றது. சதுரகராதி முத்தாரமாக மிளிர்கிறது. வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்” என ரா.பி.சேதுபிள்ளை பாராட்டுகிறார்.
குணங்குடி மஸ்தான்(1788 – 1835):
- “மாதவஞ்ச்சேர் மேலோர் வழுத்தும் குனங்குடியான்” என்று அழைக்கப்படுபவர்.
- இயற்பெயர் = குணங்குடி மஸ்தான் சாகிபு.
- இளம்வயதிலே முற்றும் துறந்தவராய் வாழ்ந்தவர்.
தாயுமானவர் மீது பற்று:
- இவர் தாயுமானவர் பாடல்கள் மீட்கு பெரிதும் பற்று கொண்டவர்.
- அவருடைய பராப்பரக்கண்ணிப் போலவே ஓசை நயம் மிக்க பாடல்கள் பல இயற்றியுள்ளார்.
- பராப்பரக்கண்ணி, எக்காலக்கண்ணி, மனோன்மணிக்கண்ணி, நந்தீஸ்வரக்கண்ணி முதலியன இவர் பாடிய சில கண்ணிகள்.
அழியாப் பேரின்பம்:
- இவர்தம் பாடல்கள், உலகின் உண்மை நிலையை உணர்த்தி அழியாப் பேரின்பப் பெருவாழ்விற்கு நம்மை அழைத்து செல்லும்.
- இவர் குருநிலை, தவநிலை, துறவுநிலை, நியமநிலை, காட்சிநிலை, தியானநிலை, சமாதிநிலை எனப் பொருள்தரும் வகையில் பாடல்கள் பல இயற்றியுள்ளார்.
நான்மணிமாலை:
- இவர் மீது கொண்ட பற்றின் காரணமாக திருத்தணி சரவணப் பெருமாள் நான்மணிமாலை ஒன்று இயற்றியுள்ளார்.
- அந்நூலில் “மடல் சூல்புவியில உளத்திருளைக் கருணை ஒளியினாற் களைந்து, விடல்சூழ்பவரின், குனங்குடியான், மிக்கோன் எனற்குஓர் தடையுளதோ?” எனக் கேட்கிறார்.
- “தடை உண்டு என உரைப்பார் தமிழுலகில் இல்லை” என்கிறார்.
ஆறுமுக நாவலர்(1822 – 1879):
- இவர் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்.
- இயற் பெயர் = ஆறுமுகனார்.
- இளமையிலே சைவ சிந்தாந்த சாத்திரங்கள் படித்தவர்.
நாவலர் பட்டம்:
- இவரின் சொற்பொழிவு திறமையை கண்டு திருவாவடுதுறை ஆதினம் இவருக்கு “நாவலர்” பட்டம் வழங்கினார்.
- இவர் சிறந்த பதிப்பாசிரியர் மற்றும் உரையாசிரியர்.
இலக்கண வலுவற்ற தூய்மை:
- நாவலரே முதன் முதலில் இலக்கண வலுவற்ற தூய்மையான எளிய தமிழ் உரைநடையை கையாண்டார்.
பரிதிமாற் கலைஞர் பாராட்டு:
- தமிழ் உரைநடைக்கு இவர் ஆற்றிய தொண்டிற்காக பருதிமார் கலைஞர் இவரை “வசன நடை கைவந்த வல்லாளர்” என பாராட்டினார்.
அச்சுக்கூடம் நிறுவுதல்:
- சென்னையில் அச்சுக்கூடம் நிறுவி, சிறந்த தமிழ் நூல்கள் பல பதிப்பித்தார்.
- பாரதம், பெரியபுராணம், கந்தபுராணம், திருக்குறள் பரிமேலழகர் உரை போன்ற இலக்கிய நூல்களை பதிப்பித்தார்.
- இலக்கண வினாவிடை, இலக்கண சுருக்கம், நன்னூல் விருத்தியுரை, நன்னூல் காண்டிகையுரை, இலக்கண கொத்து, இலக்கண சூறாவளி முதலிய இலக்கண நூல்களை பதிப்பித்து வெளியிட்டார்.
- முதல் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை பாலபாடங்களையும் எழுதி அச்சிட்டு வெளியிட்டார்.
ஜி.யு.போப்
பிறப்பு:
- பெயர் = ஜியார்ஜ் யுக்ளோ போப் என்று அழைக்கப்படும் ஜி.யு.போப்
- பிறந்த ஊர் = பிரான்ஸ் நாட்டின் எட்வர்ட் தீவு
- பிறப்பு = கி.பி.1820ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி
- பெற்றோர் = ஜான் போப், கேதரின் போப்
ஹென்றி:
- போப்பின் தமையனார் ஹென்றி என்பவர், தமிழகத்தில் கிறித்துவமதத்தைப் பரப்பும் சமய குருவாகப் பணியாற்றினார்.
- அவரைப்போன்று பணியாற்ற விரும்பி, தமது 19வது வயதில் தமிழகம் வந்தார்.
- அவர் பாய்மரக் கப்பலில் தமிழகம் வந்து சேர எட்டு மாதங்கள் ஆகின.
முதல் சமயப்பணி:
- தமிழ்நாட்டில் சென்னை சாந்தோம் பகுதியில் முதலில் சமயப்பணி ஆற்றினார்.
திருநெல்வேலி – சாயர்புரம்:
- திருநெல்வேலி மாவட்டம் சாயர்புரம் என்னும் பகுதியில் சமயப்பணி ஆற்றினார்.
- அங்கு பள்ளிகளை நிறுவினார். கல்விப்பனியையும் சமயப்பணியையும் ஒருங்கே ஆற்றினார்.
- சமயக்கல்லூரியில் தமிழ் இலக்கியங்கள், ஆங்கில இலக்கியங்கள் முதலியவற்றையும் கிரேக்கம், இலத்தின், எபிரேயம் முதலிய மொழிகளையும் கற்றுத்தர ஏற்பாடு செய்தார்.
- கணிதம், அறிவாய்வு(தருக்கம்), மெய்யறிவு(தத்துவம்) ஆகியவற்றை கற்பிக்கும் கல்லூரி ஆசிரியராகவும் பணியாற்றினார்.
- திருநெல்வேலியில் 1842 முதல் 1849 வரை பணியாற்றினார்.
திருமணம்:
- 1850இல் இங்கிலாந்து சென்று திருமணம் செய்துக்கொண்டு, தம் மனைவியுடன் மீண்டும் தமிழகம் வந்து தஞ்சாவூரில் சமயப்பணி ஆற்றினார்.
தமிழ் இலக்கிய ஆர்வம்:
- தஞ்சையில் பணியாற்றிய எட்டு ஆண்டுக் காலத்தில், புறநானூறு முதலான சங்க நூல்களையும் நன்னூல் முதலான இலக்கணங்களையும் பயின்றார்.
- அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
ஏடுகளில் தமிழ் பணி:
- “இந்தியன் சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு” போன்ற ஏடுகளில் ஆராய்ச்சி கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதினார்.
- அக்கட்டுரைகளில் புறநானூற்றுப் பாடல்களும், புறப்பொருள் வெண்பாமாலைத் திணை விளக்கங்களும், தமிழ்ப்புலவர் வரலாறும் இடம் பெற்றன.
தமிழ் செய்யுட் கலம்பகம்:
- போப் உயர்ந்த பண்பாட்டுக்குரிய பொறுமை, சினமின்மை, நட்பு முதலானவற்றை விளக்கும் 600 செய்யுள்களை, நீதிநூல்களில் இருந்து எடுத்து, “தமிழ் செய்யுட் கலம்பகம்” என்னும் தொகுத்து அதன் விளக்கங்களையும் எழுதி வெளியிட்டார்.
தமிழ் பாடநூலின் முன்னோடி:
- பள்ளி குழந்தைகளுக்காக வினாவிடை முறையில் இரு இலக்கண நூல்களை எழுதி வெளியிட்டார்.
- பெரியவர்கள் கற்கும் வகையில் இலக்கண நூலொன்றையும் படைத்தார்.
- மேலை நாட்டார் தமிழை எளிதில் கற்றுக்கொள்ளும் வகையில் “தமிழ்-ஆங்கில அகராதி” ஒன்றையும், “ஆங்கிலம்-தமிழ் அகராதி” ஒன்றையும் எழுதி வெளியிட்டார்.
- பழைய தமிழ் இலக்கியங்களில் இருந்து சில செய்யுள்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டு, அதனைப் பாடநூலாக வைக்க ஏற்பாடு செய்தார்.
உதகை:
- 1858ஆம் ஆண்டு உதகமண்டலம் சென்ற அவர், பள்ளி ஒன்றைத் தொடங்கி அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
தமிழ்த்தொண்டு:
- இங்கிலாந்திற்கு சென்ற போப் 23 ஆண்டுகள் இங்கிலாந்துப் பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராக பணிபுரிந்தார்.
- திருக்குறளை 40 ஆண்டுகள் படித்துச் சுவைத்த போப் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து செப்டம்பர் 1, 1886ஆம் ஆண்டு வெளியிட்டார்.
- தமது 86ஆம் வயதில் 1900ஆம் ஆண்டு திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பினை வெளியிட்டார்.
தமிழ் மாணவன்:
- 13.02.1908 அன்று போப் தம் இன்னுயிரை நீத்தார்.
- அவர், தம் கல்லறையில் “இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்” என எழுத வேண்டும் என்று தமது இறுதிமுறியில் எழுதி வைத்தார்.
- அவர் தன்னை “தமிழ் மாணவன்” என்றே தம்மை கூறிக்கொண்டார்.
இனியவை நாற்பது
சலவரைச் சாரா விடுதல் இனிதே புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம் தகுதியால் வாழ்தல் இனிது -பூதந்சேந்தனார் |
சொற்பொருள்:
- குழவி – குழந்தை
- பிணி – நோய்
- மாறி – மயக்கம்
- கழரும் – பேசும்
- சலவர் – வஞ்சகர்
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் = மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதந்சேந்தனார்
- ஊர் = மதுரை
- காலம் = கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
நூல் குறிப்பு:
- இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- நன்மைத்தரும் இனிய கருத்துகளை நாற்பது பாடல்களில் இனியவை நாற்பது எனப் பெயர்பெற்றது.
தமிழ்ப்பசி
சொற்பொருள்:
- குவை – குவியல்
- மாறன் – மன்மதன்
ஆசிரியர் குறிப்பு:
- இயற்பெயர் = க.சச்சிதானந்தன்
- ஊர் = இலங்கையில் யாழ்ப்பான மாவட்ட பருத்தித்துறை
- பணி = ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் விரிவுரையாளர் பணி
- புலமை = தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளில் புலமை
- படைப்புகள் = ஆனந்தத்தேன்(கவிதைத்தொகுதி-1954), அன்னபூரணி(புதினம்), யாழ்பானக்காவியம்
- சிறப்பு = மகாவித்துவான் நவநீதகிருட்டின பாரதியின் மாணவர். இவர் தம் பாடல்களில் கம்பனின் மிடுக்கையும், பாரதியின் சினப்போக்கையும் ஒருமித்துக் காணலாம்.
அகரமுதலி வரலாறு
அகராதி:
- அகரம் + ஆதி =அகராதி
- ஒரு மொழியில் உள்ள எல்லாச் சொற்களையும் அகரவரிசையில் அமையும்படி ஒருசேரத் தொகுத்து விளக்கும் நூலை அகராதி என்பர்.
- அகராதி என்னும் சொல் தற்போது அகரமுதலி என வழங்கப்படுகிறது.
நிகண்டுகள்:
- தமிழ் அகரமுதலி வரலாற்றில், செம்பாதி இடத்தைப்பெறும் சொற்பொருள் துறை நூல்கள் நிகண்டுகளாம்.
- நிகண்டுகளில் பழமையானது = திவாகரர் எழுதிய சேந்தன் திவாகரம்.
- நிகண்டுகளில் சிறப்பானது = மண்டலபுருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு.
அகரமுதலி:
- திருமூலரின் திருமந்திரத்தில் “அகராதி” என்னும் சொல் முதன்முதலாக இடம் பெற்றுள்ளது.
அகராதி நிகண்டு:
- நிகண்டுகளில் ஒன்றான “அகராதி நிகண்டில்” அகராதி என்ற சொல் அடைமொழியாக அமைந்துள்ளது.
- இந்நூலே அகரமுதலிகள் தோன்றுவதற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
- இந்நூலில் சொற்களின் முதல் எழுத்துக்கள் மட்டுமே அகரவரிசையில் அமைந்திருந்தன.
சதுரகராதி:
- வீரமாமுனிவரின் சதுரகராதியே தமிழில் தோன்றிய முதல் அகரமுதலி.
- இது கி.பி.1732ஆம் ஆண்டு வெளிவந்தது.
- சதுர் என்பதற்கு நான்கு என்று பொருள்.
- பெயர், பொருள், தொகை, தொடை என நான்கு வகைகளில் தனித்தனியாக பொருள் விளக்கம் இருந்தது.
- வீரமாமுனிவர் தமிழ்-இலத்தின் அகராதி, இலத்தின்-தமிழ் அகராதி, தமிழ்-பிரெஞ்சு அகராதி, பிரெஞ்சு-தமிழ் அகராதி, போர்த்துகீசிய-தமிழ்-பிரெஞ்சு அகராதி வெளியிட்டார்.
சங்க அகராதி:
- “தமிழ்-தமிழ் அகராதி” ஒன்று லேவி-ஸ்பாடிஸ் என்பவரால் வெளியிடப்பட்டது.
- யாழ்பாணம் கதிரைவேலனாரால் “தமிழ்ச்சொல் அகராதி” வெளியிடப்பட்டது. இதனை “சங்க அகராதி” எனவும் அழைப்பர்.
- இதில் சொல்லின் மூலம் தருதல், மேற்கோள் அமைதல் எனும் மரபு பின்பற்றப்பட்டுள்ளது.
பிற அகரமுதலிகள்:
- குப்புசாமி என்பவர் “தமிழ்ப் பேரகராதி” வெளியிட்டார்.
- இராமநாதன் என்பவர் படங்களுடன் கூடிய ஓர் அகரமுதலியை வெளியிட்டார். இந்நூல் “இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அகராதி” எனும் பெயருடன் வந்தது.
- வின்சுலோ என்பவர் “தமிழ்-ஆங்கிலப் பேரகராதி” வெளியிட்டார்.
பவானந்தர்:
- பவானந்தர் என்பார் 1925ஆம் ஆண்டு “தற்காலத் தமிழ்ச்சொல் அகராதியும்”, 1937ஆம் ஆண்டு “மதுரைத் தமிழ்ப் பேரகராதியும்” வெளியிட்டார்.
சண்முகம்:
- மு.சண்முகம் என்பவரால் “தமிழ்-தமிழ் அகரமுதலி” 1985ஆம் ஆண்டு தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டது
தமிழ் லெக்சிகன்:
- இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப்பெரிய அகரமுதலி “சென்னைப் பல்கலைக்கழக அகராதி”.
- இது நன்கு திட்டமிட்டு முழுமையாக உருவாக்கப்பட்டது.
- இவ்வகரமுதலி “தமிழ் லெக்சிகன்” என்னும் பெயரில் ஆறு தொகுதிகளாக வெளிவந்தது.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி:
- 1985ஆம் ஆண்டு “தேவநேயபாவாணர்”யின் “செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி”யின் முதல் தொகுதி வெளிவந்தது.
- இரண்டாவது தொகுதி 1993ஆம் ஆண்டு வெளியானது.
- ஒவ்வொரு சொல்லின் சொற்பிறப்பும், இனமொழிச் சொற்களுக்கான குறிப்பும், பதிப்பின் இறுதியில் தரப்பட்டுள்ளன.
- படங்களுடன் வெளி வந்த இரண்டாவது அகரமுதலி இதுவேயாகும்.
கணினி உதவியுடன் அகரமுதலி:
- முழுமையாக கணினி உதவியுடன் உருவாக்கப்பட்டு வெளிவந்த முதல் அகரமுதலி “கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி”.
- விளக்கச் சொற்களோடு வெளிவந்த முதல் அகரமுதலி இதுவே.
கலைக்களஞ்சியம்:
- தமிழ்க் கலைக்களஞ்சியங்களின் முன்னோடி = அபிதான கோசம்.
- இது 1902ஆம் ஆண்டு இலக்கியப் புராண இதிகாசச் செய்திகளைக்கொண்டு வெளிவந்தது.
- இது இலக்கியக் களஞ்சியம் ஆக திகழ்கிறது.
அபிதான சிந்தாமணி:
- 1934ஆம் ஆண்டு இலக்கியச் செய்திகளோடு, அறிவியல் துறைப் போருகளையும் முதன் முதலாகச் சேர்த்து விளக்கம் தந்து வெளிவந்தது = அபிதான சிந்தாமணி.
- இதனை சிங்காரவேலனார் தொகுத்து வெளியிட்டார்.
தமிழ் வளர்ச்சி கழகம்:
- தமிழ் வளர்ச்சி கழகம் முறையான “முதல் கலைக்களஞ்சியத்தை” தொகுத்து வெளியிட்டது.
- இது பத்து தொகுதிகளை உடையது.
- இக்கழகம் குழந்தைகள் கலைக்களஞ்சியம், நாடகக் கலைக்களஞ்சியம், இசுலாமிய கலைக்களஞ்சியம் முதலிய பல கலைக்களஞ்சியங்களை வெளியிட்டது.
கலைச்சொல் அகரமுதலி:
- காலைக்கதிர் நிறுவன முயற்சியால் பொதுஅறிவு, உளவியல், புவியியல், புள்ளியல், வரலாறு, வானவியல் முதலிய துறைகளுக்கும் கலைச்சொல் அகரமுதலிகள் 1960ஆம் ஆண்டு தொகுக்கக்ப்பட்டன.
- மணவை முஸ்தபா அறிவியல் சார்ந்த துறைவாரியான கலைச்சொல் அகரமுதலிகளைத் தொகுத்து வெளியிட்டார்.
- அறிவியல் கலைச்சொல் களஞ்சியம் 1991ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
திருவள்ளுவமாலை
தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட
பனையளவு காடும் படித்தால் – மனையளகு
வள்ளைக்(கு) உறங்கும் வளநாட! வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி- கபிலர்
சொற்பொருள்:
- வள்ளை – நெல் குத்தும்போது பெண்கள் பாடும் பாட்டு
- அளகு – கோழி
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் – கபிலர்
- காலம் – கி.பி.இரண்டாம் நூற்றாண்டு என்றும், சங்ககாலத்திற்கு பின் என்றும் கூறுவர்.
நூல் குறிப்பு:
- திருக்குறளின் சிறப்பை உணர்த்த திருவள்ளுவமாலை என்னும் தனிநூல் எழுந்தது.
- இந்நூலில் 53 புலவர்கள் பாடிய 55 பாடல்கள் உள்ளன.
- இப்பாடல் அறிவியல் அணுகுமுறையை சார்ந்தது.
உவமை:
- சிறுபுல்லின் தலையில் தினையளவினும் சிறுபனிநீர் நெடிதுயர்ந்த பனை மரத்தின் உருவத்தை தன்னுள் தெளிவாக காட்டும்.
உவமிக்கப்படும் பொருள்:
- வள்ளுவரின் குறள் வெண்பாக்கள் அருள்பெறும் கருத்துக்களைத் தம்மகத்தே அடக்கிக் காட்டும்.
அறிவியல் கருத்து:
- ஒளியைக் கோட்டம் அடையச் செய்வதனால் தொலைவிலுள்ள பொருளின் உருவத்தை அண்மையில் தோன்றும்படி செய்யலாம் என்று கண்டவர் கலீலியோ கலிலி.
- நெடுந்தொலைவிலுள்ள பெரிய பனைமரத்தின் உருவத்தைப் புள் நுனியில் தேங்கிய சிருபனித்துளி மிகத்தெளிவாகக் காட்டும் என்ற கபிலரின் சிந்தனை அன்றைய தமிழரின் அறிவியல் கருத்தை வெளிப்படுத்துக்கிறது.
நளவெண்பா
சொற்பொருள்:
- ஆழி – கடல்
- விசும்பு – வானம்
- செற்றான் – வென்றான்
- அரவு – பாம்பு
- பிள்ளைக்குருகு – நாரைக்குஞ்சு
- வள்ளை – ஒருவகை நீர்க்கொடி
- கடா – எருமை
- வெளவி – கவ்வி
- சங்கின் பிள்ளை – சங்கின்குஞ்சுகள்
- கொடி – பவளக்கொடி
- கோடு – கொம்பு
- கழி – உப்பங்கழி
- திரை – அலை
- மேதி – எருமை
- கள் – தேன்
- புள் – அன்னம்
- சேடி – தோழி
- ஈரிருவர் – நால்வர்
- கடிமாலை – மணமாலை
- தார் – மாலை
- காசினி – நிலம்
- வெள்கி – நாணி
- மல்லல் – வளம்
- மடநாகு – இளைய பசு
- மழவிடை – இளங்காளை
- மறுகு – அரசவீதி
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் – புகழேந்திப் புலவர்
- பிறந்த ஊர் – களத்தூர்
- சிறப்பு – வரகுண பாண்டியனின் அவைப் புலவர்
- ஆதரித்த வள்ளல் – சந்திரன் சுவர்க்கி
- காலம் – பனிரெண்டாம் நூற்றாண்டு
- இவரை “வெண்பாவிற் புகழேந்தி” என சிறப்பிப்பர்.
நூல் குறிப்பு:
- நளவெண்பா என்பது, நளனது வரலாற்றை வெண்பாக்களால் கூறும் நூலென விரிந்து பொருள் தரும்.
- இந்நூல் சுயம்வர காண்டம், கலித்தொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் என மூன்று காண்டங்களைக் கொண்டது.
- இதில் 431 வெண்பாக்கள் உள்ளன.
உலகம் உள்ளங்கையில்
- கணக்கிடுவதற்காக முதலில் எளிதான “மணிச்சட்டம்” உருவாக்கப்பட்டது. இதுவே கணினி உருவாக முதல் படியாக இருந்தது.
- பாரிஸ் நகரை சேர்ந்த பிளேஸ் பாஸ்கல் என்பவர் கணக்கிடும் கருவியை கண்டுபிடித்தார்.
- 1833இல் இங்கிலாந்தை சேர்ந்த சார்லஸ் பாப்பேஜ் என்பவர் கணினியை முதலில் வடிவமைத்தார். இவரே “கணினியின் தந்தை” என அழைக்கப்படுகிறார்.
- ஆங்கில கவிஞர் பைரனின் மகள் லேடி லவ்வோஸ் என்பவர், கணிதச் செயல்பாட்டிற்குத் தேவையான கட்டளைகளை வகுத்தமையால் அவர் “முதல் செயல் திட்ட வரைவாளர்” எனப் போற்றப்படுகிறார்.
- ஹார்வார்ட் பல்கலைக்கலகத்தை சேர்ந்த பேராசிரியர் ஹோவார்டு ஜக்கன் என்பவர் எண்ணிலக்க கணினியை கண்டுபிடித்து அதற்கு “ஹார்வார்டு மார்க்-1” எனப் பெயரிட்டனர்.
- 1960ஆம் ஆண்டு மின்காந்த நாடா பயன்படுத்தி செய்தி அனுப்பப்பட்டது.
- சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த டிம்பெர்நெர் லீ என்னும் வல்லுநர் “உலகளாவிய வலைப்பின்னல்” எனப் பெயரிட்டார். இதனை “வையாக விரிவு வலை” எனவும் அழைக்கலாம்.
- “கடந்த 20 ஆண்டுக் கணினிப் பயணத்தில் இணையத்தின் பங்கு மிகச் சிறந்தது என்றே சொல்வேன்” என பில் கேட்ஸ் கூறுகிறார்.
விவேகசிந்தாமணி
தேன்நுகர் வண்டு மதுதனை உண்டு
தியங்கியே கிடந்ததைக் கண்டு
தான்அதைச் சம்பு வின்கனி என்று
தடங்கையில் எடுத்துமுன் பார்த்தாள்
வான்உறு மதியம் வந்தென்(று) எண்ணி
மலர்க்கரம் குவியுமென்(று) அஞ்சிப்
போனது வண்டோ பறந்தது பழந்தான்
புதுமையோ இதுஎனப் புகன்றாள்சொற்பொருள்:
- மது – தேன்
- தியங்கி – மயங்கி
- சம்பு – நாவல்
- மதியம் – நிலவு
நூல் குறிப்பு:
- விவேகசிந்தாமணி என்னும் இநூல், புலவர் பலரால் இயற்றப்பட்ட பாக்களின் தொகுப்பு.
- இந்நூலை தொகுத்தவர் யாரென தெரியவில்லை.
பாரதத்தாய்
சொற்பொருள்:
- வாய்மை – உண்மை
- களையும் – நீக்கும்
- வண்மை – வள்ளல் தன்மை
- சேய்மை – தொலைவு
பிரித்து எழுதுக:
- தாய்மையன் பிறனை = தாய்மை + அன்பின் + தனை
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் – அசலாம்பிகை அம்மையார்
- ஊர் – திண்டிவனத்திற்கு அருகில் உள்ள இரட்டனண
நூல்கள்:
- ஆத்திசூடி வெண்பா
- திலகர் புராணம்
- குழந்தை சுவாமிகள் பதிகம்
- காந்தி புராணம்(2034 பாடல்கள்)
- இராமலிங்க சுவாமிகள் பதிகம்(409 பாடல்கள்)
சிறப்பு:
- இவரை "இக்கால ஔவையார்” என திரு.வி.க பாராட்டுகிறார்.
இந்திய விடுதலைப் போரில் தமிழகப் பெண்களின் பங்கு
வேலு நாச்சியார்:
- இவரே ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிய முதல் பெண்மணி.
- இவர் இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதியின் மகள்.
- சிவகங்கை மன்னர் முத்துவடுக நாதரை மணந்தார்.
- 1772இல் ஆங்கிலேயருக்கும் முத்துவடுக நாதருக்கும் ஏற்பட்ட போரில் முத்துவடுக நாதர் வீரமரணம் அடைந்தார்.
- பின்பு வேலு நாச்சியாரே தலைமை ஏற்று போர் புரிந்தார்.
- வேலு நாச்சியாருக்கு உதவியவர் மைசூர் மன்னர் ஹைதர் அலி. இவர் 5000 படை வீரர்களை உதவிக்கு அனுப்பினார்.
- 1780ஆம் ஆண்டு தம் கணவரை கொன்றவார்களைக் வென்று மீண்டும் சிவகங்கையை மீட்டார்.
கடலூர் அஞ்சலையம்மாள்:
- இவர் 1890 ஆம் ஆண்டு கடலூரில் உள்ள முதுநகரில் பிறந்தார்.
- 1921ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கிய பொது இவரும் தம் பொதுவாழ்கையை தொடங்கினார்.
- நீலன் சிலையை அகற்றும் போராட்டம் உட்பட பல போராட்டங்களில் பங்கு பெற்று சிறைக்கு சென்றார்.
- வேலூர் சிறையில் இருந்த போது, கருவுற்ற நிலையில் இருந்த இவரை ஆங்கிலேய அரசு வெளியில் அனுப்பிவிட்டு, மகப்பேற்றிற்குப் பின் மீண்டும் சிறையில் அடைத்தது.
- நீலன் சிலையை அகற்றும் போராட்டத்தில் தனது 9 வயது மகளையும் ஈடுபடுத்தினார். இவருடன் இவர் மகளும் சிறைத்தண்டனை பெற்றார்.
- காந்தியடிகள் சிறையில் வந்து பார்த்து, இவரின் மகள் அம்மாக்கண்ணுவை தன்னுடன் அழைத்து சென்று வார்தாவில் உள்ள ஆசிரமத்தில் படிக்க வைத்து அவருக்கு லீலாவதி எனப்பெயரும் இட்டார்.
- இவர் காந்தியடிகளால் “தென்னாட்டின் ஜான்சிராணி” என அழைக்கப்பட்டார்.
அம்புஜத்தம்மாள்:
- இவர் 1899ஆம் ஆண்டு பிறந்தார்.
- இவர் அன்னை கஸ்துரிபாயின் எளிமையான தோற்றத்தினால் கவரப்பட்டு எளிமையாக வாழ்ந்தார்.
- இவர் பாரதியாரின் பாடல்களை பாடி விடுதலை உணர்வை ஊட்டினார்.
- இவர் “காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்” என்று அழைக்கப்படுபவர்.
- தன் தந்தையின் பெயரோடு காந்தியடிகளின் பெயரையும் இணைத்து “சீனிவாச காந்தி நிலையம்” என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்.
- இவர் தம் எழுபதாண்டு நினைவாக, “நான் கண்ட பாரதம்” என்ற நூலை எழுதினார்.
- 1964ஆம் ஆண்டு இவருக்கு “தாமரைத்திரு”(பத்மஸ்ரீ) விருது வழங்கப்பட்டது.
காவடிச்சிந்து
சொற்பொருள்:
- கலாபம் – தோகை
- விவேகன் – ஞானி
- கோல – அழகிய
- வாவி – பொய்கை
- மாதே – பெண்ணே
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் = அண்ணாமலையார்
- ஊர் = திருநெல்வேலி மாவட்டம் சென்னிகுளம்
- பெற்றோர் = சென்னவர் – ஓவுஅம்மாள்
- நூல்கள் = காவடிச்சிந்து, வீரை அந்தாதி, கோமதி அந்தாதி, வீரைப்பிள்ளைத்தமிழ்
- சிறப்பு = இளமையிலே நினைவாற்றலும் படைப்பாற்றலும் மிக்கவர்.
- காலம் = 1861–1890
நூல் குறிப்பு:
- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு அருகிலுள்ள வளமான ஊர் கழுகுமலை.
- இங்கு கோவில் கொண்டுள்ள முருகனின் சிறப்பை எளிய இனிய இசைப்பாடல்களால் போற்றிப் பாடப் பெற்றது இந்நூல்.
விக்ரமசோழன் உலா
பாடலின் பொருள்:
- குடகு மலையை ஊடறுத்து அலைமோதும் காவிரியைத் தந்தவன் = கவேரன்.
- தெளிந்த அருவியை உடைய மேரு மலையின் உச்சியில் புலிக்கொடி நாட்டி, பொன்னியாகிய காவிரியின் இருகரைகளையும் உயர்த்திக் கட்டியவன் = சோழன் கரிகாலன்.
- பொய்கையாரின் களவழி நாற்பது பாடலுக்குப் பரிசாக் சேரமான் கணைக்கால் இரும்பொறையைச் சிறைவீடு செய்தவன் = சோழன் செங்கணான்.
- போரில் பெருமையாக எண்ணத்தக்க விழுப்புண்கள் 96ம் பெற்றவன் = சோழன் விசயாலயன்.
- சிவபெருமான் ஆடலரசாய்க் காட்சிதரும் தில்லைக்குப் பொன்வேய்ந்தவன் = சோழன் முதல் பராந்தகன்.
- பதினெட்டு சிற்றூர்களையும் வென்று மலைநாடு வென்றவன் = சோழன் முதல் இராசராசன்.
- வடக்கே படையெடுத்துக் கங்கையும் கிழக்கில் கடாரமும் வென்று கைக்கொண்டவன், சேரர் கப்பற்படை முழுவதையும் அழித்தவன் = சோழன் இராசேந்திரன்.
- சாளுக்கியர்களின் தலைநகரான கல்யானபுரத்தின் மீது படையெடுத்து மும்முறை போரிட்டு வென்றவன் = சோழன் இராசாதிராசன்.
- கொப்பத்துப் போரில் ஆயிரம் யானைகளை வென்றவன் = சோழன் இராசேந்திரன்.
- திருவரங்கத்தில் பள்ளிகொண்ட பெருமாளுக்கு மணிகள் பலவற்றால் பாம்பனை அமைத்தவன் = சோழன் இராசமகேந்திரன்.
சொற்பொருள்:
- குவடு – மலை
- பொன்னி – காவிரி
- கொத்து – குற்றம்
- அரவம் – பாம்பு
ஆசிரியர் குறிப்பு:
- இயற்பெயர் = ஒட்டக்கூத்தர்
- சிறப்புப்பெயர் = கவிச்சக்ரவர்த்தி
- சிறப்பு = விக்கிரமச்சோழன், இரண்டாம் குலோத்துங்கசோழன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூன்று மன்னர்களின் அவையிலும் செல்வாக்கோடு விளங்கியவர்.
- இயற்றிய நூல்கள் = மூவருலா, தக்கயாகப்பரணி, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
- காலம் = பனிரெண்டாம் நூற்றாண்டு
நூல் குறிப்பு:
- உலா என்பது 96 வகை சிற்றிலக்கியனங்களுள் ஒன்று.
- இறைவன், மன்னன், மக்களுள் சிறந்தோர் முதலியோரின் சிறப்புகளை எடுத்துக்கூறும் நோக்கிலேயே இவ்வகை சிற்றிலக்கியங்கள் எழுதப்பெற்றன.
- உலா என்பதற்கு “ஊர்கோலம் வருதல்” என்பது பொருள்.
- பாட்டுடைத் தலைவன் வீதியில் உலா வர அவனைப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம் பெண் என எழுவகைப் பெண்களும் காதல் கொள்வதாய்க் அமைத்துப் பாடுவது உலா.
- முதற் குலோத்துங்கசோழனின் நான்காவது மகன் விக்ரமசோழன்.
- அவனின் தயார் மதுராந்தகி.
- இவர் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்தார்.
திருமந்திரம்
உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே
-திருமூலர்சொற்பொருள்:
- திடம் – உறுதி
- மெய்ஞ்ஞானம் – மெய்யறிவு
- உபாயம் – வழிவகை
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் – மூலன் என்னும் பெயர், திரு என்னும் பெயரடை பெற்று, அத்துடன் அர் என்னும் மரியாதைப்பன்மையும் பெற்று, திருமூலர் என ஆயிற்று.
- காலம் – ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதி.
நூல் குறிப்பு;
- சைவத் திருமுறைகளில் பத்தாவது திருமுறை திருமந்திரம்.
- இதற்குத் “தமிழ் மூவாயிரம்” என்னும் வேருபெயரும் உண்டு.
- இந்நூல் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது.
- “ஒன்றே குளம் ஒருவனே தேவன்” என்பது இந்நூலின் புகழ்பெற்ற தொடராகும்.
தேம்பாவணி
சொற்பொருள்:
- நகை – புன்னகை
- முகை – மொட்டு
- மேனி – உடல்
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் = வீரமாமுனிவர்
- இயற்பெயர் = கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி
- பெற்றோர் = கொண்டல் போபெஸ்கி, எலிசபெத்
- பிறந்த ஊர் = இத்தாலி நாட்டில் காஸ்திக்கிளியோன்
- அறிந்த மொழிகள் = இத்தாலியம், இலத்தின், கிரேக்கம், எபிரேயம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம்
- தமிழ்க் கற்பித்தவர் = மதுரைச் சுப்ரதீபக் கவிராயர்
- சிறப்பு = முப்பதாம் வயதில் தமிழகம் வந்து தமிழ் பயின்று காப்பியம் படைத்தமை.
- இயற்றிய நூல்கள் = ஞானஉபதேசம், பரமார்த்த குரு கதை, சதுரகராதி, திருக்காவலூர்க் கலம்பகம், தொன்னூல் விளக்கம்
- காலம் = 1680-1747
நூல் குறிப்பு:
- தேம்பாவணி = தேம்பா + அணி.
- தேம்பாவணி = தேன் + பா + அணி(தேன் போன்ற இனிய பாடல்களாலான மாலை)
- இந்நூலின் தலைவர் இயேசு பெருமானின் வளர்ப்பு தந்தை சூசையப்பர்.
- இநூலை “கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்” என்று சிறப்பிப்பர்.
- இந்நூலின் 3 காண்டங்களும், 36 படலங்களும், 3615 பாடல்களும் உள்ளன.
நாடகக்கலை
நாடகம் – பொருள் விளக்கம்:
- நாடு + அகம் = நாடகம்
- நாட்டை அகத்தில் கொண்டது நாடகம்.
- நாட்டின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதால், நாடகம் எனப் பெயர் பெற்றது.
- நாடகம் என்பது உலக நிகழ்சிகளைக் காட்டும் கண்ணாடி என்பது முற்றிலும் பொருந்தும்.
- கதையை, நிகழ்ச்சியை, உணர்வை நடித்துக் காட்டுவதும், கூத்தாக ஆடிக்காட்டுவதும் நாடகம் என்பர்.
- இதற்குக் கூத்துக்கலை என்னும் பெயர் உண்டு.
நாடகக்கலையின் தோற்றமும் வளர்ச்சியும்:
- தமிழின் தொன்மையான கலை வடிவம் நாடகம்.
- நாடகம் என்பது “போலச் செய்தல்” என்னும் பண்பு அடிப்படையாக கொண்டது.
- பிறர் செய்வதைப்போல தாமும் செய்து பார்க்க வேண்டும் என்ற மனித உணர்சித்தான் நாடகம் தோன்றக் காரணம்.
- மரப்பாவைக்கூத்து->பொம்மலாட்டம்->தோல்பாவைக்கூத்து->நிழற்பாவைக்கூத்து என வளர்ச்சி அடைந்தது.
இலக்கியங்களில் நாடகம்:
- தொல்காப்பிய மெய்பாட்டியல் நாடகப்பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்துள்ளது.
- “கூத்தாட் டவைக்குல்லாத் தற்றே” என்னும் குறள் வழியாக நாடக அரங்கம் இருந்த செய்தி அறியலாம்.
- சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், “நாடகமேத்தும் நாடகக் கணிகை” என்று மாதவியை குறிப்பிடுகிறார்.
கூத்து:
- தனிப்பாடல்களுக்கு மெய்ப்பாடு தோன்ற ஆடுவதை நாட்டியம் என்றும், ஏதேனும் ஒரு கதையை தழுவி வேடம் புனைந்து ஆடுவதை நாடகம் என்றும் குறிப்பிட்டு வந்துள்ளார்.
- நாட்டியம், நாடகம் இரண்டிற்கும் பொதுவாகக் “கூத்து” என்ற சொல்லே வழக்கில் இருந்தது.
அடியார்க்கு நல்லார்:
- சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர்.
- இவர் கூத்துவகைகளைப் பற்றியும், நாடகநூல்கள் பற்றியும் தமது உரையில் கூறியுள்ளார்.
நாடக நூல்கள்:
- முறுவல், சயந்தம், செயிற்றியம், மதிவாணர் நாடகத்தமிழ் நூல், விளக்கத்தார் கூத்து, குணநூல், கூத்து நூல் முதலிய பல நாடக நூல்கள் நாடகத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது.
நாடகவியல்:
- பரிதிமாற்கலைஞர், செய்யுள் வடிவில் இயற்றிய தம் நாடகவியல் எனும் நூலில் நாடகம் அதன் விளக்கம், வகைகள், எழுதப்பட வேண்டிய முறைகள் பற்றி கூறியுள்ளார்.
நாடக ஆராய்ச்சி நூல்கள்:
- சுவாமி விபுலானந்தர் = மதங்க சூளாமணி
- மறைமலையடிகள் = சாகுந்தலம்
- இவ்விரண்டு நூல்களும் நாடகம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள்.
தொழில்முறை நாடக அரங்குகள்:
- பம்மல் சம்பந்தனார், “நாடகத்தமிழ்” என்ற தம் நூலில் தொழில் முறை நாடக அரங்குகளைப்பற்றிய செய்திகளை நன்கு ஆராய்ந்து எழுதியுள்ளார்.
காலம்தோறும் நாடகக்கலை:
- ஏழாம் நூற்றாண்டில் மகேந்திரவர்ம பல்லவன் “மத்தவிலாசம்” என்ற நாடக நூலை எழுதியுள்ளான்.
- பதினொன்றாம் நூற்றாண்டில் இராசராசசோழன் ஆட்சிக் காலத்தில் “இராசராசேச்சுவர நாடகம்” நடைபெற்றதாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
- நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் குறவஞ்சி நாடகம் தோன்றின.
- பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நொண்டி நாடகம் தோன்றின.
கட்டியங்காரன் உரையாடல்:
- பதினெட்டாம் நூற்றாண்டில் அருணாச்சலக் கவிராயரின் இராம நாடகம், கோபால கிருட்டின பாரதியின் நந்தனார் சரித்திரம் ஆகியன கட்டியங்காரன் உரையாடலோடு முழுவதும் பாடல்களாக அமைந்தன.
சமுதாய சீர்திருத்த நாடகங்கள்:
- காசி விஸ்வநாதரின் “டம்பாச்சாரி விலாசம்”.
- பேராசிரியர் சுந்தரனாரின் “மனோன்மணியம்”.
தேசிய நாடகங்கள்:
- “கதரின் வெற்றி” நாடகம் தான் தமிழ்நாட்டில் முதன் முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம்.
- இதனைத் தொடர்ந்து தேசியக்கொடி, தேசபக்தி முதலிய நாடகங்கள் நடத்தப்பட்டன.
சிறப்பிடம் பெற்றவர்கள்:
- பரிதிமாற் கலைஞர் - தமிழ் நாடக பேராசிரியர்
- சங்கரதாசு சுவாமிகள் - தமிழ் நாடக உலகின் இமயமலை, தமிழ் நாடக பேராசிரியர்
- பம்மல் சம்பந்தனார் - தமிழ் நாடக தந்தை
- கந்தசாமி - தமிழ் நாடக மறுமலர்ச்சி தந்தை
கவிமணியின் கூற்று:
- “நாடகச் சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து” என்ற கவிமணியின் கூற்றிற்குஏற்ப மக்களின் கண்ணை, செவியை, கருத்தைக் கவரும் வகையிலும் நாடகங்கள் கதை அழகோடு கவிதை அழகையும் கொண்டு வாழ்வைத் தூய்மைப்படுத்தும் வகையிலும் அமைதல் வேண்டும்.
திருக்குறள்
சொற்பொருள்:
- வழக்கு – நன்னெறி
- ஆன்ற – உயர்ந்த
- நயன் – நேர்மை
- மாய்வது – அழிவது
- அரம் – வாளைக் கூர்மையாக்கும் கருவி
- நண்பு – நட்பு
- கடை – பழுது
- நகல்வல்லர் – சிறிது மகிழ்பவர்
திருவருட்பா
வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த
வெற்றாறைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்
நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ்
சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.
- இராமலிங்க அடிகள்சொற்பொருள்:
- பசியறாது – பசித்துயர் நீங்காது
- அயர்ந்த – களைப்புற்ற
- நீடிய – தீராத
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் – இராமலிங்க அடிகளார்
- பெற்றோர் – இராமையா, சின்னம்மை
- ஊர் – சிதம்பரத்திற்கு அருகிலுள்ள மருதூர்
- சிறப்பு பெயர் – திருவருட்பிரகாச வள்ளலார்
- சிறப்பு – வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சங்கம், சத்திய ஞானசபை, சத்திய தருமசாலை ஆகியவற்றை நிறுவினார்.
- இயற்றிய நூல்கள் – திருவருட்பா, சீவகாருணிய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்
- கால – 1823-1874
நூல் குறிப்பு:
- திரு + அருள் + பா = திருவருட்பா.
- இறைவன் திருவருளைப் பெறுவதற்காகப் பாடிய பாடல் என்றும், இறைவனின் திருவருளால் பாடிய பாடல் என்றும் இருவகைப் பொருள் கொள்வர்.
- இது 5818 பாடல் கொண்டது.
தமிழர் வானியல்
வானியல் அறிவு:
- உலகம் ஐம்பூதங்களாகிய நிலம், நீர், வெப்பம், காற்று, வானம் ஆகிய ஐந்தும் உள்ளடக்கியது எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் ஆதலின்
- தொல்காப்பியம்- இதுபோன்று புறநானூற்று பாடலும் கூறுகிறது.
மண்திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலை இய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும்பூத்தது இயற்கை போல்உலகம் தட்டையா? உருண்டையா?
- பதினைந்தாம் நூற்றாண்டில் தான் போலந்து நாட்டை சேர்ந்த நிக்கோலஸ் கோபர்நிகஸ் என்பவர் உலகம் தட்டை இல்லை உருண்டையானது என்று கூறினார்.. ஆனால் அதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
- பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கலீலியோ, உலகம் உருண்டையானது என்பதை தம் தொலைநோக்கி மூலன் கண்டுபிடித்து சொன்னார்.
- ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் தம் குரலில் கூறியுள்ளார்.
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலைஞாயிற்றுக் காட்சி:
- வான்வெளியில் மிகப்பெரிய விண்மீன் ஞாயிறு.
- சிலபதிகாரத்தில் இளங்கோவடிகள், “ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்” என்று போற்றியுள்ளார்.
- ஞாயிற்றைச் சுற்றிய பாதையை “ஞாயிறு வட்டம்” என்றனர் பழந்தமிழர் எனப் புறநானூறு கூறுகிறது.
செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்திங்கள் தோற்றம்:
- தானே ஒளிவிடக்கூடிய ஞாயிற்றை “நாள்மீன்” என்றும், ஞாயிற்றிடமிருந்து ஒளி பெற்று ஒளிவிடக்கூடியவற்றை “கோள்மீன்” என்றும் அழைப்பர்.
- திங்கள் தானே ஒளி வீசுவதில்லை, என்பதை திருவள்ளுவர் வெளிப்படுத்துகிறார்.
மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.- திங்களைப் பாம்பு கொண்டற்று என்னும் குறள் “திங்கள் மறைப்பு”(சந்திரகிரகணம்) பற்றியதாகும்.
கோள்கள் பற்றிய தமிழரின் கருத்து:
- கோள்களின் நிறம், வடிவம் முதலியவற்றையும் அறிந்திருந்தனர்.
- செந்நிறமாய் இருந்த கோளைச் செவ்வாய் என்றனர்.
- வெண்மை நிறமுடைய கோளை வெள்ளி என்றனர். வெள்ளிக்கோளுக்கு ஒரு சிறப்பு உண்டு. ஞாயிறு உதயத்திற்கு முன்பே வெள்ளி எழுந்து விடியலை உணர்த்துவதால் இதனை “விடிவெள்ளி” என்றனர்.
- புதிதாகக் கண்டறிந்த கோளை புதன் என அழைத்தனர். புதிதாக அறிந்ததால் அதற்கு “அறிவன்” என்றும் பெயருண்டு.
- வியா என்றால் பெரிய, நிறைந்த எனப் பொருள்படும். வானில் பெரிய கோலாக வளம் வருவதையே வியாழன் என்றனர்.
- சனிக்கோளைக் “காரிக்கோள்” என்றழைத்தனர். இக்கோளில் கந்தகம் இருப்பதாக ஆய்வு கூறுகிறது.
தூமகேது:
- தூமகேதுவை வால்நட்சத்திரம் என்றும் கூறுவர்.
- தமிழ் இலக்கியங்களில் தூமகேது பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
வான்வழிப் பயணம்:
- “வளவன் ஏவா வானவூர்தி”(புறநானூறு) கூறுகிறது.
- வானூர்தி ஒட்டுகிறவனைத் தமிழில் “வலவன்” என அழைத்தனர்.
- சீவகசிந்தாமணியில் “மயிற்பொறி விமானத்தின்” கூறப்பட்டுள்ளது.
- கம்பராமாயணத்தில் இராவணன் செலுத்திய “புட்பக விமானமும்”, பெருங்கதையில் “வானூர்தி வடிவமும்” அதனை இயக்கும் முறையும் கூறப்பட்டுள்ளது.
வில்லிபாரதம்
வான்பெற்ற நதிகமழ்தாள் வணங்கப் பெற்றேன்
மதிபெற்ற திருவுளத்தால் மதிக்கப் பெற்றேன்
தேன்பெற்ற துழாய் அலங்கல் கல்ப மார்பும்
திருப்புயமும் தைவந்து தீண்டப் பெற்றேன்
ஊன்பெற்ற பகழியினால் அழிந்து வீழ்ந்தும்
உணர்வுடன்நின் திருநாமம் உரைக்கப் பெற்றேன்
யான்பெற்ற பெருந்தவப்பே(று) என்னை அன்றி
இருநிலத்தில் பிறந்தோரில் யார்பெற் றாரே.- வில்லிப்புதூரார்
சொற்பொருள்:
- வான்பெற்ற நதி – கங்கையாறு
- களபம் – சந்தனம்
- துழாய் அலங்கல் – துளசிமாலை
- புயம் – தோள்
- பகழி – அம்பு
- இருநிலம் – பெரிய உலகம்
- ஊன் – தசை
- நாமம் – பெயர்
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் – வில்லிபுத்தூரார்
- தந்தை – வீரராகவர்
- ஆதரித்தவர் – வக்கப்பாகையை ஆண்ட வரபதி ஆட்கொண்டான்
- காலம் – பதினான்காம் நூற்றாண்டு
நூல் குறிப்பு:
- இந்நூல் பத்து பருவங்களை கொண்டது.
- 4350 விருத்தப் பாக்களால் ஆனது.
யார் கவிஞன்?
காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்லன்;
கைம்மாறு விளைந்துபுகழ் பெறுதல் வேண்டி
மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை
மறைத்துவிட்டு பாடுபவன் கவிஞன் அல்லன்;
தேசத்தைத் தன்னினத்தைத் தாழ்த்தி விட்டுத்
தேட்டையிடப் பாடுபவன் கவிஞன் அல்லன்;
மீசைக்கும் கூழுக்கும் ஆசைப் பட்டு
மேல்விழுந்து பாடுபவன் கவிஞன் அல்லன்;
ஆட்சிக்கும் அஞ்சாமல், யாவ ரேனும்
ஆள்கஎனத் துஞ்சாமல், தனது நாட்டின்
மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவன்;
மேலோங்கு கொடுமைகளைக் காணும்போது
காட்சிக்குப் புளியாகிக் கொடுமை மாளக்
கவிதைகளைப் பைசுபவன் கவிஞன் ஆவன்;
தாழ்ச்சிசொலும் அடிமையலன் மக்கட் கெல்லாம்
தலைவனெனப் பாடுபவன் கவிஞன், வீரன்.
- முடியரசன்சொற்பொருள்:
- கைம்மாறு – பயன்
- மாசற்ற – குற்றமற்ற
- தேட்டை – திரட்டிய செல்வம்
- மீட்சி – மேன்மை
- மாலை – நீங்க
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் = முடியரசன்
- இயற்பெயர் = துரைராசு
- பெற்றோர் = சுப்புராயலு, சீதாலட்சுமி
- ஊர் = தேனி மாவட்டம் பெரியகுளம்
- இயற்றிய நூல்கள் = பூங்கொடி, காவியப்பாவை, வீரகாவியம், முடியரசன் கவிதைகள் முதலியன.
- பணி = காரைக்குடி மீனாட்சி சுந்தரம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர்.
- பட்டம் = பறம்புமலையில் நடந்த விழாவில் “கவியரசு” என்னும் பட்டம் குன்றக்குடி அடிகளாரால் வழங்கப்பெற்றது.
- பரிசு = பூங்கொடி என்னும் காவியத்திற்காக 1966ஆம் ஆண்டின் தமிழக அரசு பரிசு.
- சிறப்பு = முடியரசன், பாரதிதாசன் பரம்பரைக் தலைமுறைக் கவிஞர்களுள் மூத்தவர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரிடம் நெருங்கிப் பழகியவர்.
- காலம் = 1920-1998
தேவநேயப்பாவாணர்
வாழ்க்கை குறிப்பு:
- பெற்றோர் = ஞானமுத்து, பரிபூரணம்
- ஊர் = சங்கரன்கோவில்
- கல்வி = பண்டிதர், புலவர், வித்துவான், முதுகலைத் தமிழ், பி.ஓ.எல்.,
- காலம் = 07.02.1902 – 15.01.1981
- சிறப்பு = செந்தமிழ்ச் செல்வர், செந்தமிழ் ஞாயிறு, தமிழ்ப்பெருங் காவலர் என 174 சிறப்புப் பெயர்கள்.
தமிழ்பற்று:
- தன்னை மோதிய மிதிவண்டிக்காரர் கூறிய மன்னித்து கொள்க என்ற சொல்லை, மன்னிப்பு உருதுச்சொல், பொறுத்துக்கொள்க என தமிழில் சொல்லவும் என்று கூறி, மிதிவண்டிக்காராரையும் சொல்லச் செய்தவர்.
தமிழை வளர்த்தவர்:
- தமிழின் தொன்மையை உலகறிய செய்தவர் = கால்டுவெல்
- தனித் தமிழுக்கு வித்திட்டவர் = பரிதிமாற்கலைஞர்
- தமிழைத் தழைக்கத் செய்த செம்மல் = மறைமலையடிகள்
- தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் = தேவநேயப்பாவாணர்
தமிழை மீட்டல்:
- மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் தனித்தமிழ் ஊற்று; செந்தமிழ் ஞாயிறு; இலக்கியப் பெட்டகம்; இலக்கணச் செம்மல்; தமிழ்மானங் காத்தவர்.
- உலக முதன்மொழி தமிழ்; இந்திய மொழிகளுக்கு மூலமும் வேறும் தமிழ்; திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் என்று வாழ்நாள் முழுவதும் ஆய்வுசெய்து நிறுவியவர்.
- “உலகின் முதல் மாந்தன் தமிழன்; தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம்” என்பதும் மொகஞ்சதாரோ, அரப்பா நாகரிகம் பழந்தமிழர் நாகரிகமே என்பதும் அவரது ஆய்வின் இரு கண்கள்.
- “தமிழை வடமொழி வல்லான்மையில் இருந்து மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைதான்” என்று கூறினார்.
அனைத்தும் தமிழில்:
- கோவில்களில் தமிழில் வழிபாடு நடைபெற வேண்டும் என்றார்.
- பிறப்பு இறப்புத் தொடர்பான சடங்குகள் யாவும் தமிழில் நடைபெறவேண்டும் என்றும் பாவாணர் வலியுறுத்தினார்.
பகலுணவு, இரவுணவு:
- ஒருமுறை தன் ஆசிரிய நண்பர்களுடன் சென்று தாரைமங்கலம் என்னும் ஊரில் தங்கினார்.
- அங்கு ஒருவர் பாவனாரிடம், “ஐயா பகலுணவும் இராவுணவும் எவ்வாறு இருந்தன?” என்று கேட்டார்.
- பாவாணர், “பகல் உணவு, பகல் உணவாகவும்(பகலில் கிடைத்த சிறிதளவு உணவையே அனைவரும் பகுதுண்ண நேர்ந்தது), இரா உணவு இரா உணவாகவும்(அனைவரும் உணவின்றி இரவைக் கழித்தல்) இருந்தன” என்றார்.
- தமிழ் வளர்த்தல் பசியும் பட்டினியும் பஞ்சாய்ப் பறந்துவிடும் என்று எண்ணியவர் பாவாணர்.
நீலமலை(நீலகிரி):
- ஒருமுறை நீலமலைக்குச் சென்று அங்கு கிருட்டினையா என்பவர் வீட்டில் உணவு உண்டார்.
- கிருட்டினையா வெளியே சென்று மீண்டும் வீடு வரும்போது பாவாணர் அங்கு விறகு வெட்டி கொண்டு இருந்தார்.
- கிருட்டினையா, இதை நீங்கள் செய்ய வேண்டாம் என கூறியதற்கு, “உண்ட வீட்டிற்கு எதாவது செய்யவேண்டும்; உட்கார்ந்து கொண்டு உண்டு செல்வது நன்றாகாது” என்றர்.
பாவாணரின் படைப்புகள்:
- தமிழ் வரலாறு
- முதல் தாய்மொழி
- தமிழ்நாடு விளையாட்டுகள்
- தமிழர் திருமணம்
- வடமொழி வரலாறு
- தமிழர் மதம்
- மண்ணிலே வின்
- பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்
- உயர்தரக் கட்டுரை இலக்கணம்
- சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
- திருக்குறள் மரபுரை
அகரமுதலி:
- பாவாணர் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குனராக 08.05.1974 அன்று பணியமர்த்தப்பட்டு, அரசின் உதவியோடு சில தொகுதிகளை வெளிக்கொணர்ந்தார்.
- இருநூறுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
தன்மானம் மிக்கவர்:
- தாம் பணியாற்றிய கல்வி நிறுவனமொன்றில் தொடர்ந்து பணியாற்ற இயலாத சூழல் நேர்ந்தபோது, “எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு” என்று வெளியேறினார்.
சிறப்புகள்:
- பாவாணர் பெயரில் சென்னை அண்ணாசாலையில் நூலகம் செயல்பட்டு வருகிறது.
- இவர் படித்துப் பணியாற்றிய இராசபாளையதிற்கு அருகிலுள்ள முறம்பில், பாவாணர் கோட்டம், அவர்தம் முழு உருவச்சிலை, அவர் பெயரில் நூலகம் ஆகியவை அமைகப்பட்டுள்ளன.
தமிழன்னைக்கு பெருமை:
- மதுரையில் 05.01.1981 அன்று நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின்போது, “மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்” என்ற தலைப்பில் சொற்பொவாற்றித் தமிழன்னைக்கு பெருமை சேர்த்தார்.
கம்பராமாயணம்
தாதுகு சோலை தோறும் சண்பகக் காடு தோறும்
போதவிழ் பொய்கை தோறும் புதுமணத் தடங்கள் தோறும்
மாதவி வேலிப் பூக வணந்தொரும் வயல்கள் தோறும்
ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே
- கம்பர்சொற்பொருள்:
- தாது – மகரந்தம்
- பொது – மலர்
- பொய்கை – குளம்
- பூகம் – கமுகம்
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் – கம்பர்
- ஊர் – நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள தேரழுந்தூர்.
- ஆதரித்தவர் – சடையப்ப வள்ளல்
- இயற்றியவை – சடகோபர் அந்தாதி, ஏரெழுபது, சிலை எழுபது, சரஸ்வதி அந்தாதி, திருக்கை வழக்கம்.
- காலம் – கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு என்றும் பன்னிரெண்டாம் நூற்றாண்டு என்றும் கூறுவர்.
- கம்பர், வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தைத் தழுவித் தமிழில் காப்பியம் இயற்றினார்.
- இயற்றிய அந்நூலுக்கு “இராமாவதாரம்” எனப் பெயரிட்டார்.
- அதுவே கம்பராமாயணம் என் வழங்கப்படுகிறது.
- எனவே, இது வழிநூல் எனப்படுகிறது.
- கதை மாந்தரின் வடசொற் பெயர்களைத் தொல்காப்பிய முறைப்படி தமிழ்ப்படுத்திய பெருமைக்குரியவர் கம்பர்.
நூல் குறிப்பு:
- கம்பராமாயணம் ஆறு காண்டங்களை உடையது.
- அவை பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காடம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் ஆகும்.
- இப்பாடல் பால காண்டத்தில் உள்ளது.
- தற்போதைய உத்திரபிரதேச மாநிலத்தில் பாயும் சரயு நதியின் வளம் இதில் கூறப்பட்டுள்ளது.
விழுதும் வேரும்
தூலம்போல் வளர்கி ளைக்கு
விழுதுகள் தூண்கள்! தூண்கள்
ஆலினைச் சுற்றி நிற்கும்
அருந்திறல் மறவர்! வேறோ
வாலினைத் தரையில் வீழ்த்தி
மண்டிய பாம்பின் கூட்டம்!
நீலவான் மறைக்கும் ஆல்தான்
ஒற்றைக்கால் நெடிய பந்தல்!
- பாரதிதாசன்சொற்பொருள்:
- திறல் – வலிமை
- மறவர் – வீரர்
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் – பாரதிதாசன்
- இயற்பெயர் – கனக சுப்புரத்தினம்
- பெற்றோர் – கனகசபை,இலக்குமி
- ஊர் – புதுச்சேரி
- காலம் – 29.04.1891-21.04.1964
- சிறப்புப்பெயர்கள் – பாவேந்தர், புரட்சிக்கவிஞர்
சிறப்பு:
- பாரதியாருடன் கொண்ட நெருங்கிய தொடர்பினால் பாரதிதாசன் எனத் தன்பெயரை அமைத்துக்கொண்டார்.
- தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனையைக் கவிதை வடிவில் தந்தவர்.
இயற்றிய நூல்கள்:
- பாண்டியன் பரிசு
- குடும்ப விளக்கு
- இருண்ட வீடு
- அழகின் சிரிப்பு
- கண்ணகி புரட்சிக் காப்பியம்
- குருஞ்சித்திட்டு
- தமிழியக்கம்
- பிசிராந்தையார்
காட்டுயிரிகள்
- தொல்காப்பியர் ஓர் அறிவு முதல் ஆறு அறிவு வரை குறிப்பிட்டுள்ளார்.
- ஓரறிவு = மெய்யினால் அறியும் உயிர்(புல், மரம்).
- ஈரறிவு = மெய், கண் கொன்டது(நத்தை, சங்கு).
- மூவறிவு = மெய், வாய், மூக்கு கொண்டது(எறும்பு, கரையான், அட்டை).
- நாலறிவு = மை, கண், மூக்கு, வாய் கொண்டது(நண்டு, தும்பி, வண்டு).
- ஐயறிவு = மெய், கண், மூக்கு, வாய், செவி(விலங்கு, பறவை).
- ஆறறிவு = மெய், வாய், மூக்கு, கண், செவி, மனம்(மனிதர்).
- அக்டோபர் முதல் வாரத்தை அரசு வனவிலங்கு வாரமாகக் கொண்டாடி வருகிறது.
- வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் = 1972
- ஒவ்வோராண்டும் அக்டோபர் மாதம் நான்காம் நாள் “உலக வனவிலங்கு நாள்” கொண்டாடப்படுகிறது.
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
சொற்பொருள்:
- மதி – அறிவு
- அமுதகிரணம் – குளிர்ச்சியான ஒளி
- உதயம் – கதிரவன்
- மதுரம் – இனிமை
- நறவம் – தேன்
- கழுவிய துகளர் – குற்றமற்றவர்
- சலதி – கடல்
- புவனம் – உலகம்
- மதலை – குழந்தை
- பருதிபுரி – கதிரவன் வழிபட்ட இடம்(வைதீஸ்வரன் கோவில்)
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் – குமரகுருபரர்
- பெற்றோர் – சண்முகசிகாமணிக் கவிராயர், சிவகாமி சுந்தரியம்மை
- ஊர் – திருவைகுண்டம்
- இயற்றிய நூல்கள் – கந்தர்கலிவெண்பா, மதுரை மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம் முதலியன.
- சிறப்பு – தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர். திருப்பணந்தாளிலும், காசியிலும் தம்பெயரால் மேடம் நிறுவி உள்ளார்.
- இறப்பு – காசியில் இறைவனடி சேர்ந்தார்.
- காலம் – பதினேழாம் நூற்றாண்டு.
நூல் குறிப்பு;
- 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று பிள்ளைத்தமிழ்.
- இறைவனையோ நல்லாரையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடப்பெருவது பிள்ளைத்தமிழ்.
- பத்து பருவங்கள், பருவத்திற்கு பத்து பாடல் என நூறு பாடல்கள் கொண்டது.
- இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும்.
- ஆண்பாற் பிள்ளைத்தமிழின் பருவங்கள் = காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்.
- பெண்பாற் பிள்ளைத்தமிழ் பருவங்கள் = காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்மானை, கழங்கு(நீராடல்), ஊசல்.
- புள்ளிருக்குவேளூரில் (வைதீஸ்வரன் கோவில்) எழுந்தருளியுள்ள முருகப்பெருமானின் பெயர் முத்துக்குமாரசுவாமி.
- அவர் மீது பாடப்பட்டதால் இது முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் என பெயர் பெற்றது.
இலக்கியத்தில் நகைச்சுவை
நகைச்சுவை:
- இலக்கியச் சுவைகளில் மிகவும் நுட்பமானது நகைச்சுவை.
- இச்சுவையை உணர்ந்து போற்ற தனி ஆற்றல் வேண்டும்.
- நகைச்சுவையை போற்றுவதற்குத் தேவைப்படும் ஆற்றல், அதைக் கவிதைகளில் வடிபதிலேயே உள்ளது.
தொல்காப்பியம்:
- தொல்காப்பியம், “எள்ளல், இளமை, அறியாமை, மடமை” ஆகிய நான்கு காரணங்களால் நகைச்சுவை தோன்றும் என்கிறது.
திருக்குறள்:
- நகைச்சுவையின் இன்றியமையாமைப் புலப்படுத வந்த வள்ளுவர்,
- என நகைச்சுவை உணர்வு இல்லாதவர்களுக்கு பகலும் இருளாகத் தோன்றும் என்கிறார் காந்தியடிகள்
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்.- காந்தியடிகள், நகைச்சுவை உணர்வு மட்டும் தனக்கு இல்லையெனில், எப்பொழுதோ தனது வாழ்கையை இழந்திருக்கக்கூடும் எனக் கருதினார்.
இலக்கியங்களில் நகைச்சுவை:
- கம்பராமாயணத்தில் கம்பரின் நகைச்சுவை உணர்வு அவர் தம் பாடல்களின் மூலம் அறியலாம்.
- வாலியை பற்றி அனுமனிடம் இராவணன் வினவும் போது, அனுமன் அதற்கு, “அஞ்ச வேண்டா! அரக்கர் தலைவா, வாலியும் இறந்தான், அவனது வாழும் இறந்துவிட்டது! ஆனால் சூரியகுலத் தோன்றலாகிய வாலியின் அழிவுக்குக் காரணமானது இராமனின் ஒரு கணையே என்பதை மட்டும் மறந்துவிடாதே!” எனக் கூறினான்.
அஞ்சலை அரக்க! பார்விட் டந்தர மடைந்தா னன்றே
வெஞ்சின வாழி, மீலான், வாளும்போய் வீழ்ந்ததன்றே- இராவணனுக்கு வாலியை பற்றி கவலை இல்லை, அவனின் வாழை பற்றி தான் கவலை.
கலிங்கத்துப்பரணி:
- சிற்றிலக்கியங்களில் ஒன்றான கலிங்கத்துப் பரணியில் சயங்கொண்டார் நகைச்சுவை உணர்வு தோன்ற, பல பாடல்களைப் பாடியுள்ளார்.
- காணமுடியாத பேய்களை உருவாக்கி, உயிருள்ள உண்மைப்பிறவிகள் போல் நம் கண்முன்னே நடமாடவிட்டு நகைச்சுவைக்குரிய செயல்களை அவற்றிடையே காட்டியுள்ளார்.
காளமேகப்புலவர்:
- இரு பொருள் தருமாறு பாடுவதில் வல்லவர்.
- “நாங்கள் கவிராசர்கள்” என்று செருக்குடன் கூறிய புலவர்களின் செருக்கை அடக்கும்படி, கவி என்பதற்கு குரங்கு என்னும் பொருள் தோன்றுமாறு
வாலெங்கே? நீண்டுஎழுந்த வல்லுகி ரெங்கே? நாலு
காலெங்கே? ஊன்வடிந்த கண்ணெங்கே? – சாலப்
புவிராயர் போற்றும் புலவர்காள்! நீங்கள்
கவிராயர் என்றிருந்தக் கால்.எனும் பாடலைப் பாடினார்.பாரதிதாசன்:
- பாவேந்தர் பாரதிதாசன் மயிலின் கழுத்து நீண்டு இருப்பதாய் நகைச்சுவையுடன் பாடியுள்ளார்.
அயலான் வீட்டில் அறையில் நடப்பதை
எட்டிப் பார்க்கா திருப்ப தற்கே
இயற்கை யன்னை இப்பெண் கட்கெல்லாம்
குட்டைக் கழுத்தைக் கொடுத்தான்; உனக்கோ
கறையொன் றில்லாக் கலாப மயிலே!
நிமிர்ந்து நிற்க நீள் கழுத்து அளித்தான்.- பெண்களின் கழுத்து நீண்டிருந்தால், அண்டைவீடு அறையிலே நடப்பதை ஆர்வத்தோடு பார்ப்பார்களாம் மயில் அப்படிப் பார்காதாம்” அனக் கூறுகிறார்.
கவிமணி:
- நாஞ்சில் நாடு கவிஞர் கவிமணி தேசிய விநாயகம், “மருமக்கள் வழி மான்மியம்” என்னும் நகைச்சுவை நூலினை அளித்துள்ளார்.
- இந்நூல் “நகைச்சுவை களஞ்சியம்” எனப்படுக்கிறது.
We want lesson question answers.
ReplyDelete